இலங்கையின் புதிய சர்வ வல்லமை படைத்த கலியுக அரசனால் வழங்கப்பட்ட தீர்ப்பு!!!
- Details
- Parent Category: ROOT
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
05 Mar 2012
- Hits: 2177
அரசியலில் எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது என்பார்கள். அதற்கு உதரணம் தான் மகிந்த, பொன்சேகா இருவரும். இவர்களின் அன்றைய நட்புக்கு காரணம் தமிழ் மக்களை அழிப்பது. இன்றைய பகைமைக்கு காரணம் எந்த வல்லரசின் பக்கம் சார்ந்து இலங்கை மக்களை சுரண்டுவது என்பதே. மிகிந்தவே சீனாவின் கைப் பொம்மையாக செயற்படும் நிலையில் சரத்தோ மேற்கு நாடுகளின் பெம்மையாக செயற்பட ஆரம்பித்தார். இதன் விளைவே சரத்தின் இந்த நிலைக்கு காரணம். அன்று தமிழர்களை அழிப்பதற்கு இருவரும் கூட்டாக நின்று சிங்கள தேசியத்தை முன்னிறுத்தி சிங்கள மக்களை சுரண்டி வாழ்ந்தனர். யுத்தம் முடிவிற்கு வந்த பிற்பாடு ஒட்டு மொத்த சுரண்டலை நடத்த ஏற்பட்ட போட்டியின் விளைவே இது. இங்கு மக்களை யார் பார்க்கிறார்கள். தமது கல்லாப் பெட்டியை அல்லவா பார்க்கிறார்கள்.