பாடசாலைகளில் பணம் அறவிடுவதை உடனடியாக நிறுத்து..!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 20 July 2014
- Hits: 2408
"தற்போதைய காலங்களில் அரச பாடசாலைகளினுள் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுதல், பெற்றோரிடம் பலவகையான வேலைகளை சுமத்துதல் போன்ற அரச கல்வி முறைமையினை அதாவது இலவச சுதந்திர கல்வித் திட்டத்தினை பாதிக்கின்ற பல செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
சுதந்திர வைத்திய சேவையை வென்றெடுக்க அணிதிரள்வோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 20 July 2014
- Hits: 2424
அன்புக்குரிய தாய்மாரே, தந்தையரே, சகோதரர்களே, சகோதரிகளே!
நாடு முழுவதும் உள்ள வெளிநோயாளர் பிரிவில் வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் தமது முறை வரும்வரை காத்து நிற்பதை நாம் அன்றாடம் காண்கிறோம். அதிகாலையில் இருந்தே மருந்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் படுகின்ற துயரம் கொஞ்சநஞ்சமல்ல.
'தனியார் வைத்தியசாலைகள், சனல் நிலையங்கள் போதியளவு இருக்கும் போது நீங்கள் ஏன் அரச வைத்தியசாலையை நாடுகிறீர்கள்?"
பதில் தெளிவானது, பணம் இல்லாமையால் தானே? அதேபோல் உங்களுக்கு வைத்தியசாலையில் தரப்படும் மருந்து சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளில் சில அத்தியாவசிய மருந்துவகைகள் சிலவற்றை 'பார்மஸியில்" வாங்கும்படி அவர்கள் கூறுவது ஏன்? அவை வைத்தியசாலையில் இல்லாதது ஏன்?
இந்தப்பிரச்சினைக்கு நாம் அனைவரும் பதிலை தேடியாக வேண்டும். சுதந்திர வைத்திய சேவை நீடிக்கப்போவதில்லை. தற்போது எம்முன் இருப்பது அதனை வென்றெடுக்கும் போராட்டம்.
"பிறகு" சினிமா மிருக உணர்ச்சிக்குப பதில் மனித உணர்ச்சியை தட்டியெழுப்புகின்றது
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 July 2014
- Hits: 2640
பிரசன்ன விதானகே இயக்கிய "பிறகு" (சிங்களத்தில் "ஒப நத்துவா ஒப எக்கா" ஆங்கிலத்தில் "வித் யூ, வித்அவுட் யூ") கதையானது, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வெவ்வெறு மொழி பேசுகின்ற இருவர் இணைந்த வாழ்க்கையைச் சுற்றிய கதையாகும்.
சிங்களவரான சரத்சிறி மலையகத்தில் அடகுகடை நடத்துகின்றார். உணர்ச்சியை இனம் காண முடியாது விறைத்துப்போன வெறுமையுடன், மோட்டார் சைக்கிளும் அமெரிக்கா வகை மல்யுத்த சண்டையை பார்ப்பதையுமே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவன்.
சிறுவர் மீதான அதிகரிக்கும் பாலியல் வன்முறை எதைக் காட்டுகின்றது
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 July 2014
- Hits: 2657
இலங்கையில் 4 வருட காலத்திற்குள் சிறுவர் துஸ்பிரயோகம் சார்ந்து 2 இலட்சத்து 10 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
சமூகமே தன் குழந்தைளைக் குதறுகின்றது என்பதேயே இது எடுத்துக் காட்டுகின்றது. குற்றத்தில் ஈடுபடுபவர்களை மட்டும் குற்றவாளிகளாக குறுக்கிவிட முடியாது. மாறாக சமூகத் தன்மை சிதைந்து வருவதும், தன்னலம் அதிகரித்து வருவதையுயே எடுத்துக் காட்டுகின்றது.
சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னணி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 July 2014
- Hits: 2859
ருசிய ஏகாதிபத்தியத்தின் இராணுவ பொருளாதார செல்வாக்கு மண்டலமாக இருந்த உக்கிரைனை, மேற்கு ஏகாதிபத்தியங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்துகின்றன.
மக்களின் வாழ்வுக்கான போராட்டத்தினை பயன்படுத்தி கொண்டு மேற்கு ஏகாதிபத்தியங்கள், தேசியவாத நாசிச பாசிட்டுகளின் துணையுடன் அதிகாரத்தை கைப்பற்றியது முதல் ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்துகின்றது.
சிலி - பாசிச அரசியலுக்கு எதிரான போராட்டத்தின் 40வது வருடம்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 6
- Created: 17 July 2014
- Hits: 1450
எம்மிற் பலருக்கு 11 செப்டெம்பர் என்றால் நினைவில் வருவது 11 செப்டெம்பர் 2001 அன்று அல்கையிடா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், உலக முதலாளித்துவத்தினதும், அமெரிக்கப் பொருளாதார ஏகாதிபத்தியத்தினதும் குறியீடாகவிருந்த வோர்ல்ட் ரேட் சென்டர் (World trade center) மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனமான பெந்ரகோன் (Pentagon) மீதும் விமானத்தைச் செலுத்தி அவற்றை தகர்த்தது தான். இத்தாக்குதலில் பெந்ரகோன் (Pentagon) மிகக் குறைந்த பாதிப்புடன் தப்பியது. ஆனால் வேர்ல்ட் இரெட் சென்ட்ர் (World trade center) முற்றாக அழிந்தது. இந்நடவடிக்கையில் மொத்தமாக 2986 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இதைவிட பலமடங்கு அழிவு 40 வருடங்களுக்கு முன், 11 செப்டெம்பர் 1973இல் அமெரிக்க அரசின் ஜனாதிபதியாக இருந்த நிக்ஸனின் தலைமையில் அவரது அரசின் பாதுகாப்பு செயலாளராகவிருந்த ஹென்றிக் கிஸ்ஸிங்கரால் சிலி நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.
இனப்பிரச்சனைக்கான தீர்வும் - சாத்தியப்பாடு பற்றி சமவுரிமை இயக்கம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 17 July 2014
- Hits: 1218
அரசு மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பது தொடர்பாக அதிருப்தியும், அவநம்பிக்கையும் தொடருகின்றது. மறுபக்கம் அலட்சியம், புறக்கணிப்பு, அக்கறையின்மை காணப்படுகின்றது.
தனித்தனியாக போராடுவதோ, அதிலிருந்து ஒதுங்கி இருப்பதோ தீர்வுகளை காண்பதற்கான பாதையுமில்லை.
இதிலிருந்து மீள்வதற்கும், தீர்வுகளை காண்பதற்குமான வழி என்ன? மக்கள் இனம் மொழி மதம் சாதி கடந்து தமக்கு இடையில் ஒன்றிணைந்து வாழ்வதன் மூலமே, தமக்கு இடையிலான இனப் பிரச்சiனைக்குத் தீர்வு காணமுடியும். இது தான் ஒரேயொரு வழி.
இலங்கை அகதிக்கு சாதி அடையாளம் கொடுக்கும் இந்துத்துவ மோடி-ஜெயலலிதா அரசுகள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 16 July 2014
- Hits: 2463
இந்தியாவில் புத்தூர் மற்றும் சுல்லியாவில் வாழ்ந்து வரும் 926 இலங்கை அகதி குடும்பங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாம்!
இப்படி இலங்கை அகதிக்கு சாதி அடையாளம் கொடுக்கும் இந்திய அரசு தான் இலங்கையில் இன வேறுபாட்டை நீக்கி நல்லாட்சியை அமைக்க உதவுமென்று கூறி, மக்களை கனவுலகில் வாழக் கோருகின்றது தமிழ் இனவாதம்.
வெற்றிகரமாக நிறைவேறிய சமவுரிமை மாநாடு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 15 July 2014
- Hits: 1426
சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை இன்று (15-07-2014) கொழும்பில் நடாத்தியது.
கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில், நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்தும் இடதுசாரிக்கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திசீவிகள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் களப்பணியாற்றும் தோழர்களும் பங்குகொண்டனர். மாநாடு நடைபெற்ற கொழும்பு பொதுநூலக வளாகம் முழுவதும் இன, மத வாதத்துக்கு எதிரான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் முக்கிய நகரங்களின் நடத்தப்பட்ட "மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற பதாதையில் மக்கள் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராகக் கையெழுத்திட்டிருந்தனர். அப்பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பீரிஸ்- சுஸ்மா சந்திப்பு, வைகோ அதிர்ச்சியாம்! வை.கோ மனநோய் ஆஸ்பத்திரியில்?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 15 July 2014
- Hits: 2505
பீரிஸ்- சுஸ்மா சந்திப்பு அதிர்ச்சி தருவதாக கூறி, மோடிக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளாராம். இந்த அரசியல் மோசடி தான் அதிர்ச்சியளிக்கின்றது.
இதேபோன்று 2009 மே மாதம் இந்திய தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வென்று புலியை பாதுகாக்கும் என்று கூறி, பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை பலி கொண்ட சதிக்கு வைகோ தலைமை தாங்கிய உண்மை தான், அதிர்ச்சி அளிக்கின்றது.