யாழில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம் (படங்கள்)
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
15 Jan 2013
- Hits: 910
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்த கோரியும் சம உரிமை இயக்கத்தினரால் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது.
இந்த கையெழுத்து போராட்டம் இன்று (21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் யாழ் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.
அதேவேளை இன்று (15) காலை 8.45 மணியளவில் யாழ். பண்ணை தனியார் பஸ் நிலையத்துக்கு அருகில் சம உரிமை இயக்கத்தினரின் வாகனம் தரித்து நின்ற பொழுது இரு மோட்டார் சைக்கிளில்களில் வந்த நான்கு இனம் தெரியாத நபர்கள் கல் வீசி வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார்கள்.
(அத தெரண நிருபர்)