குமார் குணரத்தினத்தினத்தை எதிர்வரும் 24ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2016
-
14 Mar 2016
- Hits: 452
இன்று கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தின் மீதான குடிவரவு விதியினை மீறியதான சோடிக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இன்று கேகாலை உதவி பொலிஸ் அத்தியகட்சககர் மீதான, குமாரின் கைது தொடர்பான விசாரணை இன்று முடிவுக்கு வந்திருந்தது.
எதிர்வரும் 24ம் திகதி எதிர்த்தரப்பு சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டு அது வரை குமார் குணரத்தினத்தினத்தின் விளக்க மறியலை நீடிப்பதாக நீதிபதி பிரசன்ன அல்விஸ் தெரிவித்திருந்தார்.