CHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 November 2013
- Hits: 2441
CHOGM அல்லது பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடக்கவிருக்கின்றது. இதற்காக முழு நாடும் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மாநாடு முடிந்த பின்னர் நாட்டு மக்கள் அனைவரினதும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று அரசாங்கம் கூறுகின்றது. அது உண்மைதானா? பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது இருமடங்காகுமா? இது குறித்து நாங்கள் ஆழமாகாச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால்? - மார்க்சியம் - 04
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
- Created: 07 November 2013
- Hits: 2408
மனிதர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களைப் பெறுவதற்கான மனித உழைப்புக்குள்ளும், நுகர்வுக்குமுள்ளுமான முரண்பாடுகள் பற்றி முரணற்ற வகையில் விளக்குகின்றது மார்க்சியம். உழைப்பு மற்றும் நுகர்வில் இருந்து மனிதனை அந்நியமாக்கும் முரண்பாடுகள், மனித உறவுகளை வர்க்கரீதியான உறவாக்குகின்றது. மனிதனுக்கு எதிரான இந்த தனிவுடமை சமூக அமைப்பை, மார்க்சியம் தலைகீழாகப் புரட்டிக் காட்டுகின்றது. சாராம்சத்தில் மனித வாழ்விற்கான வர்க்கப் போராட்டமாகவே மனித வாழ்வு இருப்பதை மார்க்சியம் எடுத்துக் காட்டுவதால், மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமாக இருக்கின்றது. மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமே ஒழிய, வெறும் அறிவு சார்ந்த தத்துவமல்ல. வர்க்கப் போராட்டத்தின் மீதான இயங்கியல் தான் மார்க்சியம். வர்க்கங்களற்ற சமுதாயத்தை படைக்கும் போராட்டமாகவே வாழ்வுக்கான மனிதப்போராட்டம் இருப்பதை, சமூக விஞ்ஞானமான மார்க்சியம் முரணற்ற வகையில் முன்வைத்து அமைப்பாக்கி இருக்கின்றது.
பொதுநலவாய மாநாடு தமிழீழ மாநாடா?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 05 November 2013
- Hits: 6845
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு தமிழ்மக்களுக்கு குரல் கொடுக்கும் மாநாடாக அமைய வேண்டும் எனும் பாங்கில் இருந்து, தேசிய-சர்வதேசியத்தின் தமிழ் உணர்வாள சக்திகள் பற்பல பிரச்சாரப் பிரயத்தனங்களைச் செய்கின்றன.
தமிழ்நாட்டில் தியாகு ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதம், அவரை சாகாமலே காப்பாற்றிற்று. தவிரவும் ஓரிருவரை தீக்குளிக்கவும் வழிவகுத்தது. இப்போ எல்லோருடைய குவிமையக் குரலானது இந்தியப் பிரதமர் வருகை பற்றியதாகியதுடன், அதனூடே மாபெரும் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளன.
ஆயுதத்தைப் போட்டு, இன்னொருவர் கைது!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 November 2013
- Hits: 2211
காலி, போகஹகொட பகுதியில் மேலும் ஒரு இளைஞர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். போகஹகொட சுகாதார மற்றும் சூழல் பாதுகாப்புக் கமிட்டியின் முக்கிய செயற்பாட்டாளரான நுவன் சமீர என்பவரே நேற்று இரவு 11.00 மணியளவில் கைது செய்யப்பட்டவராவார்.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அணிதிரள்வோம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 November 2013
- Hits: 2277
தமக்கெதிரான கருத்துக்களைக் கூறுபவர்கள் அடக்குமுறை செய்யப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதாக சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர முதலிகே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
"30ம் திகதி ஊடக அமைப்புக்களால் நடத்தப்பட்ட ஊடக நிக்ழவொன்றின் போது திடீரென அங்கு நுழைந்த பொலிஸார் அங்கிருந்த ஐ.எப்.ஜே. அமைப்பைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்களை பலவந்தமாக இழுத்துச் சென்றுள்ளனர். அக்டோபர் 31ம் திகதி மட்டகளப்பிலிருந்து வெளிவரும் @வார உரைகள்" பத்திரிகையின் ஆசிரியர் எம்.ஐ. ரஹ்மத்துல்லா பொய்க் குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தை மீறுபவர்கள் யார்? மக்களுக்கு எதிரானவர்கள் யார்?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 November 2013
- Hits: 2268
தோழர் மனுவேல் 10 வருடங்களுக்கு மேல் பல்வேறு சமூக பிரச்சினைக்களுக்காக உழைக்கும் மக்களுடனும், ஒடுக்கப்படும் மக்களுடனும், மாணவர்களுடனும் சேர்ந்து பலதரப்பட்ட ஜனநாயகவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இவர் சட்ட கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து மாணவர் பிரச்சினைகளுக்காக முழுவீச்சாக “பொதுநலமாணவர் எழுச்சி இயக்கத்தில்” தன்னை இணைத்துக் கொண்டு கல்லூரி, பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளை, மாணவர் தற்கொலை, மாணவிகளின் மீதான பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்சினைகளுக்காக போராடி வருபவர் மீது இந்த அரசும் அதன் ஏவல் ஆட்களான காவல் துறையும் தொடர்ச்சியாக, பல பொய் வழக்குகளை போட்டு மக்களிடம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறது.
NGOக்களும் சுயநிர்ணய உரிமைகளும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 04 November 2013
- Hits: 3568
கடந்த மாதம் செப்டம்பர் 23ம் திகதி அன்று Brussel நகரில் யூரோப்பியன் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள போல்கென்றி ஸ்பாக் கட்டிடத்தில் (7வது மாடி BLOCK: C) அறை எண் 50-ல் IBON International என்ற சர்வதேசிய NGO (பிலிப்பைன்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட) அமைப்பினரால் ஜனநாயகம், சுயநிர்ணயம் மற்றும் மக்கள் விடுதலை என்ற தலைப்பில் ஒரு அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
பல்வேறு அரசு சார நிறுவனங்களும் (NGO) இந்நிகழ்வுக்கு நிதி உதவி வழங்கிய அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தன. IBON அமைப்பே அழைப்பிதழையும் நிகழ்ச்சி நிரலையும் தொகுத்திருந்தது.
சென்று வா தாயே, ஒரு நாள் பகை முடிப்போம்!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 01 November 2013
- Hits: 4081
இசைப்பிரியா பிணம் தின்னும் கழுகளால் சிதைக்கப்பட்டாள். பலநாள் தூக்கமின்றி பசியாலும், பயத்தாலும் பதைதைத்து வந்தவளை இலங்கையின் இனவெறி இராணுவம் இரத்தம் குடித்து கொலை செய்திருக்கிறது. நிற்பதற்கு கூட முடியாமல் நிலைதடுமாறி வந்தவளை கட்டி வைத்து அந்த கயவர்கள் கதை முடித்திருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் என எத்தனையோ ஆயிரம் தமிழ்மக்கள் புதைந்த அந்த கடற்கரை மண்ணில் கானம் பல இசைத்த அந்த பாட்டுக்குயிலின் கடைசிமூச்சை பறித்திருக்கிறார்கள்.
தம்புள்ள அம்மன் கோயில் இடிப்பும், இரண்டு செய்திகளும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 31 October 2013
- Hits: 3137
தம்புள்ள அம்மன் ஆலயம் மகிந்துவின் சிங்கள, பெளத்த இனவாத அரசினால் இடிக்கப்பட்டிருக்கிறது. பெளத்த புனிதபிரதேசத்திற்கு இக்கோயில் அமைந்திருக்கும் இடம் தேவை என்று காரணம் காட்டி இடித்திருக்கிறார்கள். அத்துடன் அக்கோவிலைச் சுற்றி வாழும் நாற்பது தமிழ் குடும்பங்களும் வெளியேற வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். நாட்டை கொள்ளையடித்து மக்களை வறுமைக்கு தள்ளும் இலங்கையின் ஆட்சியாளர்கள் மக்களை ஒருவரோடு ஒருவர் பகை கொள்ள வைப்பதற்காக இன, மதக்கலவரங்களை உண்டாக்குகிறார்கள். வெள்ளைக்காரர்களிற்கு வால்பிடித்து, மதம் மாறி தங்களது பெயரைக் கூட ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தனா, சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா என்று வைத்துக் கொண்டவர்கள் தான் காற்று திசை மாறிய போது மறுபடி மதம் மாறி சிங்கள மொழிக்காகவும், பெளத்த மதத்திற்காகவும் உயிரை விடப் போவதாக ஊளையிட்டார்கள்.
சிரிப்பு- கண்ணீர் மற்றும் செயற்படுதல்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 6
- Created: 31 October 2013
- Hits: 1093
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் முடிந்துவிட்டன. தேர்தலின் சூடு தணிந்து தேர்தல் முடிவுகள் குறித்து வாத விவாதங்களும் ஓய்ந்து விட்டுள்ளன. என்றாலும் நாங்கள் தொடர்ந்தும் தேர்தலைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் 60 வீதமான வாக்குகளைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.