Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இராமாயணத்தில் கும்பகர்ணன் பிரமதேவரிடம் நித்தியத்தவம் வேண்டும் என கேட்க எண்ணி, நா புரண்டு நித்ரத் தவம் கேட்டதால் வாழ்நாள் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் தவத்தினை பெற்றான். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாப்பாட்டிற்கு மட்டும் கண் விழிப்பான். இந்த கூட்டமைப்பு யாரிடம் வரம் பெற்றார்களோ தெரியவில்லை. வருடக் கணக்கில் தூங்கிவிட்டு தேர்தல் காலங்களில் மட்டும் எழுந்திருப்பார்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு மக்களைப் பற்றிய கருசனை வரும்.., தமிழ்மக்களின் அரசியற் தீர்வு ஒன்று தேவை பற்றிய சிந்தனை ஞாபகத்திற்கு வரும்.., மக்களோடு பேச விருப்பம் வரும்.

இப்போது இடைக்கால வரைபு பற்றி விவாதிக்கிறார்களாம், ஒற்றையாட்சி நாடு தவறு, ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி.., அதிகாரப்பகிர்வு பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றார்களாம். இதைப் பற்றி மக்களோடு பேசவே இவர்களுக்கு பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கு. இனி அடுத்த தேர்தல் வரை இது பற்றி விவாதிப்பார்கள். அடுத்த தேர்தல் நெருங்கியதும் கும்பகர்ணன் சாப்பிட எழுந்தது போல் திடீரென மக்கள் முன் தோன்றி சமஷ்டி வரைபின் இறுதிப் பக்கத்தினை முன்வைப்பார்கள். முதுகெலும்பு இல்லாத ஊடகங்களும் விவாதங்களை நிகழ்த்தி இன்றைய கேள்வியை அன்றைய நிலைக்கு தக்க மாதிரி மாற்றிக் கேட்டு மக்களை முட்டாளாக்கி தங்கள் பிழைப்பினை தக்கவைத்துக் கொள்வார்கள். மக்களுக்கும் ஏமாற்றம் பழக்கப்பட்டு போனதால் மக்கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். மக்களின் இந்த மௌன நிலை தான் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களிற்கும் கிடைத்திருக்கும் பெருங்கொடை.

ஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை அணுகும்போதெல்லாம், இயல்பு மொழியானது சிங்களமாகவே உள்ளது. நீmgங்கள் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தும் போதெல்லாம், சாலைகள் மற்றும் இடங்கள், இப்போது புகழ்பெற்ற கட்டிடங்களின் பெயர்கள்கூட சிங்களத்தில் தான் தரப்படுகிறது. யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள சுண்ணாகம் என்கிற இடத்தை தேடினால் கூகுள் வரைபடம் அந்த இடத்தின் பெயரை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து ஹ_ணுகம (சுண்ணாம்பு ஊர்) என்று தெரிவிக்கிறது - பல மட்டங்களிலும் தவறானது. தமிழ் இடங்களின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை, யாழ்ப்பாணம் யாப்பன எனும் சிங்களப் பெயரைப் பெறுகிறது, அதே சமயம் அங்கிருந்து ஒரு கல்லெறியும் தூரத்தில் உள்ள நல்லூருக்கு மட்டும் தமிழ் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கூட கூகுள் வரைபடங்களில் ஒரு சேரிடத்தை குறித்து, அங்கு செல்வதற்கான ஓட்டுனர் வழிமுறைகளைப் பாருங்கள்;. உதாரணத்திற்கு  நான் வசிக்கும் இடத்தில் இருந்து கொழும்பில் ஒரு இடத்தை அடையவேண்டி கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தினால் கிடைக்கும் அறிவுறுத்தல்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் கலந்த ஒரு விசித்திரக் கலவையாக உள்ளது - நான் செல்லவேண்டிய ஒரு பாதை ஆங்கிலத்தில் சொல்லப்படும் அதேவேளை மற்றொரு அறிவுறுத்தல் முற்றிலும் சிங்களத்தில் தரப்படுகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களில் சிங்களத்தில் உள்ள எழுத்துக்களை சரளமாக வாசிக்க முடியாதவர்கள் ஏன் இதில் மொழிமாற்றம் செய்வதற்கான தெரிவு இல்லை என்று சொல்லி தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை

போராட அணிவகுப்போம்.

நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.

புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.

கத்தோலிக்க மதப் பின்னணி எனக்கு இருந்ததனால் மரிய மதலேனா பற்றி கொஞ்சம் தெரியும். 8ம் வகுப்பு தொடக்கம் 10ம் வகுப்பு   படிக்கிற காலத்தில வாணி, சரஸ்வதி, மாதவி, பாரதி, வாகதீஸ்வரி, மாலினி எண்டு, கொஞ்ச பொம்பிளைப்பிள்ளையளுக்கு பின்னால  திரியேக்க, அவயட சமய புத்தகத்தில இருந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாயன்மார் பற்றிய கதைகளை வாசிக்கும் போது,    மேலோட்டமாக அறிமுகமானவர் தான் ஆண்டாள் என்கின்ற கோதை. கொஞ்சம் வயது வந்த பின்னாடி, மரியா மதலேனாவைப் பற்றியும்  ஆண்டாளைப் பற்றியும் நான் "விபரமாக" தெரிஞ்சு கொண்டது சினிமா திரைப்படங்கள் ஊடாகத் தான்.

எனக்கு இன்றைக்கும் ஆண்டாள் என்றால் நினைவில் வருவது, பாரதியின் "காக்கை சிறகினிலே நந்தலாலா" என்று பாடியபடி திருமால் பெருமை  படத்தில் தோன்றிய கே.ஆர்.விஜயா தான்! சிவாஜி ரசிகனான நான் அநேகமாக எல்லாப் படங்களையும் அவருக்காகவே பார்த்திருக்கிறேன். ஆனால், திருமால் பெருமை  என்ற படத்தை நான் பலதடவைகள் கே.ஆர்.விஜயா நடித்த ஆண்டாளுக்காகவே பார்த்திருக்கிறேன்.

 

இப்படத்தால் ஏற்பட்ட  "பாதிப்பால்" ஆண்டாளை பற்றி தேடியிருக்கிறேன். ஆண்டாள் திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் வரும் பல வரிகளை என்னால் இப்போதும் மனப்பாடமாக கூறமுடியும். எனக்குத் தெரிந்த இலக்கியம் பற்றிய உலகவரலாற்றில், பல நூறாண்டுகளுக்கு முன்பேயே, காதலால்-காமத்தால் கவிதைப் பெருக்கெடுத்து, ஆணை object தன் ஆளுமைக்கு உட்பட்ட  பொருளாக்கி - அல்லது ( கண்ணன்/கிருஸ்ணன் என்ற) கடவுளையே தன் காதல்-காம வெளிப்பாட்டுக்கான object - பொருளாக்கி பாடிய பெண்ணைப் பற்றிய பதிவை நான் வாசிக்கவில்லை.

போராட்டம் இதழ் 32 பின்வரும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துவிட்டது.

 

கட்டுரைகள்

1. ஏமாறாதிருப்போம்! எழுந்து நிற்போம்

2. துன்பமும் போராட்டமும்

3. சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு

4. அவர்களின் வருமானமும் எமது செலவீனமும்

5. உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆம் ஆண்டு

6. கட்சிகளுக்கான அரசியலும், மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்

7. யார் யாருடைய வயிற்றுக்குள்? அமெரிக்காவிற்கும், இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தத்தின் எதார்த்தம்

8. கலைமதி கிராமத்தின் சுடலைக்கு எதிரான போராட்டமும்-வெற்றியும், இடதுசாரிய இயக்கமும்

9. தேர்தல் வரும் பின்னே! தீர்வு(அரசியல் யாப்பு) வி(இன)வாதம் வருகிறது முன்னே!

10. வேள்வித் தடை மூலம் அரங்கேறும் வெள்ளாளிய மயமாக்கம்

11. யார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில்? இராணுவமா? மக்களா?

12. 2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோசலிஸக் கட்சியின் நிலைப்பாடும்

13. இனவாதம் பலவிதம் - ஐக்கியப்பட வேண்டிய தருணமிது

சிம்பாப்பேயின் றொபேர்ட் முகாபே, தனது சொந்த இராணுவ உயரதிகாரிகளினால் பிரயோகிக்கப்பட்ட பாரிய அழுத்தத்தின் காரணமாய் மூன்று தசாப்தங்களுக்கு மேலான தனது ஆட்சியதிகாரத்திலிருந்து பதவி விலகிக் கொண்டுள்ளார். இவர் பதவி விலகிக்கொண்டதான அறிவிப்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் மகிழ்ச்சி ஆரவாரங்கள் கிளர்ந்தெழுந்தன.

முகாபேயின் சொந்தக் கட்சிக்குள்ளேயே முகாபே மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்த வேளையின் மத்தியில், முகாபே தனது இந்த பதவிவிலகல் அறிவிப்பினை வெளியிட்டார். பதவிவிலகும் கணத்தில் உலகநாடுகளின் தலைவர்களில் வயதில் எலலோரையும் விட மூத்தவரான முகாபேக்கு வயது 93 ஆகும். கடவுளால் மட்டுமே தன்னை அதிகாரத்திலிருந்து நீக்க முடியும் என்று அவர் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். சிம்பாப்பே நாட்டினுடைய விடுதலை இயக்கத்திற்கு தலைமை வழங்கிய அதிபர் முகாபே அந்நாடு சுதந்திரம் அடைந்த 1980 ம் ஆண்டிலிருந்து பதவியிலிருந்து வருகிறார். 1987 இல் சிம்பாப்வே ஜனாதிபதி முறைமைக்கு மாறியது. ஐனாதிபதி முறைக்கு மாறும் வரைக்கும் முகாபே நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.

 

   தேர்தல் முடிவுகள் என்பது மக்கள் கருத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாகும் எனவும், தேர்தல் என்பது மக்கள் கருத்தை அளவிடும் கருவியாகுமெனவும் ஒரு கருத்து நிலவுகின்றது. ஆனால் அது உண்மையல்ல என்பது பகுத்தறிந்து பார்க்கும் எந்தவொரு நபரும் புரிந்து கொள்வார். நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ‘மக்கள் கருத்து’ என்பது மக்கள் மத்தியில் தானாகவே உருவாகிய ஒன்றல்ல. பணபலம், ஊடகபலம், குண்டர்பலம் மற்றும் அரசியற்பலத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக மக்கள் மனதை சலவை செய்யும் (மூளைச் சலவை) விடயத்தில் ஊடகங்கள் முன்னின்று உழைக்கின்றன.  சாதாரண காலங்களிலும் மக்கள் கருத்தென்பது அப்படியானதாக இருக்கும் பட்சத்தில், தேர்தல் காலங்களில் அது மேலும் தீவிரமடையுமே தவிர வேறொன்றும் நடக்காது. ஆகவேதான் தேர்தல் முடிந்த பின்பு வெளிவரும் தேர்தல் முடிவுகள் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட ‘மக்கள் கருத்தின்’ வெளிப்பாடெனக் கூற முடியும்.

   என்றாலும், தேர்தல் நேரத்திலும் அதற்கு முன்பும் நடக்கும் விசேட பரப்புரைகளின்; ஊடாக இடதுசாரிய கருத்தியலை சமூகமயப்படுத்த முடியாதென்பது இதன் கருத்தாகாது. குறிப்பிட்டளவு முயற்சி செய்தால் தேர்தலில் இடதுசாரிய அமைப்புகளுக்கும் ஓரளவு மக்கள் பிரதிபலிப்பை பெற்றுக்கொள்ள முடியும். என்றாலும், அதற்கு ஒரு வரையறை இருப்பது சம்பந்தமான புரிந்துணர்வும் வேண்டும்.

   அதேபோன்று, இடதுசாரிய கட்சிகள் தேர்தலில் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்களில் பங்கேற்பது (நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி நிறுவனங்கள்) குறித்து தமது நிலைப்பாட்டை அமைத்துக் கொள்ளும்போது வரலாற்றில் பெற்றிருக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்பதையும் மறக்கக் கூடாது. இலங்கையிலும், சர்வதேச அரசியலிலும் தேர்தல் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்கள் சம்பந்தமாக தலையீடு செய்வது எப்படி என்பது குறித்து தேவையானளவு உதாரணங்கள் கிடைக்கின்றன. பிரதிநிதிகள் நிறுவனமொன்றிற்காக நடக்கும் இவ்வாறான தேர்தல் களங்களை இடதுசாரிய இயக்கம் தனது அரசியல் போராட்டத்தின் பிரதான அல்லது ஒரே போராட்டக் களமாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.  மக்கள் கருத்தின் மீது தiலையிடுவதற்கான சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த வேண்டும் என்பதோடு ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடியுமாயின் அதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.

புகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்!

தமது  சம்பளமுரண்பாட்டை  உடனடியாக தீர்க்குமாறு  வற்புறுத்தி புகையிரத  சேவைகள் பலவற்றில் உள்ள தொழிலாளர்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு செயற்பாட்டுக்கு அரச அடக்குமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புகையிரத சங்கங்கள் நீண்டநாட்களாக தமது சம்பள உயர்வு தொடர்பாகவும், மற்றும் சம்பள முரண்பாடு தொடர்பாகவும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால்  அது தொடர்பாக அதிகாரிகளின் எவ்வித பதிலும் கிடைக்காதனால் இன்று அது வேலைநிறுத்தம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக ஆரம்பத்திலேயே தீர்வு பெற்றுக்கொடுக்காது பிரச்சினை  வளர்க்கும் ஆட்சியாளர்கள் இந்த வேலைநிறுத்தம் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு வகை கூறவேண்டும்.

அந்த வகைகூறலோடு ஆட்சியாளர்கள் வேலைநிறுத்தத்தின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவை  பாதிப்படைவதைப் பாவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது  அடக்குமுறையை பாவித்து வருகின்றனர்.

புகையிரத சேவையையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தல், குறித்த நேரத்திற்குள்   சேவைக்கு திரும்பாத புகையிரத தொழிலாளர்கள் சேவையை விட்டு வெளியேறியவர்களாக கருதப்படுவதாக அறிவித்தல் போன்ற அச்சுறுத்தல் தற்போது அரசாங்கத்தினால் விடப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் பாரிய அடக்குமுறையாக அது அமையும்.

புகையிரதம்  உட்பட  பொதுப் போக்குவரத்துச்  சேவை அத்தியாவசிய சேவையாக அரசாங்கத்திற்கு தெரிவது தொழிலாளர்கள் வேலைநிறுத்த செயற்பாட்டில் ஈடுபட்ட பின்னரே.

இதற்கு முன்னர் புகையிரத திணைக்களத்தை தனியார் கம்பெனிக்கு விற்கும் தீர்மானம் எடுக்கும்போது  அல்லது அரசாங்க நிதி ஒதுக்கீட்டை வெட்டிவிடும்போது அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள்  செயற்பட்டது அத்தியாவசியதன்மையை கவனத்தில் கொள்ளாது.

தற்போது இந்த சந்தர்ப்பத்தில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தலைவர்களிடம் எமக்கு கேட்க வேண்டியிருப்பது 2015 இல் 78 பில்லியன், 2016 இல்  58 பில்லியன், 2017 இல் 51 பில்லியன் என பொதுப் போக்குவரத்து செலவுகளை குறைத்தபோதும்,  2018 வரவுசெலவு திட்டத்தில் அது 43 பில்லியன் வரை மேலும் வெட்டப்பட்டுள்ளபோதும் அது  அத்தியாவசிய சேவையாக ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இவைகளில் உள்ள சமூகமய அத்தியாவசிய பாவனை உள்ளது.  அந்த சேவைகள் தொடர்பாக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கு அல்ல அந்த சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழில் உரிமையை இல்லாதொழிக்கவே என நாங்கள் மக்களுக்கு மீண்டும் ஞாபகமூட்டுகிறோம்.

 ஆளும் வர்க்க வரலாறுகளே மனித வரலாறாகி இருப்பது போல், இன முரண்பாட்டுக் காலத்தில் ஒடுக்கியோர் போற்றப்படுவதே வரலாறாகி வருகின்றது. ஒடுக்கியவர்கள் போற்றப்படுவதோடு, அந்த ஒடுக்கியவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படுகின்றனர்.

ஆயுதம் தாங்கிப் போராடிய அமைப்புகள், தங்கள் அமைப்பையும் முன்னிறுத்தி நினைவுகளைக் கொண்டாடுவதே நடந்து வருகின்றது. அதேநேரம் தங்கள் அரசியலை முன்னிறுத்தி அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் பொதுவான நினைவுகளை மறுப்பதும் நடந்து வருகின்றது. ஒடுக்கப்பட்டவர்களின் நினைவை மறுப்பது என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் மனிதவுரிமையை மறுக்கும் அரசியலாக இருக்கின்றது.

ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் மூலமே, ஒடுக்கப்பட்டவர்களின் தியாகங்களை முன்னிறுத்த முடியும். இந்த வகையில் சர்வதேச மனிதவுரிமைத் தினத்தை ஒடுக்கப்பட்டவர்களின் தினமாக முன்னிறுத்துமாறு, சமவுரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. சர்வதேச மனிதவுரிமைத் தினமான மார்கழி 10 திகதியை முன்வைத்து 10.12.2017 பாரிசில் ஒடுக்கப்பட்டோர் நினைவுநாளை நடத்த சமவுரிமை இயக்கம் அழைப்பை விடுகின்றது.

யார் ஒடுக்கப்பட்டவர்கள்? 

இனமுரண்பாட்டினால் பலியானவர்களில் ஒடுக்கியோரும், ஒடுக்கும் அரசியலைக் கொண்டு இருந்தோரும் அடங்கும். ஒடுக்கியவர்கள் பலியானதால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல. இந்த வகையில் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கு பலியானவர்களையும் முன்னிறுத்துவோம்.  உதாரணமாக யார் ஒடுக்கப்பட்டவர்கள்?   

சிறிலங்காவில் SAITM எனும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை மூடக் கோரி நடந்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இலவசக் கல்வியையும்,இலவச சுகாதார சேவையை பாதுகாக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இப்போராட்டம் நடைபெற்றது.

 

முன்னிலை சோசலிசக் கட்சியின் வழிகாட்டலில் "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்" முன்னெடுத்த இப்போராட்டம் இலவசக் கல்வியைப் பாதுகாக்க உலகெங்கும் போராடும் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரி ஆகும்.

 

சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர் அச்சுறுத்தல்,அடக்குமுறை,வெள்ளை வேன் கடத்தல் முயற்சிகள் என இப்போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் மாணவர்கள் முறியடித்தனர்.

 

"சயிட்டத்திற்கு எதிரான மாணவர் மக்கள் இயக்கம்" எனும் வெகு மக்கள் அமைப்பின் தோற்றம் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோரையும் போராட்டக்களத்திற்கு கொண்டு வந்தது.சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் பெற்றோர்கள் ஈடுபட்டதால் அரசுக்கு அழுத்தம் கூடுதலாகியது.

தற்போது அரசு சயிட்டம் திட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.அரசு தனது வாக்குறுதியில் இருந்து தவறினால்,மீண்டும் போராட்டம் தொடங்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

முதலாளித்துவ - புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியான இத்திட்டத்தை முறியடித்த மாணவர்களை வாழ்த்துவோம்.

 

மாணவர்களுக்கு அரசியல் வழிகாட்டல் வழங்கி அவர்களுக்கு அரணாக இருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் எமது வாழ்த்துக்கள்.

 

(மாணவர் இளைஞர் சமூக இயக்கம்)
-SYSM-Students Youth Social Movement

பல ஆண்டுகளாகப் போராடிய மாணவர்கள் இன்று தங்கள் கல்வி உரிமையினை வென்றெடுத்துள்ளார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பொது மக்கள், இடதுசாரிய அமைப்புக்கள், முன்னிலை சோசலிசக் கட்சி துணை நின்றார்கள். அதிலும் சில மாணவர்கள் அடக்குமுறைவாதிகளால் ஆதாரம் அற்ற முறையில் கொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் மிக ஏழ்மைக் கோட்டில் வாழும் குடும்பத்தினை சேர்ந்தவர்கள். ஏழைகளின் உயிர்கள் மற்றும் பொது மக்களின் உயிர்கள், அரசியல்வாதிகளுக்கும், மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் பண முதலைகளுக்கும் எதுவுமே இல்லாத ஒன்றாகிவிட்டது. மக்களுடைய  இழப்புக்களை, கஸ்ரங்களை, துயரங்களைப் பொருட்படுத்தாத அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்து மக்களுக்கு என்ன பயன்? புதவியைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளை இல்லாது ஆக்குவதும், முடிந்த வகையில் பொதுமக்கள் உழைப்பினை சுரண்டுவது, உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்களை அடையாளம் இல்லாது ஆக்குவது, நாட்டினை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை பல வழிகளில் வருத்தி துன்புறுத்தி, கொள்ளை அடித்து உலக முதலாளிகளையும், உலக வங்கியையும் வாழ வைப்பதோடு தாங்களும் கொள்ளை அடிப்பதும் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அவர்களுடைய அரசியலும் ஆகும். 

எதிர்க்கட்சி என்று வந்த கூட்டமைப்பு தமிழ்ப் பகுதிகளில் ஒரு கிராமத்தினை கூட புனரமைத்தது கிடையாது. இன்று மழையினால் எத்தனை கிராமத்து மக்கள் சேறும் சகதியுமாய் போக்குவரத்து சிரமத்தால் அவதிப்படுகின்றார்கள். இது சம்பந்தன் ஐயாவின் கிழட்டுக் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் பதவி எதிhக்;கட்சித் தலைவர். ஒரு கிராமத்து மக்களை வாழவைக்க முடியாத தலைவர் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுத் தருவாராம்.., தமிழ் மக்களை அமைதியாக வாழ வைப்பாராம். சூடு சுரணை இல்லாத வெட்கம் கெட்ட கேவலமான மனிதர்கள். பார்த்தால் வெள்ளை வேட்டியும் சேட்டும்.

எட்டு வருடங்களாக  நடைபெற்ற சைடம் - தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராகவும், கல்வி தனியார்மயப்படுத்தலுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டம் நேற்று (08.11.2017) இல் வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
 
இப்போராட்டத்தில், பங்குகொண்ட பல அமைப்புகளில் ஒரு தோழமை அமைப்பு என்ற வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியானது  இப்போராட்டத்தின் வெற்றி சார்ந்து மகிழ்ச்சி கொள்கிறது.
 
அதேவேளை, இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இடதுசாரிய  மாணவர் அமைப்புகள், நேரடி ஆதரவு கொடுத்த எமது சகோதர அமைப்பான  முன்னிலை  சோசலிசக்  கட்சி, மற்றும்  இடதுசாரிய அமைப்புகளுக்கு  வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
எம்மைப் பொறுத்தளவில் இவ் வெற்றியானது இன, மத, பிரதேச , மற்றும் மொழி சார்ந்த பிரிவினைகள் கடந்து,   இலங்கையில் வாழும் அனைத்து  மக்களின் வெற்றியாகும். இவ்வருடத்தில் இது மக்கள்-இடதுசாரிய இயக்கங்கள் வென்றெடுத்த  போராட்டத்தின் இரண்டாவது வெற்றியாகும்.  முதலாவது, சில மாதங்களுக்கு முன் புத்தூரில் மக்களும் புதிய ஜனநாயக மா- லெ கட்சியும் வென்றெடுத்த நில  உரிமைக்கான- சுகாதார வாழ்வுரிமைக்கான போராட்டம். இன்று வெற்றி கண்டுள்ளது இலவசக் கல்விக்கான போராட்டத்தின் ஒரு பகுதி !!!! போராடுவதன் மூலம் மட்டுமே நாம் உரிமைகளை பெறமுடியும்-அவற்றைப்  பாதுகாக்க முடியுமென்பதனை, மறுபடியும் இலங்கையின் இடதுசாரிய இயக்கம் - சோசலிச அமைப்புகள் நிரூபித்துள்ளளன.  

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 27 ஆம் திகதி முதல் தமது வழக்குகளை

மீளவும் வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி மூன்று தமிழ் அரசியல்

கைதிகள் முன்னெடுத்து வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும்

நியாயமானதாகும். உயிராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இம் மூன்று

அரசியல் கைதிகளையும் அரசாங்கமும் ஜனாதியும் பாதுகாக்க வேண்டும். இவ்

அரசியல் கைதிகளின் உயிர்கள் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும்

ஏற்றுக்கொள்ள முடியாது.

 

சட்டபூர்வமாகவும், நியாயத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளின்

அடிப்படையிலும் இம் மூன்று தமிழ் அரசியல் கைதிகளினதும் உணவுத்

தவிர்ப்புப் போராட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டியது அவசியம்.

எனவே, இப்பிரச்சனையை ஆளும் வர்க்க பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து

நோக்காது, சட்டம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் அணுகித்

தீர்க்கப்படவேண்டும் என்பதை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

வலியுறுத்துகின்றது.

கல்வி மற்றும் சுகாதார சேவையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக வரலாற்றில் எழுந்த பாரிய மக்கள் இயக்கமாகிய சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கத்தினால் நடத்தப்பட்ட சைட்டம் திருட்டுக் கடைக்கு எதிரான போராட்டத்தில் தீர்மானமிக்க திருப்புமுனையை பதிந்துவிட்டு நாம் இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளோம். 

மாணவர் அமைப்பானது இப்போராட்டத்தில் கலந்திருப்பது பொதுவான சைட்டம் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டோ அல்லது சைட்டம் திருட்டு பட்டக் கடையின் சட்டபூர்வ தன்மை மற்றும் தரம் சம்பந்தமான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டோ அல்ல. கல்வி சம்பந்தமாக நீண்டகால கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே இப்போராட்டத்தோடு இவ்வியக்கம் கலந்திருக்கின்றது. 

கல்வி என்பது ஒருவரை தொழிலுக்காக பயிற்றுவிக்கும் அடிமைத்தனமான பயிற்சியோ அல்லது பாத்திரத்தில் தண்ணீரை நிரப்புவது போன்று மாணவர்கள் மீது அறிவை நிரப்புவது அல்ல என்பதை ஒவ்வொரு கல்வியியலாளரும் விவாதமின்றி ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

கல்வி என்பது ஒருவருக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொண்டுவர மேற்கொள்ளும் ஆளுமை வளர்ச்சி என்பதாக அறிவியல் கல்வியின் வளர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது கல்வி என்பது வெறுமனே அறிவு பரிமாற்றமல்லாத கற்பித்தல் செயற்பாடாகும். அதேபோன்று யுனெஸ்கோ உடன்பாட்டிற்கு அமைய கல்வி என்பது வாழ்வதற்கு கற்றுக் கொள்வதாகும். அதாவது கல்வி என்பது வாழ்க்கையாகும். 

கல்விக்கான உரிமை இழக்கப்படுவது என்பது வாழ்வதற்கான உரிமையை இழப்பதாகும். வாழ்க்கைக்காகவும் மனிதகுலம் வரலாறு பூராவும் பெற்றுக்கொண்ட கலாச்சார பொக்கிஷங்களுக்காகவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை இருப்பதால்தான் கல்வியானது அனைவருக்கும் உரிய மீறமுடியாத உரிமையாக இருக்கின்றது. வரலாறு பூராவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் வளர்ச்சிபெற்ற அறிவு தனியொரு மனிதனது முயற்சியின் பலனல்ல, சமூகம்சார் உழைப்பின் பிரதிபலனாகும். ஆகவே, அந்த அறிவை பெற்றுக்கொள்ள சமூகத்திற்கு உரிமை உண்டு.

தனியார்மய நடவடிக்கையின் ஊடாக கல்வியை வர்த்தகப் பண்டமாக்கும் போது சமூகத்திற்கு சொந்தமான இந்த உரிமை இழக்கப்படுகின்றது. அதேபோன்று ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உரித்தான கலாச்சார பாரம்பரியங்கள் இலாபத்தின் பின்னால் ஓடும் வியாபாரிகளின் தனிப்பட்ட சொத்துக்களாக ஆகிவிடும். கல்வி தனியார்மயத்தை நாம் எதிர்ப்பது அது ஒருபோதும் நெறிமுறைகளை கொண்டிராததால் மாத்திரமல்ல. அது சமூக முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதனாலும் தான்.

என்றாலும், “ஒஸ்கார் வைல்ட்” என்ற பிரபல எழுத்தாளரின் கூற்றிற்கு அமைய எந்தப் பொருளினதும் மதிப்பை அறியாத, ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க மாத்திரமே அறிந்த கேவலமான சமூகமொன்று உருவாவதன் ஊடாக கல்வியும் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுவதும் விலைக்கு வாங்கப்படுவதுமாக உள்ளது. 

இலங்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டால் இலவசக்கல்வி தொடர்பில் நீண்டகாலமாக நிலவிய பாரம்பரிய முறைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. முன்பள்ளிக் கல்வி முற்றாக பணத்திற்கு பெற்றுக்கொள்ளும் ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன்பள்ளிக் கல்வி தொடர்பில் தரத்தை ஆய்விற்கு உட்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகியிருக்கும் நிலையில் ஆரம்ப குழந்தைப்பருவ அபிவிருத்தி குழம்பியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் சமயத்தில் இரு வசனங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. ஒன்று ‘அநீதிக்கு எதிராதல்’. மற்றது ‘சட்டத்தின் ஆதிக்கம்’ என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அதாவது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது. என்றாலும் இந்த சட்டத்தின் ஆதிக்கம் மாலம்பே சைட்டம் திருட்டு பட்டக் கடை தொடர்பில் செயற்படுகின்றதா? இந்த வியாபார நிறுவனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், ஆரம்பத்திலிருந்தே இது நடைமுறை சட்டத்தை மீறி அமைக்கப்பட்டிருப்பதும், தொடர்ந்து சட்டவிரோத வேலைகளை செய்வதாலும் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இது விடயத்தில் சட்டத்தை செயற்படுத்தவில்லை என்பது தெரிகின்றது. இது தொடர்பிலான நூற்றுக்கணக்கான உதாரணங்களில் சிலவற்றை அலசிப் பார்ப்போம்.

1. முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் சைட்டம் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 2010 ஆகஸ்ட 09ம் திகதி முதலீட்டுச் சபையின் தலைவருடைய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை மருத்துவ சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய 2008 மார்ச் 31ம் திகதி சைட்டம் நிறுவனம் தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம் மற்றும் நிதியியல், பொறியியல், தொழிற்பயிற்சி, தாதியர், மொழிகற்கை மற்றும் சுகாதார விஞ்ஞான பாடங்களை கற்பிற்பதற்காக அனுமதி பெற்றுள்ளது. அந்நிறுவனம் மருத்துவ விஞ்ஞானத்தை கற்பிற்க அனுமதி பெற்றிருக்கவில்லை. அதன் பெயர் South Asian Institute of Technology and Management அல்லது தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம் என ஆரம்ப அனுமதியில் குறிக்கப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE