Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் மக்களால் பரவலாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்களிற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கத்தினரால் கடந்த 17ம் திகதி ஆரம்பித்த ஒரு வாரகால அடையாள எதிர்ப்பு சத்தியாககிரக போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய தினம் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒத்த ஆட்சியையே மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விசனப்பட்டதுடன்; ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இன்றைய ஆட்சியாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

"அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!", "சகல காணாமலாக்கல்களையும் உடன் வெளிப்படுத்து!", "நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று!", "பயங்கரவாத தடுப்பு சட்டம் உட்பட சகல அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்!"  ஆகிய கோசங்களை முன்வைத்து  கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம் ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்து இன்று 6வது நாள். இன்றைய எதிர்ப்பு போராட்டத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது தார்மீக ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இலங்கை ராணுவத்தால் பாலியல் வன்முறை செய்யப்பட்ட தமிழ்பெண்களின் கதறல்கள் வன்னியில் கொட்டப்பட்ட வெடியோசைகளை மேவி ஒலித்தன. மட்டக்களப்பின் வயல்வெளிகளில், மன்னாரின் கடற்கரைகளில், செம்மணியின் வெளிகளில் என்று எங்கும் தமிழ்ப்பெண்களின் மீதான பாலியல்  வன்முறை அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது.  பகல்களிலும், இரவுகளிலும் அந்தக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அவமானம் தாங்க முடியாமல், வலி பொறுக்க முடியாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆதரவு தேடி, அபயம் கேட்டு, அந்தக் கயவர்களை சபித்தபடி அந்தக் குரல்கள் எழுந்து கொண்டிருந்தன. அழுதும், ஆற்றாமல் முனகியும் அவை அடங்கிப் போயின.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்து, நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று என கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம்  போரால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்  மற்றும்  தோழமை அமைப்புகளுடன் இணைந்து ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. நேற்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் ஆர்ப்பாட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று 2வது நாளாக நடைபெற்றக் கொண்டிருக்கும் இந்த  சத்தியாககிரக போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள்  ஆதரவு வழங்கி கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் கொழும்பிலிருந்து செயற்படுகின்ற ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்இ ஊடகவியலாளர்கள் சிலரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டக் களத்தில் இணைந்துகொண்டனர். பல்வேறு ஊடக அமைப்புக்களும் இன்றைய தினம் அங்கு விஜயம் செய்து இந்தப் போராட்டத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

வளர்ச்சியடைந்த நாடுகளினதும்,  வளர்ந்து வரும் நாடுகளினதும் கடந்த கால வரலாற்றில் அரசியல் சமூக மாற்றங்கள் யாவற்றிற்குமான போராட்டங்களின் முன்னோடிகளாக - முன்னணியினராக - முதுகெலும்பாக அடக்குமுறைகளுக்கு  முகம் கொடுத்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடிய தொழிலாளர்களும், பாமர பாட்டாளி மக்களுமேயாவர். உலக வரலாறுகள் இந்த சாதாரண குடிமக்களின் குருதியினால்தான் வரையப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த பல சகாப்தங்களாக குடிமக்கள் அவ்வப்போது பதவியிலிருந்த அரசாங்கங்களினால் மாறி மாறி ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். தாங்கள் ஏமாற்றப்படுவதை உணரமுடியாத வகையில் எமது அரசியல்வாதிகளும் அரசாங்கத்திற்கு அனுசரணையாகவே தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இன்றும் அந்த அணுகுமுறையையே தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகின்றனர். 

வடக்கு-கிழக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்ட்ங்களுக்கு ஆதரவாக "இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்கள் காணிகளை வழங்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களையும் இரத்துச் செய்யக்கோரியும், காணாமல் போன உறவுகள் தொடர்பில் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர கோரியும்" இன்று சமவுரிமை இயக்கத்தினால் கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கபட்டது. இதில் வடக்கு-கிழக்கில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இடதுசாரிகள், மனித உரிமை அமைப்புகள் கலந்து கொண்டன.

இன்று (14-03-2017) கிளிநொச்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களில், தெற்கில் இருந்து வருகை தந்திருந்த சமவுரிமை இயக்கம் மற்றும் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்புகளை சேர்ந்த அறுபதுக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

மக்களின் அடிப்படை உரிமைகளில் முக்கியமான இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவையினை  உலக வங்கி மற்றும் IMF இன் திட்டத்திற்கு அமைய படிப்படியாக காசுக்கு  விற்பனை செய்ய முயலும் செயற்பாட்டின் ஒரு வெளிப்பாடே சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி. சயிட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை உடனடியாக இழுத்து மூடக்கோரி இன்று (13-03-2017) கொழும்பில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.

மாலபே போலி பட்டக்கடையை இழுத்து மூடு!.

போலித் தீர்வுகளை வேண்டாம்,  சயிட்டத்தை இழுத்து மூடு! 

கல்வி 6% ஒதுக்கீடு  வழங்கு!

பல்கலைக்கழக சேர்க்கை அளவை அதிகரி!

ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்இ மருத்துவ பீட மாணவர்கள் 'நடவடிக்கைக் குழுஇ பல்கலைக்கழக கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இன்றைய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

சம உரிமை இயக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நீதி மற்றும் நேர்மையுடன் தீர்த்து வைக்க கோரி போராட முடிவு எடுத்துள்ளது. சமவுரிமை இயக்கம் தனது போராட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் நோக்கத்தில் இன்று (13-03-2017) யாழில் ஊடகவியலாளர் கூட்டத்தை கூட்டியிருந்தது. சமவுரிமை இயக்கத்தின் சார்பில் கபிலன் சந்திரகுமார் ஊடகவியலாளர் கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தார்.

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல், சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஸ்ரீதரன் திருநாவுக்கரசு, சமூக நீதி அமைப்பின் சார்பில் அன்ரன் மற்றும் எழுத்தாளர் கருணாகரன் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்கள்.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், யுத்தத்தை நடாத்திய மகிந்த அரசு போய்  தற்போது ரணில் - மைத்திரி அரசு வந்து இரு வருடங்களிற்கு மேலாகி விட்டது. ஆனாலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

இன்று ஆட்சியில் வீற்றிருக்கும் ரணில் - மைத்திரி அரசு ஜனநாயகத்தை வழங்குவதாகவும், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நீதி மற்றும் நிவாரணம் வழங்குவதாகவும் வாக்குறுதி கொடுத்தே வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் வடக்கு கிழக்கில் யுத்த சூழ்நிலைக்கு நிகராக தொடர்ந்தும் முப்படைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

ஜனநாயகத்திற்க்காக தொடர்ச்சியான குரல் கொடுத்து வந்த பேராசிரியர் சாய்பாபா உட்பட ஐவருக்கு இந்திய நீதிமன்றம் ஆயட்கால தண்டனை விதித்துள்ளதனை பிரித்தானிய இந்திய தொழிலாளர் சங்கம் வன்மையாக கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஜனநாயகத்திற்காக எழும் குரல்களை நசுக்கி பரிகசிக்கும் இந்திய நீதித்துறையினை கண்டிக்கின்றோம்.

UAPA போன்ற கொடூரமான சட்டங்களை ரத்து செய்!

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

இந்திய மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில்,  தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி என் சாய்பாபவிற்கு 7 மார்ச் 2017 அன்று வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை அதிர்ச்சியூட்டும் அநியாயமாகும்.  நீதிமன்றம் பேராசிரியர் G.N. சாய்பாபா அவர்களையும் மற்றும் ஐவரையும் கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தின், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) தண்டனை விதித்துள்ளது. 

பத்திரிகையாளர் -  சமூக ஆர்வலர் பிரசாந்த் ரஹி,  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஹேம் மிஸ்ரா மற்றும் பழங்குடியினர் பாண்டுவின் Nartoe, மகேஷ் டிர்கி மற்றும் விஜய் டிர்கி ஆகியவர்களே ஏனைய தண்டனை விதிக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் ஆவர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் "சொல்லாடல்" நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை வைத்துக் கொண்டே தமிழ்த் தலைமைகளை போட்டுத் தாக்கியதை பார்த்து பலரும் பரவசம் அடைந்திருக்கிறார்கள். "இவங்களை இப்படித் தான் கிழிக்க வேண்டும்" என்று முகப்புத்தகத்தில் பதிவுகள் போட்டு புல்லரிச்சுப் போய் புளகாங்கிதம் அடைகிறார்கள். தமிழ் மக்களிற்கான கட்சிகள், தலைமைகள் என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களின் எதிரிகளுடன் கட்டித் தழுவும் இந்தப் பிழைப்புவாதிகளை எதிர்க்கிறீகள். நல்லது; ஆனால் எங்கேயோ இடிக்குதே.

கிளிநொச்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் இன்று சமவுரிமை இயக்கம் பங்குபற்றி தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான யூட் சில்வா புள்ளே அவர்களின் தலைமையில் போராட்ட கொட்டிலுக்க வருகை தந்த சமவுரிமை இயக்கத்தினர் தமது ஆதரவினை தெரிவித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். 

இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவ சேவை ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவும், மாலபேயில் அமைந்துள்ள சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை உடனடியாக இழுத்து மூடக்கோரியும் மக்கள் - மாணவர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கொழும்பு வீதிகளில் இன்று நடாத்தினர். விஜயராம, களனி, வத்தளை, தெகிவளை ஆகிய நான்கு பிரதேசங்களில் இருந்து மக்கள் - மாணவர்கள் இணைந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கொழும்பு நகரத்தின் மையப்பகுதியான கோட்டையினை நோக்கி புறப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தி இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்: அமெரிக்கா தமிழ் மக்களின் பக்கம் நின்று நியாயம் பெற்றுக் கொடுக்கும் என்று இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள பிழைப்புவாத தமிழ்த் தலைமைகள் ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை நாடகம் நடக்கும் போது கொஞ்சமும் கூச்சமின்றி பொய் சொல்லுவார்கள். இந்த பொய்யர்களை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரையின் மறு பிரசுரம்.

ஈராக் போருக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. மேற்குநாடுகளின் ஊடகங்களில் அமெரிக்க மந்திரிகள் உலக சமாதானத்திற்கான போர் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று ஊளையிட்டார்கள். பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல் 4இல் அப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டோலீசா ரைஸ் அப்படியான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது யாழ்ப்பாணம் சென்று வந்த ஜோன் சிநோ (John Snow) தான் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தினார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு" இன்று காலி நகரத்தில் பெண்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டது. சர்வதேச மகளிர் தினத்தை ஒரு நினைவு நாளாக அல்லாது புதிய தொடக்கமாக "எதிர்காலத்திற்காக போராடுவோம்" என்னும் கருப்பொருளில் பாடல்கள், தெருமுனை கூட்டங்கள், துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE