பண்டாரவளையில் கையெழுத்து போராட்டம்!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2016
-
02 Jun 2016
- Hits: 350
இன்று 02-06-2016, பண்டாரவளை நகரத்தில் புதிய ஆட்சியாளர்கள் தேர்தல் கால மேடைகளில் உறுதி அளித்த ஜனநாயக உரிமைகளை மக்களிற்கு உறுதிப்படுத்துமாறு கோரி கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. உறுதி அளித்த ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கு மாறாக மைத்திரி - ரணில் அரசு; மகிந்த அரசு போல் ஆட்சியினை தொடர முயற்சிக்கின்றது. மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த, இந்த அரசிற்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
"சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய், "அடக்குமுறை சட்டங்களை சுருட்டிக் கொள்" மற்றும் "குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக்கொள்" ஆகிய கோசங்களை கொண்ட கையெழுத்து பதாகைகளின் மேல் பெரும் அளவிலான மக்கள் தமது கையெழுத்தினை வைத்து அரசிற்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.