யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் உரிமை மதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும்!!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 November 2013
- Hits: 2485
வடக்குக் கிழக்கில் கொடிய யுத்தத்தில் பலியாகிப்போன தமது உறவுகள் அயலவர்கள் நண்பர்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்தி நினைவுகூர முடியாத வண்ணம் மக்களது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. போராளிகளையும் கொடிய யுத்தத்திற்கு பலியாகிப்போன பொதுமக்களையும் நினைவுகூர்ந்து மத வழிபாட்டுத்தலங்களில் தீபாராதனை காட்ட முடியாது. மணிகளின் ஓசை எழுப்ப முடியாது. மக்கள் கூட்டமாக வழிபட முடியாது. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்று கூடி தீபங்கள் ஏற்ற முடியாதவாறு வடக்கு கிழக்கில் ஒரு இராணுவ அடக்குமுறை ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
மரணித்த - காணாமல் போன உறவுகளை நினைவு கூருவதற்க்கான உரிமையினை நிலைநாட்டுவோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 November 2013
- Hits: 2300
2009 இல் புலிகள் ஸ்தாபன ரீதியாக அழிக்கப்பட்ட பின்னான அரசியல் சூழல், பண்பு ரீதியாகவும் அளவு ரீதியாகவும் பல மாற்றங்களை கண்டிருக்கின்றது. மக்கள் தங்கள் வாழ்வு சார்ந்து, தன்னியல்பான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணமல்போனவர்களை மையப்படுத்தியும் மரணித்த தங்கள் உறவுகளின் நினைவுகளை முன்னிறுத்தியும், உணர்வுபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது அரசியல் ரீதியாக மனிதவுரிமைகள் சார்ந்தாகவும், உரிமைகள் சார்ந்தாகவும் வெளிப்படுகின்றது. அரசியல் ரீதியாக நிலவும் சமூக கண்ணோட்டத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.
ஜெயபாலன் கைதிற்கு முன்னிலை சோசலிச கட்சி கண்டனம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 23 November 2013
- Hits: 1008
பிரபல கவிஞர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த துமிந்த நாகமுவ, ''தமிழ் கவிஞர்கள் மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கும் ஜெயபாலனது கவிதைகள் சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்யப்படுவதால், அவர் சிங்கள கவிஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பபை பெற்ற கவிஞராகத் திகழ்கிறார். அவர் கைது செய்யப்பட்டமை மற்றும் அவரை நாடுகடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நாங்கள் வன்மையாக் கண்டிக்கிறோம்.
"Eelam Uncle" கமரோன் வாழ்க!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 23 November 2013
- Hits: 2458
அமைச்சரே, பக்கத்து நாட்டு மன்னனிற்கு புறா மூலம் தூது அனுப்பினோமே, மறுமொழி வந்ததா? வந்தது மன்னரே, புறாக்கறி நல்லாயிருந்ததாம்.
தூதுகள், மாநாடுகள் எல்லாம் அன்றிலிருந்து இன்று வரை இப்படி பைத்தியக்காரத்தனமாகத் தான் இருக்கின்றன. வாங்குவது, விற்பது, நாட்டை அடகு வைப்பது வரை முன் கூட்டியே பேசி முடித்து விட்டு பின் பாராளுமன்றத்திலும், மாநாடுகளிலும் பகிரங்கமாக பேசி முடிவு எடுக்கிறோம் என்று படம் காட்டுவார்கள். அவர்களது சண்டையும் முன் கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்டு இருக்கும். கமரோன் இலங்கை அரசை கேள்வி கேட்பதும், மகிந்து நீங்க மட்டும் ரொம்ப நல்லவங்களா என்று எதிர்த்து மீசையை முறுக்குவதும் விஜயகாந்து காற்றிலே பறந்து, பறந்து சண்டை போடும் போது புல்லரிப்பது போல புல்லரிக்க வைக்கிறது. உலகில் தருமம் குன்றி அநீதி மேலோங்கும் போது நான் வருவேன் என்று அய்யங்கார்களின் கொலைத்தெய்வம் கண்ணன் வெறுவாய் மலர்ந்தது போல இப்போது கமரோன் தமிழர்களிற்காக அவதாரம் எடுத்திருக்கிறாராம்.
லண்டனில் நிகழ்ந்த கார்த்திகை வீரர்கள் நாள் தினநிகழ்வு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 November 2013
- Hits: 2235
கடந்த ஞாயிறு லண்டனில் வெம்பிளியில் முன்னிலை சோசலிசக் கட்சியினரால் கார்த்திகை வீரர் தின நிகழ்வு நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான முன்னிலை சோசலிச கட்சியின் அங்கத்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பலர் உரையாற்றியதுடன் மறைந்த தமது தோழர்களின் தன்னலமற்ற மக்களின் விடுதலைக்கான அர்ப்பணிப்புக்களை நினைவு கூர்ந்தனர். இலங்கையிலிருந்து ஸ்கைப்பின் ஊடாக கலந்து கொண்ட கட்சியின் உறுப்பினர் தோழர் அஜத் குமார நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார்.
இவை... கதையல்ல..... நிஜம்.....
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 November 2013
- Hits: 2609
இப்ப கொஞ்சக் காலமாக என்ரை காதிலே அடிபடுகின்ற கதைகளிலே மிக முக்கியமாக அடிபடுவது இந்தப் புலம்பெயர் நாடுகளிலே வாழும் எம் இளம் சமூகத்தினர் மத்தியியில் நடைபெறுகின்ற விவாகரத்துக்கள் பற்றியே.
தமிழர்கள் செய்யும் இன்பமான விழாக்களாய் இருந்தாலென்ன, துன்பியல் நிகழ்வுகளாய் இருந்தாலென்ன, அங்கே கூடிக்கதைக்கும் கதைகளில் இந்த விடையம் மிக முக்கியத்தவம் பெற்றிருப்பதை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் இந்த இளவயதினர் செய்கின்ற விவாகரத்துக்களின் விகிதாசாரம் மிகக்கூடியதாகவும் அதிவேகமாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 24வது நினைவு நிகழ்வு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 November 2013
- Hits: 2327
23.11.2013 சனிக்கிழமை பி.ப.05 மணிக்கு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம் (121, ஹெம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை)
யாழ்.பல்கலைக்கழகம் ஒரு மாதம் மூடப்பட்டதை வெறுப்போடு கண்டிக்கின்றோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 20 November 2013
- Hits: 2378
2013 நவம்பர் 11ம் திகதியிலிருந்து டிசம்பர் 02ம் திகதி வரை யாழ். பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு பாதுகாப்புப்பிரிவுகளின் வற்புறுத்தலின் பேரில் பல்கலைக்கழக உயரதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தில் இறந்த தமது உறவுகளை நினைவு கூர்தலை தவிர்ப்பது தான் இதன் நோக்கமாக இருக்கின்றது. கடந்த வருடத்திலும் கூட இவ்வாறான சம்பவமொன்று நடந்தது. மாவீரர் தினத்திற்குச் சமமாக யாழ்.பல்கலை மாணவர்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றிற்குள் திடீரென நுழைந்த பாதுகாப்பு படையினர் மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மாணவர் தலைவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இம்முறையும் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.
மன்மோகன்சிங்கு வராது. ஆனால் அசோக் லேலான்ட் வரும், பஜாஜ் வரும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 18 November 2013
- Hits: 3144
உலகம் ஒரு நாடகமேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்றான் சேக்ஸ்பியர். தமிழ் இனவெறி அரசியலோ தமிழ்படம் மாதிரி. பயங்கர திருப்பங்களுடன் முழம், முழமாக உங்கள் காதில் பூ வைப்பார்கள். மன்மோகன்சிங் பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளாதது குறித்தும் இப்படியான கதைகளைத் தான் தமிழ் இனவெறி கும்பல்கள் அவிழ்த்து விடுகின்றன. மன்மோகன்சிங் போகாததால் இலங்கைக்கு பெரிய அவமானம் என்றும், இந்தியாவில் தேர்தல் வர இருப்பதால் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் போழிப்புரை எழுதுகிறார்கள்.
அன்னையர் இட்ட தீ மூழ்க மூழ்கவே!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 16 November 2013
- Hits: 3261
ஓலங்கள், அடிவயிற்றில் இருந்து எழுந்து தொண்டையை அடைக்கும் ஓலங்கள். அழுதழுது உடல் வற்றி, உயிர் வற்றி போனாலும் மார்பிலும், தோளிலும் போட்டு சீராட்டிய தம் கண்மணிகளை நினைத்தவுடன் விம்மி வெடித்து எழும் ஓலங்கள். மடியில் இருந்து மழலை பொழிந்த மகனை, மகளை தேடி மார்பில் அடித்து மன்றாடும் ஓலங்கள். தெருவில் இருந்து புழுதி அளைந்தவர் புகை போல மறைந்ததை எண்ணி ஏங்கும் ஓலங்கள். ஒளிநகை ஊறும் இதழ் உகந்து முத்தம் தந்த தம் குழந்தைகளை, சின்னஞ்சிறு குஞ்சுகளை கூவி அழைக்கும் ஓலங்கள்.
எனது இரண்டு அண்ணன்களை இழந்து விட்டேன், இருக்கும் ஒரு அண்ணனையாவது கண்ணில் காட்டுங்கள் என்று கதறி அழுகின்றாள் சின்னஞ்சிறு குழந்தை ஒன்று. உண்பதில்லை, உறங்குவதில்லை என் கணவனை மீட்டு தாருங்கள் என்று துயரம் தாங்காமல் தரையில் விழுகிறாள் துணைவி ஒருத்தி. தளிர்நடை போட்டு தத்தி தத்தி நடந்தவன் போன இடம் எங்கே என்று அடி எடுத்து வைக்க முடியா முதுமையிலும் அங்கு வந்து அன்புமகனை தேடுகிறார் கிழவர் ஒருவர்.