Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தமது காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டு முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் தாம் குடியிருந்த காலத்தில் தம்மால் கட்டப்பட்ட முருகன் கோவில் முன்றலில் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கிய பின்பு அவர்களால் வெளியேற முடியாதவாறு பாதையை மூடிவிட அரசாங்க பாதுகாப்புப் பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதனை வன்மையாகக் கண்டிக்கும் சம உரிமை இயக்கம் அவர்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றது.

முல்லைதீவு கேப்பாபுலவில் போராடும் மக்களுடன் சேர்ந்து இயங்கிவரும் சமவுரிமை இயக்கத்தின், மட்டக்களப்பு, கேகாலை, அனுராதபுரம், கம்பகா, நீர்கொழும்பு போன்ற பிரதேசத்தின் தோழர்கள் மற்றும் போராடும் மக்களில் ஒருபகுதியினர்- அரச படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் நுழைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

இலங்கையில் பல மாவட்டங்களில் இயற்கை அனர்த்தம் கொண்டதனால் பெருமழையானது வெள்ளப்பெருக்கு, ஆறுகள் கரை மீறுவது, மண்சரிவு, மனித தொடர்புகள் துண்டிப்பு, பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடைப்படல், குடிமனைகள் வெள்ளத்தில் மூழ்கிப்போவது என பல வழிகளில் சூறையாடி வருகின்றது. 

இனம், மதம், சாதி, வர்க்கம்.. என்று எல்லா அடையாளங்களையும் கடந்த, மனித அவலம் இது.

ஏழை எளிய மக்கள் துணையின்றி, துயரத்தைச் சுமக்கின்றனர். பல உயிர்கள் இழக்கப்பட்டு இன்னும் பலபேர் காணாமல் போயுள்ளனர். 

மோசமான காலநிலை காரணமாக வெள்ளி முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றமையால் பெரும்பாலான தென்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை 122 பேர் இறந்து போயள்ளனர். 99 பேரை காணவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மையான இழப்பு அதிகமாக இருக்கும் என தெரியவருகின்றது.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானானந்த தேரர்,  மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் உட்பட நால்வரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது  நீதிமன்ற கட்டளை கிழித்தெறியப்பட்டது தொடர்பிலேயே இவர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று யாழ் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய நெடுஞ்சாலை அமைச்சருடன் வடமாகாணத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும், மீள்குடியேற்றத்திற்காக வட மாகாணத்தில் வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணத்திற்கு வெளியில் உள்ள பெருந்தோட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப கல்வி பிரச்சினைகள் பற்றிய திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு   

நுவரெலியா மாவட்ட தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் ஊவா, சபரகமுவ, தென் மாகாணங்களில் உள்ள தமிழ் மாணவர்கள் க.பொ.த. உஃத கல்வி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாட்டங்களில் உள்ள தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக மக்கள் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலொன்று எதிர்வரும் 28ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 மணிக்கு காவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

அனைவருக்கும் நுவரெலியா என்ற பெயரைக் கேட்டவுடன் நினைவில் வருவது சுத்தமான அழகிய பசுமையான இயற்கை வளங்கள் நிறைந்த தூய நீரினால் நிரம்பிய வனப்பான பிரதேசமாகும். அதைப்போலவே பறவைகளின் கீச்சிடும் ஒலிகளும் பல்வேறு மிருகங்களும் நிறையப் பெற்ற இயற்கைச் சூழலாகும். இவ்வாறான இயற்கை எழில் நிறைந்த பிரதேசமாக நுவரெலியா காணப்பட்ட போதும் அதற்குள்ளே மறைந்திருக்கும் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர  உட்பட 6 மாணவர் தலைவர்களுக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதிவான் லால் ரணசிங்க பண்டார இந்த உத்தரவை நேற்று  (19/5/2017) பிறப்பித்துள்ளார்.

சமவுரிமை இயக்கம், வடக்கு - கிழக்கு மக்கள் யுத்தத்தின் பின்னர் முகம்கொடுத்து வரும் பாரிய பிரச்சனைகள் குறித்து தென்னிலங்கை மக்களுக்கு பிரச்சாரப்படுத்தும் நோக்கத்தில் பல பிரச்சாரம் மற்றும் சத்தியாககிரக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. கடந்த மாதம் நுகேகொட மற்றும் கண்டியில் சத்தியாககிரக போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று (19/5/2017) அநுராதபுர நகரத்தில் ஒரு நாள் சத்தியாககிரக போராட்டம் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

கடந்த சில வருடங்களாக பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையின் கீழ் இலவசக் கல்வியை பாதுகாக்கவும் தனியார் பல்கலைக்கழகம் என ஆரம்பிக்கப்பட்டுள்ள திருட்டு பட்டக்கடைகளிற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

இன்று (17/05/2017) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒ;ன்றியம் மற்றும் மருத்துவ  மாணவர் நடவடிக்கை குழுவும் இணைந்து வரலாறு காணாத பாரிய போராட்டம் ஒன்றினை இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை பாதுகாக்கவும், மாலபேயில் அமைந்துள்ள திருட்டு பட்டம் வழங்கும் மருத்துவ கடையை மூடக்கோரியும் ஒழுங்கு செய்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பு தரப்பிலிருந்து நீதிமன்ற தடை பெறப்பட்டிருந்தது. தடையை மீறி மாணவர்கள் பேரணி முன்னேறியது. பேரணி கொழும்பு விகாரமா தேவி பூங்காவை அண்மித்ததும் கலகம் அடக்கும் படை, ராணுவம், பொலிஸ் மாணவர்கள் மீது பல தடைவை புகைக் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டதுடன் நீர்த்தாங்கி பிரயோகமும் இடம்பெற்றது.

சைட்டம் திருட்டு பட்டக்கடையை ரத்து செய்யுமாறும், கல்வியை தனியார்மயப்படுதலை நிறுத்துமாறும், பல்கலைக்கழக அனுமதியை அதிகரிக்குமாறும் வற்புறுத்தும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு நடைபயண பேரணி மீது மிலேச்ச காட்டுமிராண்டித்தன தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

சைட்டம் திருட்டு பட்டக்கடையை தடை செய்ய வற்புறுத்தி வருடக்கணக்கில் மாணவர் இயக்கங்கள், உழைக்கும் மக்கள் உட்பட பொதுமக்கள் அரசை வற்புறுத்தி வந்தாலும் முன்பிருந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் மக்களின் கருத்தை உதாசீனப்படுத்தி செயற்பட்டுவருகிறது. 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடாத்திய அரசியல் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் (30/04/2017) தோழர் அந்தோனிப்பிள்ளை ஆற்றிய உரை

வர்க்கம் என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது “கார்ல் மார்க்ஸ்” என்ற அறிஞரும் “கம்யூனிஸம்” என்ற சொல்லுமாகும். ஆனால் வர்க்கம் என்பது மனிதகுல வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் “வர்க்கம்” என்பதனை தெளிவாகப் புரியும்படி விளக்கி அதற்கான வரைவிலக்கணத்தை எழுத்தில் பதித்தவர்தான் தத்துவ வித்தகர்-பொதுவுடைமைத் தந்தை திரு கார்ல் மாக்ஸ் ஆகும்.

மனித வரலாற்றில் கூட்டு வாழ்க்கை முறை குலைந்த நாள் முதற் கொண்டே “வர்க்கம்” தோன்றி விட்டது. இன்று நாம் வாழும் வாழ்க்கை முறைமை காலத்திற்கு காலம் இந்த “வர்க்கம்” போராடி வந்ததின் விளைவாகும். 

அதனைத்தான் “ஒவ்வொரு போராட்டமும் வர்க்கப் போராட்டமே” என வலியுறுத்தியுள்ளார் கார்ல் மார்க்ஸ்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு 2012 ஏப்ரலில் நடந்தது. அந்நேரத்தில் எமக்கு எதிரான அடக்குமுறை நடந்தவண்ணம் இருந்தது. அப்போது லலித், குகன் சகோதரர்கள் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டிருந்தனர். மாநாடு நடக்கும் ஓரிரு தினங்களுக்கு முன் சகோதரர் குமார் குணரத்தினம் மற்றும் சகோதரி திமுதுவும் கடத்தப்பட்டதன் காரணமாக மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்ள முடியாமல் ஆக்கப்பட்டிருந்தது.

ஏனையோர் கட்சியை ஆரம்பிக்கும் வேலைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது. கடந்த சில வருடங்கள் கட்சியினுள் பலகருத்தாடல்கள் இடம்பெற்றன. இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்சித்தலைமை மட்டுமல்ல, உறுப்பினர்கள் எல்லோரும் போராடிப்பெற்ற வெற்றியின் மூலம் தான் இந்த இரண்டாவது மாநாடு மட்டும் நாங்கள் வந்திருக்கின்றோம்.

நம் நாட்டில் கடந்த 2015 சனவரி 8ந் திகதி முதல் சனநாயகம் மீட்கப்பட்டு குடிமக்களுக்கு சுதந்திர சுபீட்ச நல்வாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  2015 செப்டம்பர் முதல் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாடு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதாகவும் இவற்றைச் சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் அண்மையில் அறிக்கை விடுத்துள்ளனர்.  

பண பலம் - அரசியல் செல்வாக்கு – அரச அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட அறிவுப்புக்களும் ஆட்சியாளர்களின் உரைகளும் பொருந்துகிறதே ஒழிய குடிமக்களுக்கும் அதற்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாக நாட்டின் இன்றைய நடைமுறைகள் சிறிதளவேனும் வெளிப்படுத்தவில்லை.

கடந்த மே 1ம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் இடம்டபெற்ற சர்வதேச தொழிலானர் தின கூட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரத்தினம் ஆற்றிய உரையின் சாரம்சம் இது.

131 வருடங்களுக்கு முன் உழைக்கும் மக்கள் 8 மணித்தியால வேலை நாள் கேட்டு போராடினார்கள். 131 வருடங்களுக்கு பின் இன்று 10,12 மணித்தியால வேலை செய்ய கேட்கின்றனர். இரண்டு மூன்று தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

ஒப்பந்த, மேன்பவர், சமயாசமய முறைமைகளில் சுரண்டல் அதிகரித்துள்ளது. 8 மணித்தியால வேலையினால் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதுள்ளது. எடுக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை. பாடசாலைகளில்  2ம்  3ம் வகுப்புகளில் இருந்தே எதிர்கால உழைப்புக்கு தயாராக வேண்டியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE