Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள் வீதியில் இறங்கி இதை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என ஆரம்பித்த மக்கள் செயற்பாடுகளை உள்ளூர் அரசியல் வாதிகள், அவர்களின் குண்டர்கள், போலீஸ், இராணுவம் என தமது அரசியல் பலத்தை பாவித்து தாக்கினர், அடக்கினர், செயற்பாட்டாளர்களை சிறை வைத்தனர். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பல்வேறு கதைகளை கூறிச்செல்வர். குப்பையை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கப்போகிறோம். ஒப்பந்தம் தயார், குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்போகிறோம், எரிபொருள் உற்பத்தி செய்யப்போகிறோம், டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது என பல்வேறு கதைகள்.

இன்று மாலை 3 மணியளவில் கொலன்னாவை பிரதேசத்தில் அமைந்துள்ள  மீதொட்டமுல்ல மக்கள் குடியிருப்புகளிற்கு அருகே உள்ள குப்பைமேடு சரிந்து வீழ்ந்து, பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலர் பலத்த காயங்களிற்கும் உள்ளாகி உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக மீதொட்டமுல்ல வாழ் மக்களும், சமூக அமைப்புகளும் குடியிருப்புகளிற்கு அருகே கொட்டப்பட்டு வந்த குப்பை கழிவுகளை அகற்றிடக்கோரி பல போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயேசுவின் முதல் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான ஜூதாஸ் இஸ்காரியட் முப்பது வெள்ளிக்காசுகளிற்காக யூத தலைமைக்குருக்களிடமும், ரோம அதிகாரிகளிடமும் பஸ்கா பண்டிகை நேரத்தில் இயேசு கிறிஸ்துவை கன்னத்தில் முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான் என்று மார்க், மத்தியு என்ற சீடர்கள் எழுதிய ஆகமங்கள் (கொஸ்பல்) குறிப்பிடுகின்றன. இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) அன்று கல்லறையில் இருந்து வெளி வருகிற கதையின் நம்பியாராக யூதாஸ் இருக்கிறான்.

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றைய தினம் 45 ஆவது நாளில் சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்டு விட்டு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். 

யாழ். மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம் இன்று 45 ஆவது நாளாகவும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 51 ஆவது நாளாகவும், அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் 45 ஆவது நாளாகவும், திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் 42 ஆவது நாளாகவும் தமக்கான நியமனங்களைக் கோரி மழை, வெயில் பாராமல்   கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரின் வேலை கேட்டு போராடும் தொடர் சத்தியகிரகம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது. கறுப்பு உடை, பட்டி அணிந்து வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள மணிக்கூடு கோபுரத்தின் முன்னாள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  

கடந்த ஞாயிறு (09) இரவு ஐபிவோகோம, பூஞ்சிக்களமவை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய வர்த்தகரை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றுள்ளனர். T-56 மற்றும் பிஸ்டல் ஆயுதங்களுடன் வெள்ளை வானில் சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை பண்டாரவளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரியப்படுத்தி இரவு 7 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து தனது கணவன் புஸ்பகுமார பியகமவுடன் அரை மணிநேரத்திற்கு மேலாக கதைத்து கொண்டிருந்து விட்டு, தன்னை தண்ணீர் தரும்படி கேட்டதாகவும், தான் தண்ணீர் கொண்டு வர சென்ற போது தனது கணவனை வெள்ளை வானில் ஏற்றி சென்று விட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு தனது கணவன் எங்கே என அறியத்தரும்படி கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களை கசக்கிப் பிழிந்து சுரண்டிய வரிகளின் மூலம் பெற்ற மூலதனத்தையும், தமிழ் மக்களின் உழைப்பையும் கொண்டு எழுப்பிய கோவில்களில் தமிழ் வழிபாட்டு மொழி அல்ல. தமிழிற்கும், தமிழ் மக்களிற்கும் எந்த வித தொடர்பும் இல்லாத சமஸ்கிருதம் தான் வழிபாட்டு மொழி. கல்லையும், மண்ணையும் கடும் வியர்வை சிந்தி காவிச் சென்று கோவிலைக் கட்டிய உழைப்பாளிகளின் வழி வந்தவர்களில் சிலர் கோயிலிற்குள் போகலாம். ஆனால் அவர்கள் கட்டிய மூலஸ்தானத்திற்குள் அவர்கள் போக முடியாது. போகக் கூடாது. இன்னும் சிலருக்கோ கோயிலிற்குள்ளே கூடப் போக முடியாது. ஒடுக்கப்படும் மக்கள், பகுத்தறிவு அமைப்புக்கள், முற்போக்கு இயக்கங்களின் பெரும் போராட்டங்களின் பின்பு தான் மிக அண்மைக் காலங்களில் தான் கோயில் வழிபாட்டு உரிமை பெறப்பட்டது.

முல்லைத்தீவில் அரசியல் கைதிகள் விடுதலை கோரியும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை கண்டு அடைய கோரியும், அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள வழங்கக்கோரியும் பல நாட்களாக இடம்பெற்று கொண்டிருக்கும் சத்தியாகிரக போராட்டங்களில் இன்று (07/04/2017) சமவுரிமை இயக்கத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கி இருந்தனர்.

1971ம் ஆண்டு ஏப்பிரல் எழுச்சி வீரர்களின் 46வது ஞாபகார்த்த நாள் இன்று முன்னிலை சோசலிச கட்சியால் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு அவிசாவளை, தங்காலை மற்றம் குருணாகலை நகரத்தில் இடம்பெற்றது.

தங்காலை நகரத்தில் குழுமிய இடதுசாரிகள் செங்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று, சணச மண்டபத்தில் ஒன்று கூடி எழுச்சி வீரர்களை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வுகளில் புபுது ஜயகொட, சேனாதீர குணதிலகா உட்பட பலர் உரையாற்றினார்கள். 

கடந்த பெப்ரவரி மாதம் முதல் வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இரவு பகலாக தொடர்ச்சியான சத்தியாயககிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக பட்டபடிப்பை முடித்தவர்களிற்கு அரசாங்கம் வேலை வழங்குவதனை கைவிட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையின்றி தவிக்கின்றனர். தமக்கு நீதியான தீர்வை அரசாங்கம் முன்வைத்து நடைமுறைப்படுத்தும் வரை தமது போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றனர். 

அரசு தனது பொருளாதார கொள்கைக்காக மலையக பெண்களை மட்டுமன்றி நாட்டில் அனைத்து பிரதேச பெண்களையும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பில் ஈடுப்படுத்த அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி மஜ்கெலியா நகரில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று (2/4/2017) ஈடுபட்டிருந்தனர்.

அண்மையில் மஸ்கெலியா பிரதேசத்தில் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்று பிணமாக கொண்டு வரப்பட்ட மொட்டிங்கஹம் தோட்டம், பிரவுன்ஸ்விக் என்ற முகவரியில் வசித்த கந்தையா தர்ஷனி குடும்பத்தாரையும், மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரிந்து பாதிக்கபட்ட மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த பெண்களுடைய குடும்பங்களையும் இணைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாலதி நிசாந்தன் என்னும் திருகோணமலையைச் சேர்ந்த பெண் மரணம் அடைந்திருக்கிறார். வேலையற்ற பட்டதாரியான மாலதி நிசாந்தன் வறுமை காரணமாகவும், வேலையில்லாததினால் ஏற்பட்ட மன அழுத்தங்களினாலும் தற்கொலை செய்திருக்கிறார். திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் அங்கத்துவராக இருந்து அச்சங்கத்தினரால் நடத்தப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக கலந்து கொண்டிருந்திருக்கிறார். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தவர்கள் தமது அஞ்சலிகளையும், கவலைகளையும் தெரிவித்திருக்கிறார்கள்.

சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர் தலைவர்களை உடன் விடுதலை செய்!

இந்தியாவில் அமைந்துள்ள ஜப்பான் நிறுவனமான மாருதி–சுசுகி ஆலையின் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கும் நாம், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய ஆட்சியாளர்களை வலியுறுத்துகின்றோம். 2012ல் இந்தியாவின் புதுடில்லி நகரை அண்மித்த ஹரியானா மாநிலத்தில் மனேசார் மாருதி சுசுகி மோட்டார் கார்களை பொருத்தும் ஆலையில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின்போது, அந்நிறுவனத்தின் மனிதவள முகாமையாளரொருவரின் இறப்பு சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் 18ம் திகதி வழங்கப்பட்டது. அதன்படி 13 தொழிலாளர்களுக்கு ஆயுள்தண்டனையும், 4 பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 வருடங்களும் என தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 12 பேர் மாருதி சுசுகி தொழிற்சங்கத் தலைவர்களாவர்.

தமிழ் மக்களைக் கொன்ற இனவாதக் கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார்கள். ஏகாதிபத்தியங்களுடன் கொஞ்சிக் குலாவும் புலம்பெயர் தேசத்து தமிழ் மாபியாக் கும்பல்களும் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். நடைமுறையிலே எந்த வேலையையும் செய்ய முடியாத திண்ணைப் பேச்சு வீரர்களோ சுயநிர்ணயத்திற்கு காணி உறுதி போல கட்சி உறுதி ஏதாவது வைத்திருக்கிறதா என்று தேடுகிறார்கள். பொருத்தம் கருதி இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம்.

கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் மக்களால் பரவலாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்களிற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கத்தினரால் கடந்த 17ம் திகதி ஆரம்பித்த ஒரு வாரகால அடையாள எதிர்ப்பு சத்தியாககிரக போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய தினம் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒத்த ஆட்சியையே மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விசனப்பட்டதுடன்; ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இன்றைய ஆட்சியாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

"அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!", "சகல காணாமலாக்கல்களையும் உடன் வெளிப்படுத்து!", "நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று!", "பயங்கரவாத தடுப்பு சட்டம் உட்பட சகல அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்!"  ஆகிய கோசங்களை முன்வைத்து  கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம் ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்து இன்று 6வது நாள். இன்றைய எதிர்ப்பு போராட்டத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது தார்மீக ஆதரவினை வழங்கியிருந்தனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE