Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சயிட்டத்துக்கெதிரான மாணவ மக்கள் அமைப்பினால் வவுனியாவில் நேற்று (27.09.2017 ) ஒழுங்குசெய்யப்பட்டிருந்த  மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கையின் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை தெரிவத்திருந்தனர்.

அங்கு பல்வேறு அமைப்புகள் தமது காட்டமான தமது எதிர்ப்புக்களை உரை வடிவிலும், ஆர்ப்பாட்ட  ஊர்வலத்தில் கலந்து கொண்டு “வேண்டாம் வேண்டாம் பட்டக் கடை” போன்ற சையிட்டத்துக்கு எதிரான பல கோசங்களினூடு வெளிப்படுத்தியிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை புகைப்படங்களிலும் உரையாற்றுகைகளின் ஒரு பகுதியை இங்கு காணொளியிலும் காணலாம்.

 

18.09.2017 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தை அகற்றக்கோரிய வழக்கு மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மயானத்தை அகற்றக்கோரி வழக்கு பதிவு செய்த வழக்கறிஞர் முன்வைத்த நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 04.06.2017 அன்று மல்லாகம் நீதிமன்றத்தால் 10 அடி உயரத்திற்கு சுற்று மதில் அமைத்து அதன் பின்னர் ஒரு வருடகாலத்திற்குள் GAS CHAMPER உடல்களை எரிப்பதற்கு நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஒரு வருடத்திற்குள் GAS CHAMPER பொருத்தப்படாவிட்டால் இவ் மயானத்தில் பிணம் எரிப்பது தடுத்து நிறுத்தப்படும். முக்கியமாக அப்பகுதியில் உள்ள மக்கள் அதை அனுமதித்தால் மட்டும் தான் மயானத்தை புனரமைக்க முடியும் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், புத்தூர் கலைமதி மக்கள் யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 17.09.2017 இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கலைமதி மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்பை சத்தியாக்கிரக போராட்டமூடாக வலியுறுத்தி வருகின்றமையை சுட்டிக்காட்டிய நீதிபதி மக்களின் எதிர்ப்பையும் மீறி புனரமைப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான விவகாரத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரையும் யாழ்.மேல் நீதிமன்றுக்கு வருமாறு நீதிபதி இளஞ்செழியன் அச்சுவேலிப் பொலிஸார், கிராம சேவகர் ஊடாக தெரிவித்திருந்தார்.

யாழ். ரயில் நிலையம் மற்றும் பேரூந்து நிலையம்:

காலை 6.55 . 15.10.2017 

எங்கும் சிங்கள மொழிக் குரல்கள். சிங்கள மொழிபேசும் சகோதர சகோதரிகள் நாகரீக உடைகளின் தமது லேப்டாப் பைகளை அழகாகத் தம்  தோழ்களில் தொங்க விட்டபடி ஓட்டோ ரிக்ஸாகளில் ஏறி நகரின் பிரபல நட்சத்திர விடுதிகளுக் சொல்லுமாறு பணிகின்றனர். இவர்கள் அனைவரும் தெற்கின் புத்தி சீவிகளும் கலைஞ்யார்களுமாம். இவர்கள் திரைப்படம், கவிதை, அரசியல், சமூகவியல் , மனித உரிமைகள் போன்ற அனைத்து  வியங்களிலும் வித்தகர்களாம். அதைவிட அவர்களிற் பலர் இலங்கையின் பிரபலமான பத்திரிகை நிருபர்களும், பத்தி எழுத்தாளர்களுமாம் .  யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவுக்காக சில நாட்கள் யாழில் உள்ள நட்சத்திர விடுதிகளில் முகாமிடவுள்ளனராம். 

யாழ்.பஸ் நிலையம் :

காலை 8.00. 

மூன்று சிறுவாகனங்கள் யாழ். பஸ் நிலையத்தை சுற்றி  வருகின்றன. தாம் தேடியது காணக்கிடைக்காதவர்களாக, ஆட்டோ ஓட்டுநர்களிடம் புத்தூர் மயானதுக்கு எதிரான  போராட்டம் எங்கு நடக்கிறதென விசாரிக்கின்றனர். விசாரணையில் எந்தவொரு சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.   அவசர அவசரமாக யாழில். உள்ள தமக்கு தெரிந்தவர்களுடன் தொலைபேசி ஊடே தொடர்பு கொள்கின்றனர். இவர்களும் தெற்கில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், இவர்கள் பல்லினத்தவர்கள். இடதுசாரிக் காட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள். பூத்தூரில் உள்ள கலைமதி கிராமமக்கள் அவர்களில் ஊரின் நடுவில் இருக்கும் மயானத்தை அகற்ற போராடுகின்றனர். தமிழ் தலைமைகள், சமுக தலைவர்கள், மாகாண சபை அதிகார வர்க்கங்கள்   மக்களின்  கோரிக்கைகளை கண்டு கொள்ளாததனால், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்றை யாழ் . மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண சபைக்கு முன்பாக நாடாத்த வந்துள்ளனர்.

குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி இன்றுயாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாக(15.10.2017)போராட்டம். 

අද (15.10.2017) උතුරු පළාත් සභාව ඉදිරිපිට උද්ඝෝෂණය. නේවාසික ප්රදේශයේ ආදාහනාගාරය එරෙහිව විරෝධය. පුතූර් බටහිර ;යාපනය.අද පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ මහ ලේකම් සේනාධීර ගුණතිලක මහතා ආදාහනාගාරයට එරෙහිව සටන් කරන ජනතාව වෙත ගොස් තිබේ. සම අයිතිය ව්යාපාරය සහෝදරවරුන්ට ද ආදාහනාගාරය එරෙහි සටන සඳහා සහය දක්වයි. 

Today (15.10.2017),Protest in front of the Northern Provincial Council and Jaffna Disrict secretariet at Jaffna, against open wood-based crematorium in residential areas in Puthoor West, Jaffna . Frontline Socialist Party(FLSP) general secretary Seenadera Gunathilaka and Movement for equel rights(MER) leaders visited the people who are fighting against the crematorium. and more than 6 leftish party leders from hole Sri Lanka also gave their support to the people's struggle against the crematorium.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாகவும் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி புத்தூர் கலைமதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய கவனயீர்ப்பு போராட்டம். 

ஏற்பாடு :- சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு 

 

கலந்துக்கொண்ட கட்சிகள் அமைப்புகள் வருமாறு :

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி , முன்னிலை சோசலிசக்கட்சி , சமவுரிமை இயக்கம் -இலங்கை, சோசலிசக்கட்சி, ஜக்கிய சோசலிசக்கட்சி ,  சுயாதின இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு,  கலைமதி சன சமூக நிலையம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு,  புதிய ஜனநாயக இளைஞர் முன்ணனி, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் ஆகியவையாகும்.

காணொளிகளுக்கு உள்ளே செல்க

மருத்துவக் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுக்காக இந்தியா முழுவதும் பொதுத் தரப்படுத்தல் பரீட்சையை (NEET) இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. திறமை இருந்தும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து இப் பரீட்சைக்காகப் பிரத்தியேக வகுப்புக்களில் படிக்க முடியாத ஏழை மாணவர்கள் சித்தியடைய முடியாதுள்ளது. தமிழ்நாடு அரியலூர் மாணவி அனிதா 12 ஆம் வகுப்பு (Plus 2) தேர்வில் 1200 க்கு 1176 புள்ளிகள் பெற்றும் இந் நீட் நுளைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். எமது நாட்டில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆவதைச் சைட்டம் இல்லாமல் செய்திருப்பதைப் போல, இந்திய அரசின் நீட் தேர்வு அறிமுகத்தால் இந்திய ஏழை, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

1977 வரை இலங்கையில் அரசியலில், அரச நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்றன. ஆனால் பெரும்பாலும் அவற்றை விசாரித்துத் தண்டிக்கும் வல்லமையுள்ள ஒரு நீதி நிர்வாகம் செயற்பட்டுக் கொண்டிருந்தது. 1977ல் புதிய தாராளவாதப் பொருளாதாரத் திட்டங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஊழல்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. அவற்றை பரவலாக்கப்படுத்துவதற்காக நீதித்துறையை அரசியல் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல் நீதித்துறை தனது சுயாதீனத்தை இழந்தது.  “நீதி”  நிதிக்கும்,  அநீதிக்கும், அராஜகத்திற்கும் சேவகம் செய்யத் தொடங்கியது.

இன்று நாட்டில் ஊழல் ‘நீக்கமற எங்கும் நிறைந்து’ காணப்படுகிறது. கிராம மட்டத்திலிருந்து தலைநகர் வரை ஊழல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரச நிர்வாக நடைமுறைகளையும் சுற்றி ஒரு நிழல் நிர்வாகம் இயங்குகிறது. இந்த நிழல் நிர்வாகம் ஊழல்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகன் இந்த நிழல் நிர்வாகத்தை பணம்(லஞ்சம்) கொடுத்துத் திருப்திப்படுத்தாமல் அதனைக் கடந்து சென்று பொது மக்களுக்கான அரச நிர்வாகத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இதற்கு எதிராக ஒரு சாதாரண குடிமகன் ஒருவனால் எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத கையறு சூழ்நிலையும் சுற்றாடலுமே இன்று இலங்கையில் காணப்படுகிறது.

இலங்கையில் இன்று காணப்படும் “பிரச்சனைகளை” பட்டியல் போட ஆரம்பித்தால் அது ஒரு புத்தகமாகிவிடும். பிரதேச சபை தொடக்கம் அரசாங்கம் வரை குடிமக்கள் பல வகைப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

நிர்வாக அதிகார துர்ப்பிரயோகம்-ஊழல்-நிதி மோசடி-இராணுவ பொலிஸ் அத்துமீறல்-சட்ட மீறல்-நீதி விலகல்-காணி-காணாமற் போனோர்-கடத்தப்பட்டோர்-கைதிகள்-அகதிகள்-பெண்கள்-குழந்தைகள்-ஒப்பந்தங்கள்-விசாரணைகள்-வழக்குகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என எழுதிக் கொண்டே போகலாம். இவை மத்தியில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி-சுகாதாரம்-வாழ்க்கைச் செலவு பாரிய பிரச்சனைகளாகும். இவைகளுக்கும் மேலாக எம்மை ஆளும் அரசாங்கத்திற்குள்ளே பிரச்சனைகள். அரசாங்கத்தின் திட்டங்களிலும் பிரச்சனைகள். இவை யாவற்றையும் ஊடறுத்தபடி நிற்கிறது இலங்கையின் “இனப்பிரச்சனை”.

இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வு நாட்டின் குடிமக்களின் புரிந்துணர்வு-நட்பு-தோழமை-கூட்டுறவு-கூட்டுழைப்பு என்பவற்றிலேயே தங்கியுள்ளது. அதற்கான முயற்சிகள்-முன்னெடுப்புக்கள்-போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. இதனால் மக்கள் அடக்குமுறைக்குள்ளாகி அடிபடுகிறார்கள். சிறைப்படுகிறார்கள். சட்ட விரோதமாக கைது செய்யப்படுகிறார்கள். அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். கடத்தப்படுவதற்கான முயற்சிகளும் இடம் பெற்று வருகின்றன.

மாலம்பே  சைட்டம்     நிறுவனத்தை தடை  செய்யுமாறு  அரசாங்கத்தை  வற்புறுத்தி  சைட்டம்  மாணவர்  மக்கள்  இயக்கத்தினால்  ஒழுங்கு  செய்திருக்கும்  தொடர்ச்சியான  உண்ணாவிரதம்  கொழும்பு  கோட்டை  புகையிரத  நிலையம்  முன்னாள்  இன்று (21)  ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்  உண்ணாவிரதத்தை  ஆரம்பிப்பதற்கு  முன் அவ் வியக்கம்    பாரிய  ஆர்ப்பாட்டத்தை  அவிவிடத்தில்  மேற்கொண்டது.

இப்போராட்டத்தின் கோரிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்!-கேமமாலினி அபேரத்ன

(අද දින යාපනය දිස්ත්‍රික්කයේ පුත්තූර් හි පවුල් 750 කට අදික ප්‍රමාණයක් පීඩාවට පත් කරමින් මතු වී ඇති සොහොන් බිමක ප්‍රශ්නය පදනම් කරගනිමින් එහි ජනතාව විසින් ආරම්බ කර තිබෙන උපවාස ක්‍රියාමාර්ගයට සහය පල කරන නිදහස උදෙසා කාන්තා ව්‍යාපාරය ....)

பெண்கள் விடுதலை இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் கேமமாலினி அபேரத்ன, புத்தூரில் சுடலைக்கு எதிராகப்போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு இயக்கத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்தார். கேமமாலினி போராட்ட பந்தலில் கருத்து தெரிவிக்கையில் : 

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் மாநாட்டில் சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் எதிர்கால இலக்கு தொடர்பான 5 தீர்மானங்களை வெளியிட்டு , வந்திருந்த இயக்கங்களின் பிரதிநிதிகள், மாணவர்களின் மற்றும் மக்களின் வாக்கெடுப்பு மூலம் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாணவர் மக்கள் மாநாடு இன்று (15.08.2017) பிற்பகல் நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. 

 

யாழ்ப்பாணத்தில் சாதி உறவுகள் மற்றும் மோதல்கள் வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட வடிவங்களை எடுத்துள்ளன. ஒடுக்கப்பட்;ட சாதியினரின் குடியிருப்புகளுக்கு அருகே உயர் சாதியினரின் மயானங்கள் அமைக்கப்படுவதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாக மே, 13ல் யாழ்ப்பாண பஸ்நிலையத்துக்கு முன்பாக ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புத்தூரில் உள்ள கலைமதி கிராமம் வரலாற்று ரீதியாகவே யாழ்ப்பாணத்தில் ஒரு கம்யுனிஸ்ட் கோட்டையாக திகழ்ந்து வருகிறது, அவர்களின் கிராமத்தின் மத்தியில் உள்ள ஒரு மயானத்தின் காரணமாக ஒரு தீவிரமான போராட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 23 கிராமவாசிகள் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார்கள் மற்றும் 11 பெண்கள் உட்பட 30 பேர் பிணையில் வெளியே வந்துள்ளார்கள். மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அனைத்து மயானங்களையும் அகற்றக் கோரி இப்போது கலைமதி கிராமத்தில் ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் பல வாரங்களாக நடைபெற்று வருகிறது. வேறு ஒடுக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த  சாதியினரும் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள், வேறு பலரும் தங்கள் ஒற்றுமையைக் காட்டுவதற்காக இங்கு வருகை தருகிறார்கள். இந்த சமீபத்தைய மோதல் பற்றி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.கே செந்திவேல் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார், யாழ்ப்பாணத்தில் சாதி விரோத போராட்ட வரலாறு தொடர்பாக  அவர்களது வேலை கலைமதி கிராமத்தில் கடந்த நான்கு தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது.

கேள்வி: புத்தூருடன் உங்களுக்கு ஒரு நீண்ட தொடர்பு உள்ளது மற்றும் குறிப்பாக கலைமதி கிராமம் இன்று போராட்டத்தின் மையமாக உள்ளது. இந்த மோதல் பற்றி விளக்க முடியுமா?

பதில்: 700 குடும்பங்களைச் சேர்ந்த 4,500 பேரைச் சனத்தொகையாகக் கொண்ட கலைமதி கிராம மக்கள், சமூக நீதி வெகுஜன அமைப்பின் ஆதரவுடன் ஒரு சத்தியாக்கிரக போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள மயானங்கள் யாவும் அகற்றப்பட வேண்டும் என்பதாகும், புத்தூர் கலைமதி கிராமத்தின் பெரும் பகுதி மக்கள்  இதில் இரவு பகலாக பங்கேற்பதுடன் ஒரு சக்திவாய்ந்த மனச்சாட்சிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.இந்த மக்கள் கூட்டாக ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் தினக்கூலி வேலைகளைத் தொடர்ந்து செய்து வரும் அதேவேளை வெவ்வேறு ஆட்கள் அந்த நாட்களில் வேலைகளில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்வதில் தங்கள் சக்தியை பங்களிப்புச் செய்து வருகிறார்கள்.

2009 போர் முடிவுக்கு வந்த பின்பு, போரின் முடிவில் அரசபடைகளால் கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை தோழர். குகன் மற்றும் லலித் வன்னியிலும் மற்றும் பிரதேசங்களிலும் திரட்டினார்கள். தெற்கில் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

இவர்களாலேயே ஆரம்பத்தில் வடக்குக்கு வெளியில் அரசியற்கைதிகள் பற்றிய தகவல்கள் தெற்கில் ஊடகங்களுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும்  வழங்கப்பட்டது. 

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிசக்  கட்சியில் இயங்கிய இருவரும், 2011 ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் நாள், யாழில் அரசபடைகளாலும் - அவர்களுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் ஆயுதக்குழுவினாலும் கடத்தப்பட்டார்கள்.

வவுனியாவைக் கடந்து வன்னிக்குள்  எவரும் அரசியல் நோக்கில் அல்லது மனித உரிமை சார்ந்த செயற்பாட்டு  நோக்கில் வரத்  தடை செய்யப்பட்டிருந்த மஹிந்த அரசின் ஆட்சியில், இவ்விருவரும் சர்வதேச மனிதவுரிமை நாளான மார்கழி 10 அன்று,  தெற்கிலிருந்து மக்களை வரவழைத்து அரசியற்கைதிகளை விடுவிக்கக்கோரும்  போராட்டமொன்றை யாழில் ஏற்பாடுசெய்திருந்த்னர்.

1.

தேசியம்-தேசியவாதம்  பற்றி எழுதும் போது "இடதுசாரி " தேசியம் என்ற பதத்தை, மார்க்சிசவாதிகள் எனத் தம்மை வரையறுப்போர் பலர் உபயோகிக்கின்றனர். அப்படி ஒன்று உள்ளது. ஆனால் இப்பதம் மார்க்சிசம் சார்ந்து உபயோகப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் மார்க்சிஸ தத்துவம் மற்றும் நடைமுறையானது, தேசியவாதத்தை, கடந்து போக வேண்டிய ஒரு சமூக வரலாற்றுப் போக்கின் நிலையாகவே பார்க்கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்துடன் தொடர்புள்ள தேசியவாதத்தை - முதலாளித்துவப் பொருளாதாரத்தை இல்லாதொழிப்பதுடன்,  அதையும் (தேசியவாதத்தையும்) இல்லாதொழிப்பது  / அல்லது சர்வதேசியமாக வளர்த்தெடுப்பதே   மார்க்சிச நிலைப்பாடு என்பது  மார்க்சிச ஆசிரியர்களினதும் கருத்து. குறிப்பாக லெனின், - லெனின் தனது "தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்" என்ற தொகுப்பின் "கலாச்சார அடிப்படையிலான தேசங்களில் தன்னாட்சி " தலையங்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.

//தேசியவாதம் எவ்வளவுதான் "நியாயமான ", "பரிசுத்தமான ", நயமான, நாகரிக வகைப்பட்டதாக இருப்பினும், அதனுடன் மார்க்சியத்தை இணைக்கமுடையதாக்க முடியாது. எல்லாவகை தேசிய வாதத்துக்கும்  பதிலாக  மார்க்சியம் சர்வதேசியவாதத்தை முன்வைக்கிறது; எல்லா தேசங்களும் உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை முன்வைக்கின்றது.// - லெனின், தேசியப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் .  / V.I . Lenin, Critical remarks on  the National Question : “CULTURAL-NATIONAL AUTONOMY” .  

இக்கட்டுரையில் கட்டுரையில் லெனின்  முதலாளித்துவ கட்டமைப்பின் தேசியவாதத்துக்குப் பதிலாக, தேசங்களும், தேசிய இனங்களும், சிறுபான்மை தேசிய இனங்களும் சர்வதேசியத்தை அடிப்படையாக்க கொண்ட     பாட்டாளி வர்க்க ஆட்சிக்கட்டமைபுக்கு உட்பட்ட "உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை" வலியுறுத்துகிறார். 

பெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றிற்கு நகர நிர்வாகங்கள் முகம் கொடுக்க தயாரற்ற நிலையில் அந்த நகரங்கள் சிதைந்து விடுகின்றன. பிற்காலத்தில் அப்படியான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவார்கள்.

16 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் மூன்று பெரும் நகரங்களில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்ந்தமை பற்றி அறிந்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவை பீக்கிங், கெய்ரோ மற்றையது மெக்சிகோவில் அஸ்ரெக் மக்களது நகரம். பிற்காலத்தில் ஸ்பானியர்களால் அழிக்கப்பட்டு தற்பொழுது அதன்மீது புதிய மெக்சிக்கோ நகரம் உருவாகியுள்ளது.

தற்போதைய ஐரோப்பிய பெரிய நகரங்களான பாரிஸ், இலண்டன் ஆகியன 17 -18 ஆம் நூற்றாண்டில் உருவாகியவை. முடிக்குரிய நிலங்களில் விவசாயம் செய்த மக்கள் அந்த நிலங்களை பிரபுக்களிடமும், முதலாளிகளிடமும் இழந்ததால் தொழிற்புரட்சி நடந்த பெரிய நகரங்களை நோக்கி மக்கள் குவிந்தார்கள். அப்படியான மக்கள் தொகையால் தொடர்ச்சியாக நகரங்கள் வளர்ந்தன. தற்போது இந்தியாவில் இப்படியான நிலையைப் பார்க்க முடிகிறது 18 நூற்றாண்டு இலண்டனின் நிலக்கரியைப் பாவித்ததால் ஏற்பட்ட அழுக்கையும், தூசியையும் சார்ள்ஸ் டிக்கன்ஸனின் நாவல்களில் பார்க்கமுடியும்.

ஆகஸ்ட் 02 தேசிய எதிர்ப்பு தினத்தை வெற்றிகரமானதாக்குவோம். 

இந்த நிமிடம் வரை சைட்டம் திருட்டு பட்டக் கடையை ரத்து செய்யக்கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவ பீடங்கள் எட்டிலும் உள்ள விரிவுரையாளர்களின் தொழிற்சங்கங்கள், மற்றும் மாணவர்கள், அந்த மாணவர்களின் பெற்றோர்கள், பல்கலைக்கழக பொது மாணவர்கள், அரச மருத்துவ சங்கம், தொழிற்சங்கங்கள், மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸக் கட்சி, கூட்டு எதிர்க்கட்சி உட்பட பொது மக்கள் போராடுகிறார்கள்.

வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ரணில், மைத்ரி கூட்டு அரசாங்கத்திற்கு தேவையாக இருப்பது மருத்துவ பட்டத்தையும் மற்ற அனைத்தையும் போன்று விற்பனை சந்தையில் விற்று தின்பதற்கே.

நோயாளிகளின் உயிர் தொடர்பாகவோ, கல்வியின் தரம் தொடர்பாகவோ இந்த கொடிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை. அதனால் செவிட்டு யானைகள் போன்று தமது நடத்தையினால் வெளிக்காட்டி, சைட்டம் முதலாளியின் தாளத்திற்கு ஆடி , பொது மக்களை அடக்கி ஒழிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

கனடா ஸ்காபரோ நகரில் “கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” என்ற கருத்தரங்கு நிகழ்வு 22 யூலை மாலை 4.30 மணிக்கு பார்மஸி அவனியு வில் நடந்தேறியது. சமவுரிமை இயக்கம் கனடா கிளையினால் இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர் சேனாதீரவின் உரையின் காணொளியினை இங்கு பார்க்கலாம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE