26
Wed, Jun

அன்னையரே, புதல்வியரே,

சகோதரிகளே, தோழியரே...

மேலும் ஒரு நாள்

மீளவும் வந்தது மார்ச் 8

என்றும்போல்

சமைப்பது, அழகுபடுத்துவது

ஆடைகளைத் தயார்படுத்துவது

மேலும் பல

பெண்களுக்கு அதுதானே வேலை!

Read more: %s

பெண்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்க்காக போராட பெண்கள் விடுதலை இயக்கம் இன்று களுத்துறை வீதிகளில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. பங்குனி -08 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களை தமக்கு எதிரான ஆணாதிக்க அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பவற்கு எதிராக போராட இந்த பிரச்சார நடவடிக்கை அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய தினம் காலியில் ஆரம்பித்து இன்று களுத்துறை நாளை கொழும்பு நாளை மறுநாள் கம்பகா என இந்த எதிர்காலத்துக்காக போராட அழைக்கும் பிரச்சார நடவடிக்கை தொடரவுள்ளது.

Read more: %s

சர்வதேச பெண்கள் தினத்தை (8 பங்குனி) முன்னிட்டு, இன்று 5ம் திகதி  காலியில் பெண்கள் விடுதலை இயக்கம் (சுதந்திரத்திற்க்கான மகளிர் அமைப்பு) பெண்களின் விடுதலைக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளது. காலி பஸ் நிலையத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சாரம் பின்னர் காலி நகரம் அதனைத் தொடர்ந்து மகமோடரா மற்றும் டாடில்லா பகுதிகள் ஊடாக ஊர்வலமாக சென்றது. குடும்பத்தில், வேலை இடங்களில், தொழிற்சாலைகளில், மலையகத்தில் பெண் என்ற வகையில் முகம்கொடுக்கும் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பெண்களை விளம்பரப் பொருளாகவும் போகப் பொருளாகவும் அடிமையாகவும் தான் இன்றைய சமூகம் பாவிக்கின்றது. இதிலிருந்து மாற்றத்தைக் காண பெண்கள் போராட வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரச்சாரத்தை இன்று முன்னெடுத்திருந்தனர்.

Read more: %s
Page 2 of 2