386 நாட்களாக தொடர்ந்த போராட்டம் புதிய தொடக்கத்தை உறுதி செய்துள்ளது!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2016
-
03 Dec 2016
- Hits: 433
இலங்கையில் ஜனநாயகத்தை மீள உறுதி செய்வதற்காக கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே தொடர்ந்து 386 நாட்களாக இடம் பெற்ற சத்தியாககிரக போராட்டம் இன்று (03-12-2016) தற்காலிகமாக நிறைவடைந்தது. குமார் குணரத்தினத்தின் விடுதலை, பிரஜாவுரிமை மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை என பல ஜனநாயக கோரிக்கைகளை முன்வைத்து இந்த சத்தியாககிரக போராட்டம் தொடங்கப்பட்டது. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் 386 நாட்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த போராட்டம், ஒரு புதிய கட்டத்தை தொடங்க உறுதியை அளித்துள்ளது.
இன்று குமார் குணரத்தினம் உட்பட இந்த ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட ஜனநாயகவாதிகள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஜனநாயகத்தை உறுதி செய்யும் போராட்டம் தொடந்து முன்னெடுத்து செல்லப்படுவதனை உறுதி எடுத்துக்கொண்டனர். இந்த போராட்டத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக முஸ்லிம் சகோதரர்களுடைய ஆதரவு, உதவிகள் அளப்பரியது.