Language Selection

பி.இரயாகரன் - சமர்

ஏதோவொரு காரணத்தால் நிறுத்தப்பட்ட எனது உரை!

கனடா சமவுரிமை வெளியிட்ட "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற நூல் மீது, 19.04.2026 யாழ்ப்பாண விமர்சனக் கூட்டம் நடக்கவிருந்தது. இறுதி நேரத்தில் எனது உரை கூட்ட ஏற்பாட்டாளர்களால்;  நிறுத்தப்பட்டது. அங்கு ஆற்றவிருந்த எனது உரை, இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.


கலை இலக்கியமானது சமூகம் சார்ந்ததாக இருக்க முடியும் என்று கூறி, ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட சமூகப் பிளவை யார் மறுக்கின்றனரோ, அவர்களே ஒடுக்கும் வர்க்கத்தினது கலை இலக்கியத்தைப் படைக்கின்றனர். இவர்கள் தங்கள் சமூகப் பார்வையை மூடிமறைக்க இலக்கியத்துக்குச் சமூக உள்ளடக்கமற்ற அழகியலாக, கலை உத்தியாகப் பூசி மெழுகுகின்றனர்.

தனிமனித முரண்களை, சமூக முரண்களை.. அனைத்தும் தழுவிய முரண்களிலிருந்து தனியாக்கி, முரணுள்ள சிந்தனைக்குள் - வாழ்வியலுக்குள் குறுக்கிக் காட்டி விடுகின்றனர்;. இது தான் ஒடுக்கும் தரப்பின் சிந்தனைமுறை. இரக்கம், அன்பு, பரிதாபம்… போன்ற மனிதவுணர்வுக்குள் ஒளித்துக்கொள்கின்றனர். முரணிலிருந்து விடுபடுவதற்கான வாழ்வியலைக் காட்டுவதில்லை.          

வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் அரசியலானது. அரசியல் கடந்த இலக்கியம் என்பது, வடிகட்டிய பொய். அழகியலே இலக்கியம் என்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அழகியல் என்பது, உள்ளடக்கத்தை முன்வைக்கும் வடிவங்களையே வேறுபடுத்துகின்ற உத்தியாகும். உள்ளடக்கத்தை வேறுபடுத்துவதல்ல உத்தி. உள்ளடக்கம் ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட, இந்த இரண்டில் ஒன்றாக இருக்க முடியும்.

"சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்" எது சட்டியில் இருக்கின்றதோ, அதுவே அகப்பையில் வரும். இது தான் எங்கும் தளுவிய உண்மையாகும்.

வாழ்நிலை தான் உணர்வுகளைத் தீர்மானிக்கிறதே ஒழிய, உணர்வுகள் வாழ்நிலையைத் தீர்மானிப்பவை அல்ல! வாழ்க்கை கடந்த கற்பனையில் உணர்வுரீதியில் முற்போக்காக வாழவும் சிந்திக்கவும் முடியாது. போலியாகப், புரட்டுத்தனமாக ஏமாற்றுவது, கலை இலக்கியப் படைப்பிலும்; நடக்கின்றது.

படைப்பாளிக்குச் சமூகம் குறித்து என்ன சமூகப் பார்வை உள்ளதோ, அதுதான் அவரின் படைப்பாகின்றது. மனித சமூகம் ஒடுக்கும், ஒடுக்கப்பட்ட இரு முரண்கூறுகளுடன் இயங்குகிறபோது. படைப்பாளி இதில் எதைச் சார்ந்து நிற்கின்றார் என்பது, அவரின் படைப்பில் பிரதிபலிக்கும்.

அன்றாட மனித வாழ்வில் ஏற்படும் முரண்பாடுகளும், அதற்கான தீர்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை சமூகத்தின் பொதுத் தீர்வாக இருக்க முடியுமா என்றால் இல்லை. உதாரணமாக கடவுளிடம் முறையிடுதல் மூலம் சுயதீர்வு காணுதல், தற்கொலை மூலம் தன்னை அழித்துத் தீர்வு காணுதல் … இதுபோன்றவை சமூகத் தீர்வாக இருக்க முடியாது. தீர்வு என்பது முழுமையில் முரணற்ற வகையில் அணுகுதலே. இதைச் சொல்லும் விதம் அழகியல் மற்றும் உத்தி.       

இந்த வகையில் இந்தக் கதைகள் மீதான எனது விமர்சனங்கள், அரசியல் உள்ளடக்கம் மீதே. குறித்த கதைக்குரிய அழகியல்கள் மீதானதல்ல.

இங்கு உள்ளடக்கம், அழகியல்.. இன்றி இலக்கியம் கிடையாது. இரண்டும் இருந்தால், அதை விமர்சிக்கக் கூடாது என்பது இலக்கியவாதிகளின் பொதுப்புத்தியாகவும், சிந்தனைமுறையாகவும் இருக்கின்றது.

முரண்பாடுகளைக் கதைக் கருவாக்கிவிட்டால், முரண்பாடு குறித்த கதையாசிரியரின் பார்வையை அங்ககீகரிக்க வேண்டும் என்பது இலக்கியப் பொதுப் புத்தியாகும்.  கதை முன்னிறுத்தும் கருவுக்குரிய முரண்பாடு பற்றி, சமூகத்தில் பலவிதமான கருத்துகள் காணப்படும் என்பதை இலக்கியவாதிகள் மறுக்கின்றனர். அனைத்தும் தழுவிய வகையில் முரணற்ற வகையில் முரண்களைக் காணவும், காட்டவும் மறுக்கின்றனர். உதாரணமாக வர்க்கம், சாதி, இனம், பால்… உள்ள முரண்களை, முரணற்ற சமூகக் கூறாக மாற்றும் இலக்கியத்தை, அதாவது சமவுரிமையை கொண்ட மனிதத்தன்மையை மறுதளிக்கும் இலக்கியங்கள் இருப்பதை மறுதளிக்கின்றனர்.

இதனால் சமூக முரண்பாடு சார்ந்து கதைகள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. கதையின் உள்ளடக்கம் மீதான விமர்சனத்தைத் தவிர்க்க அழகியலையும், உருவத்தையும், உத்தியையும்..  முன்னிறுத்திப் பேசுகின்றனர். உள்ளடக்கத்தை விமர்சிப்பதை, இலக்கியம் மீதான வரட்டுப்பார்வை என்று கூறித் தப்பிக்க முனைகின்றனர்;.

இலக்கியக் கரு மூலம் முன்வைக்கும் சமூகப் பார்வை முரணுள்ளதாக இருக்க முடியாது. சமூகம் பொதுவாக ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட கூறாகப் பிளவுண்டுள்ளது. எந்தக் கருவாக இருந்தாலும், இதைத் தாண்டியிருப்பதில்லை. கருவை ஒடுக்கும் அல்லது ஒடுக்கப்பட்ட முரண்பாட்டுக்குள் பூசி மெழுகுவது என்பது, ஒடுக்கும் தரப்புக்கான இலக்கியமாகும்;. 

மனித ஏற்றத்தாழ்வைப் போற்றுவது உன்னதமான அழகியலாக இருந்தாலும் இவை இன்றைய உலகத்தின் ஒடுக்கும் வர்க்கத்தின் கோட்பாடே!

மனிதனின் கண்ணுக்குத் தெரியும் புற - அக அழகைப் போற்றுவதும் - நியாயப்படுத்தும் கோட்பாடுகள், அனைத்தும் இந்தச் சுரண்டும் உலகின் வெவ்வேறு வடிவங்களாகும். உழைக்கும் மானிடப் பண்பை, சமூக இயக்கத்தை, சுயநலமற்ற வாழ்வியல் கூறை, மனிதநேயத்தை, மனிதப்பண்பை, வாழ்வியல் நேர்மையை, தன்மானத்தை, போராடும் பண்பை, சக மனிதனை மதிக்கும் பண்பை, அன்பை, ஆதரவை, அச்சமின்மையை, தேடும் பண்பை. முரணற்ற வகையில் இலக்கியத்தில் காண வேண்டும். பொதுப் புத்தியில் எதையும் காணவும், காட்டவும் கூடாது.

நாம் வாழும் முதலாளித்துவச் சமூக அமைப்பிலும், சிந்தனைமுறையிலும் தனிமனித வாதமும், மனிதக் குரோதமும், தனிமனிதத் தீர்வுகளும், சுயநலமும், தான் அல்லாதவரைச் சுரண்டுதலும் ஒடுக்குதலும், தேசங் கடந்த  நுகர்வுவெறியும், சமூக வெறுப்பும், தான் அல்லாத உயிர்களை வாழ் தகுதியற்றதாகக் கருதும் பொது மனப்பாங்கு.. கொண்ட பொதுப் புத்தியும், பொதுச் சிந்தனையும் சமூக ஓட்டத்தில் காணப்படுகின்றது. இதுவே கலை இலக்கியத்தில் பிரதிபலிக்கின்றது.

இதை மூடிமறைக்க முற்படும்போது உதாரணமாக இயக்க மற்றும் அரசு வன்முறைகளை எதிர்ப்பது, நிலப்பிரபுத்துவப் பண்பாட்டுக் கலாச்சாரங்களை எதிர்ப்பது, ஏகாதிபத்தியம் சார்ந்த ஜனநாயகம், சுதந்திரம் என்ற மாமூல் முதலாளித்துவக் கண்ணோட்டத்தை முன்வைப்பதை..  கலை இலக்கியமாக்குகின்றனர். குறிப்பாக இலங்கைச் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுரத்துவ எச்ச சொச்ச முரண்பாடுகளை முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் அணுகுவது மூலம், தமக்குப் போலியான முற்போக்கு முகமூடியை அணிந்து கொள்கின்றனர்.

"அன்பின் வழியது உயிர்நிலை" என்ற சிறுகதை பிற்போக்கான யதார்த்தமான மாமூலை நிராகரித்து உண்மையான சமூகத்தைக் கண்டறிய முயலுகின்றனரா எனப் பார்ப்போம். 

கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரையான, யாழ் வெள்ளாளிய சமூகத்தை விமர்சிப்பது தற்குறிகளுக்கு அச்சமூட்டுவதாக மாறியிருக்கின்றது. சுயமாகச் சிந்திக்கவும், பகுத்தறிவுபூர்வமாக விவாதிக்கவும், தர்க்கிக்கவும் அறிவும், நேர்மையும், சமூக அக்கறையும் வேண்டும்.

ஜனநாயகம் குறித்தும், சுதந்திரம் குறித்தும் தெளிவும், அதற்கான சமூகப்பண்பும் மனிதநாகரீகமும் வேண்டும். தமிழினவாதம் முன்வைக்கும் வெள்ளாளியத் தமிழனுக்கு இவை கிடையாது.

புலியால், தமிழினவாதத்தால், சாதியால், மதவாதத்தால் ..  உருவேற்றப்பட்ட வன்முறையையே, மாற்றுக்கருத்துக்குத் தீர்வாகக் கருதும் தற்குறிகளுக்கு, மனிதத்தன்மை கடுகளவும் இருப்பதில்லை. மாறாக மனித வெறுப்புக்கொண்டு, பாசிசமே அதன் குணாம்சமாக வெளிப்படும். பொதுவாக பணத்துக்காகக் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமே, தமிழினவாதத்தை, புலியிசத்தை முன்வைத்துக் கூச்சலிடுகின்றது.

இந்தக் கூட்டமே அண்மைக்காலமாக அருண்சித்தார்த்தை இலக்குவைத்துத் தொடர் மிரட்டல்களை விடுத்தவர்கள், இன்று நேடியான வன்முறைக்குள் இறங்கியுள்ளனர். அருண்சித்தார்த் வீடு - அலுவலகம் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் செயலைத் தூண்டியவர்களும், இதில்; ஈடுபட்டவர்களும்.. புலிப் பாசிச தேசியத்தால் தற்குறியாக்கப்பட்ட லும்பன்களே.

1986 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள், இயக்கங்களின் ஜனநாயக விரோதத்துக்கு எதிராகப் போராடிய போது, புலிப் பாசிட்டுகள் போராடுபவர்களை எல்லாம் கொன்று வந்தனர். விஜிதரன் புலிகளால் காணாமலாக்கப்பட்டதை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராடியபோது, நடந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் விமலேஸ்வரனுடன் கலந்து கொண்ட எங்கள் செல்வநாயகம் இன்று எம்முடன் இல்லை. 

19.11.1986 அன்று உண்ணாவிரதம் தொடங்க முன் ஆற்றிய உரை. (நன்றி :- இலங்கை தமிழர் போராட்ட வரலாறு : அரசியல் அனாதைகள் - பக்கம் 191)  

19.11.1986 : "எங்களுக்கு சிங்களத் துப்பாக்கி தமிழ் துப்பாக்கி என்ற வேறுபாடு கிடையாது" - செல்வநாயகம்

"என் உயிரினும் இனிய அன்புத் தோழர்களே! உங்களுக்கு என் அன்பான வணக்கம்."


மனநோயாளியான அம்சிதான், ஆசிரியரை பாலியல்ரீதியாக வன்முறை செய்தாள். இதுதான் மனநோயென்று கூறுகின்றவர்களின் குற்றச்சாட்டு.

அரசாங்கமே பாராளுமன்றத்தில் அம்சிக்கு மனநோயாளி என்று கூறியதைக் கேட்டு, மீண்டும் தற்கொலை செய்ய அம்சி இன்று உயிருடன் இல்லை. நாட்டில் சட்டமும், நீதியும்.. இப்படித் தான் இயங்குகின்றது. 

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், இந்த நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு குரல் கொடுத்து நீதி வழங்கும் இலட்சணம் இது. பாராளுமன்ற பன்றிகள் (ஒரு சிலர் தவிர), சலசலப்பின்றி அமர்ந்திருக்கும் காட்சிகள். இனவாத, மதவாத உடையணிந்து பாராளுமன்றம் வந்த எதிரக்கட்சிகள், பதவி விலகக் கோரி வெளிநடப்புச் செய்யவில்லை.         

மறுபக்கம் மக்கள் நீதி கேட்ட போராடக் கூடாதாம்! போராடுவது என்பது சட்டம் ஓழுங்கை கையிலெடுப்பதாம்! சமூக வலைத்தளத்தில் குரல் கொடுப்பது வன்முறையாம்! பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்திடம் வரவேண்டுமாம்! அரசாங்கத்திடம் வராவிட்டால் நீதியைக் கேட்கும் உரிமையில்லையாம்!

இவைதான் ஊழல் ஒழிப்பு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாக, ஆட்சிமுறையாக இருக்கின்றது. முந்தைய அரசாங்கங்களுக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் என்ன வேறுபாடு? அதே அதிகாரிகள், அதே கெடுபிடிகள்,.. முகம் பார்த்து சலூட் அடிக்கும் சட்டமும் ஒழுங்குகளும். பெருச்சாளிகள் மாலையும் கையுமாக திரிய, புதிய அரசாங்கம் மாலைக்காக, புகழுக்காக தலைகுனிந்து மண்டியிட்டுத் திரிகின்றது. அரசு நாள்தோறும் மாலையும் கையுமாக திரிகின்றனர். 

அடிப்படையான ஆதாரங்களற்ற, எந்தத் தரவுகளுமற்ற, சமூகக் கண்ணோட்டமற்ற, கற்பனையிலான அவதூறுகள், அடிப்படை உண்மைகளைப் புதைக்கின்ற பொதுச் செயற்பாடாக இருக்கின்றது. சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள்.. மூலம் ஜனநாயகம் என்ற பெயரில், எந்தச் சமூக அறமுமற்ற அவதூறுகள் விதைக்கப்படுகின்றது. செய்திகளின் பெயரில், கண்டுபிடிப்பின் பெயரில், ஊகத்தின் பெயரில் அவதூறுகளுக்குப் பஞ்சமில்லை.     
 
இத்தகைய அவதூறுகள்

1.    ஒருபுறம் உண்மைகளைப் புதைக்கின்றது.

2.    மறுபக்கம் பொய்களை விதைக்கின்றது.

இவை ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். எது உண்மை, எது பொய் என்ற வித்தியாசத்தை இல்லாதாக்குகின்றது.

இதன் மூலம் உண்மையான சமூகச் செயற்பாட்டை இல்லாதாக்குகின்றது. அவதூறு செய்பவர்களின் நோக்கம், சமூக நோக்கமாக இருப்பதில்லை. அதை அவர்களின் சொந்த நடைமுறையில் காணமுடியாது. ஆரசியற் கோட்பாட்டின் பெயரில் அவதூறுகளைச் செய்யும் போது, அந்த அரசியல் பொதுப்புத்தியிலான ஊகமான சொந்த காழ்ப்பிலான வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது.

பன்முகம் கொண்ட அவதூறுகளுக்கு மத்தியில் ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளை, துர்க்காபுரம் குறித்ததான அவதூறுக்கும் பஞ்சமில்லை. இந்த அவதூறானது அங்குள்ள உண்மைகளையும், கேள்விகளையும் மூடிமறைக்கின்றது.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் குளிக்குமிடம் கமராவின் கண்காணிப்பின் கீழ் இருந்ததான குற்றச்சாட்டு, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை சட்டரீதியான அரச அனுமதியின்றி தங்க வைத்த குற்றச்சாட்டு, சிறுமிகள் தப்பியோடிய சம்பவங்கள்.. குறித்தான குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணையறிக்கையை துர்க்காபுரம் இன்று வரை முன்வைத்தது கிடையாது

கடந்த வரலாற்றுப் போக்கில் பிள்ளையான் ஒழுங்கமைப்பட்ட குற்றங்களுடன் தொடர்புபட்டவன். மற்றொருவரைக் கைகாட்ட முடியாத அதிகாரத்துடன், வன்முறை வடிவங்களுடன் பயணித்த பிள்ளையான், யுத்தம் முடிவுக்கு வந்தபின் அதை நிறுத்தவில்லை.

பிரபாகரனின் மனிதவிரோத தொடர் குற்றங்களுக்கு தமிழ் தேசிய அரசியல் முலாம் பூசிய பாலசிங்கம் போல், பிள்ளையானின் குற்றங்களுக்கு கிழக்கு மய்யவாத அரசியல் முலாம் பூசியவர் ஸ்ராலின் என்று அழைக்கப்படும் ஞானம்.

புலிக்குப் பிந்தைய பிள்ளையானின் கிழக்குப் படுகொலைகள், பணத்துக்கான கடத்தல்களும் கப்பங்களும், பாலியலுக்கான கடத்தல்களும் படுகொலைகளும், சொத்துக்களுக்கான படுகொலைகள், அதிகாரத்துக்கான படுகொலைகள் .. என்று எண்ணிலடங்காத குற்றங்கள் நடந்தேறின. இந்த வகையில் வவுனியாவில் சித்தார்த்தன், வடக்கில் டக்கிளஸ், இடைக்காலத்தில் பிரேமச்சந்திரன்.. தலைமையேற்ற மனிதவிரோத செயற்பாடுகள், புலிகளின் மனிதவிரோதத்தையும் மிஞ்சியிருந்தது. புலிகளுக்குத் தனிமனித நோக்கம் இருக்கவில்லை. அதாவது தனிநபர் பாலியல் நோக்கமும், தனிநபர் சொத்துக் குவிப்புக்கான நோக்கமும் குற்றங்களின் பின்னனியில் இருக்கவில்லை.       

குற்றங்கள் இனந்தெரியாத நபர்கள் என்ற பெயரிலும், புலிகளின் பெயரிலும் நடந்தேறியது. இதுவொரு உண்மை. இந்த உண்மையின் பின்னால் பிள்ளையான் இருந்ததும், பிடிபட்ட போது கையை விரித்ததும், சாட்சியங்களை அழிக்க சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கொன்றதும் என்று, எண்ணற்ற விடையங்களைக் கடந்த வரலாற்றுடன் இனம் காணமுடியும். 

"ஒரு நாள்
நீ இந்த வீட்டிற்குள் மெல்ல நடந்து வருவாய்
நான்
ஒரு நீண்ட ஆப்ரிக்க கவுன் அணிந்திருப்பேன்
உட்கார்ந்து நீ பேசத்தொடங்குவாய் "கருப்பு..."
உனது கையை எடுத்து எனதுள் வைத்துக்கொள்வேன்
நீ - என்னைக் கவனிக்காமலேயே, பேசிக்கொண்டிருப்பாய்,
"ஆமாம், இந்தச் சகோதரனை..."

மெல்ல உன் கையை என் தலையில் நழுவவிடுவேன்
சலிக்காமல் நீ உளறிக்கொண்டிருப்பாய் "புரட்சி இருக்கிறதே...?"
உனது கையை என் வயிற்றில் அழுத்திப் பிடித்திருப்பேன்
எப்போதும் போல நீ தொடர்ந்து கொண்டிருப்பாய்
"இது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை...?"

உனது கையால் எனது உடலை வருடிக்கொண்டிருப்பேன்
பிறகு மெல்ல உனது டாஸ்கியை உருவி எடுப்பேன்
அப்போது நீ சொல்வாய் 
"உண்மையில் நமக்கு இப்போது தேவைப்படுவது என்னவென்றால்..."

இப்போது நாவால் உனது கையை வருடிக் கொண்டிருப்பேன்
நீ "நான் அதை எப்படிப் பார்கிறேன் என்றால், இனி நாம்..."
உனது காற்சட்டைப் பொத்தான்களை அவிழ்த்திருப்பேன்
"சரி அந்த நிலையில் எப்படி..."

உனது உள்ளாடையை உருவி எடுப்பேன்
அப்போது உனது நிர்வாண நிலை
உனக்கு உறைக்கும்
உன்னை உனக்குத் தெரியும்
நீ வெறுமனே இப்படிச் சொல்லுவாய்
"நிக்கி இது எதிர்ப்புரட்சிகரமானதில்லையா ?"  

சோபசக்தி  11.12.1998 எச்சில் 4 பக்கம் 11இல்  "பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை குறித்த நினைவுக் கல்வெட்டு" இப்படித்தான் தொடங்குகின்றது. அ.மார்க்ஸ்சை இந்தியாவில் சந்தித்ததன் பின்பாக, ஈழப் போராட்டத்தில் புலிக்கும்  -  அரசுக்கும் எதிரான வர்க்க அரசியல் நிலைப்பாட்டை – செயற்பாட்டை தகர்க்க, பி.றயாகரன் முதலில் இலக்கு வைக்கப்பட்டார். சோபாசக்தியும் வேறு சிலரும் இணைந்து கொண்டு, வர்க்கத்தை – வர்க்க அரசியலை கருவறுக்கும்  எதிர்ப்புரட்சிக் கும்பல், கல்வெட்டுடன்  களமிறங்கியது. இந்தக் கல்வெட்டு பல பக்கங்களைக் கொண்டது. இன்று அவர் தன்னை மூடிமறைத்துப் புலம்பும் சோபாசக்தி, அன்று தன் நோக்கத்தை மூடிமறைக்க உளறியது முதற்கொண்டு, அவரின் கற்பிதக் கோட்பாடுகளையும் இந்தக் கல்வெட்டில் காணமுடியும். இந்தக் கல்வெட்டு வெளிவந்த சஞ்சிகையின் ஆசிரியர் குழு, இதனால் இரண்டாக உடைந்ததுடன், ஒரே பெயரில் - ஒரே இலக்கத்தில் இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தது. இதிலொன்று பின்னால் தன்னை உயிர்நிழல் என்று மாற்றிக்கொண்டது.

புஸ்பராணியின் போராட்டமும் - தியாகமும் உணர்வுபூர்வமானவை. போலித்தனமற்ற உன்னதமானது.  தான் நம்பிய சமூகக் கனவுகளுடன் பயணித்தவை. இந்தப் பயணத்தில் சிறைகள், சித்திரவதைகளை மட்டுமல்ல, சமூகரீதியான புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டவர். 

வரலாற்றில் போராட வந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னோடியாவார். யாழ்ப்பாண ஆணாதிக்கக் கலாச்சார மரபுகளை மீறியவர். அடங்கியொடுங்கவே பெண் என்ற தமிழ் கலாச்சார அடையாளத்தைத் தகர்த்தவர். யாழ் மையவாத வெள்ளாளியச் சமூகத்தின் ஆணாதிக்க  ஒழுக்க கலாச்சார வேலிகளுக்கும் - அவர்களின் பெண்கள் மேலான கண்ணோட்டதுக்கும் சவால் விடுத்தவர். ஒடுக்கும் சாதிகளின் அதிகாரத்தையும், அதன் திமிரையும் எதிர்த்து நின்றவர்.

ஒடுக்கும் சாதியால் வரையறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியில் அவர் பிறந்ததால், யாழ்ப்பாணத்தின் ஒடுக்கும் சாதிய சமூகத்தை எதிர்கொண்டு வாழ வேண்டுமென்பது சவால் மிக்கது, 1960 - 1970 வரை ஒடுக்கப்பட்ட சாதிகள் கல்வி கற்க அனுமதியில்லை. பொது இடங்களை பயன்படுத்த உரிமையில்லை. இதுதான் அன்றைய தமிழினவாதம் முன்வைத்த தமிழ்தேசியம்.

காதலென்பது என்ன? காதல் தோன்றிய வரலாற்றுச் சூழல் என்ன? 

மனித உழைப்பானது ஆணின் தனியுடைமையாகிய போது, பெண் வரைமுறையின்றிப் பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கபட்டாள்.  ஆணாதிக்க வரைமுறையற்ற பாலியல் சுரண்டலுக்கு எதிராக, பெண் தேர்ந்தெடுத்த உறவுமுறை தான் காதல். இதன் மூலம் தனியுடைமை ஆணின் பாலியல் சுரண்டலுக்கு எதிராக, பெண் தான் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனதாக்கினாள். இது மனித வரலாறு.

இன்று அந்தக் காதலின் பெயரில், வரைமுறையற்ற பாலியல் சுரண்டலை ஆண்கள் நடத்த முடிகின்றது. காதலின் பெயரில் பெண்ணைப் பாலியல் ரீதியாக சுரண்டுவது, கைவிடுவது ஆணாதிக்க சமூகத்தில் நடப்பதும் - அதற்கு எதிரான பெண்ணின் போராட்டமும் சமூகத்தில் காணமுடியும்.
 
இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆணாதிக்கமானது, பரஸ்பரம் செக்ஸ் தாண்டி எமக்கு இடையில் எதுவும் இருக்காது, இருக்கவும் கூடாது என்ற நிபந்தனையுடன், பாலியல் வேட்டையில் அறிவுத்துறை சேர்ந்த ஆணாதிக்கவாதிகள் தமக்கான சொந்தக் கோட்பாட்டை உருவாக்குகின்றனர். கொடுக்கல் வாங்கலற்ற இந்த பாலியல் வேட்டையை மூடிமறைக்க, அதை காதல் என்கின்றனர். "இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" என்கின்றனர். இதைக் கேள்விக்குள்ளாக்க முடியாத "தனிப்பட்ட தேர்வு" என்கின்றனர்.

அமெரிக்காவின் வரிக் கொள்கை என்பது, தனியுடமைவாத முதலாளித்துவம். சுதந்திரமான சந்தை என்ற முதலாளித்துவத்தின் முரணற்ற முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சந்தை என்பது கட்டுப்பாடற்றதாக, சுதந்திரமானதாக, ஜனநாயகபூர்வமானதாக இருக்கவேண்டும் என்பதே, முதலாளித்துவமாகும். இதைத்தான் டிரம்ப் நேரடியாக – மறைமுகமாக முன்வைத்திருக்கின்றார். இதைப் புரட்சிகரமானது என்கின்றார். இப்படிப்பட்ட முரணற்ற முதலாளித்துவத்தை பிற ஏகாதிபத்தியங்களும், முதலாளித்துவ நாடுகளும், முதலாளித்துவவாதிகளும், தனியுடமைவாதிகளும்.. எதற்காக, ஏன் எதிர்த்துப் புலம்ப வேண்டும்?

தனித்தனி நாடுகளுக்குள் சுதந்திரமான சந்தைக் கோட்பாட்டை முன்வைத்துள்ள முதலாளித்துவவாதிகள், நாடுகளுக்கிடையில் இதை மறுப்பது ஏன்? தங்கள் சொந்த தேசிய – ஏகாதிபத்திய பொருளாதாரம் சிதைந்துவிடும் - மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துவிடும் என்ற ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் முதலாளித்துவவாதிகள்,  தங்கள் சொந்த நாடுகளில் சிறுவுடமைகளையும் - அது சார்ந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தை தங்கள் நாட்டு பெருவுடைமை சார்ந்து ஒழித்துக் கட்டியவர்களே. இன்று வேசம் போட்டுக்கொண்டு, உலக பெருமூலதனம் சார்ந்த தங்கள் திவாலை மூடிமறைக்க, ஒப்பாரி வைக்கின்றனர்.

ஒரு ஆணுக்குள்ள உரிமையே பெண்ணுக்குமான உரிமையாகும். இந்த உரிமையைப் பெண்ணுக்கு மறுத்து, ஆணுக்கு மட்டும் உரியதென்றால், அதுதான் தமிழ் தாலிபானிசம். இந்த தாலிபானிசமானது, மனிதனின் அடிப்படை ஜனநாயகத்தையே மறுக்கின்றது. ஆண் - பெண் என்ற இயற்கையான வேறுபாட்டைக் கொண்டு, தங்கள் ஆணாதிக்க அதிகாரத்துக்காக பெண் அடிமைகளை உருவாக்குகின்றது. 

இந்த அடிமைத்தனம் என்பது வரலாற்று ரீதியானது. தீட்டு, துடக்கு என்று தொடங்கிய அடக்குமுறையானது, இன்று வரை பூனூல் போட்டு குடும்பத்துப் பெண் பூசாரியாகவே முடியாது. இந்த அடிமைத்தனத்துக்கும், கொடுமைகளுக்கும்.. பல வரலாற்றுப் படிக்கற்கள் உண்டு.      

கலாச்சாரம் தொடங்கி விமர்சனம் வரை, ஆண் - பெண்  என்று இருதரப்புக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இதைவிடுத்து பெண்ணுக்கு மட்டுமென்றால், ஆணாதிக்க தமிழ் தாலிபானிசமே. கலாச்சாரம் என்பது பொதுவானது, அதை விடுத்து பெண்ணுக்கு மட்டும் தான் கலாச்சாரம் என்றால், இழிவாகத் தரம் தாழ்ந்த சமூகத்தின் சுய நடத்தையாகும். 

இந்தத் தமிழ் தாலிபான் கலாச்சாரமானது பாலியலில் வரைமுறையற்ற கட்டாக்காலி ஆணாதிக்க பாலியல் அத்துமீறலை ஆதரிக்கின்றது. இதற்காக பெண்ணை குற்றம் சாட்டுகின்றது. இந்த ஆணாதிக்க கழிசடைத்தனத்தை புலியிசத்தின் மூலம் கோருகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE