28
Fri, Jun

சமவுரிமை இயக்கத்தினரால் நேற்று மாலை 3:30 மணியளவில் யாழ் நூலகத்தில் அமைந்துள்ள உணவுச்சாலை கேட்போர் கூடத்தில்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கம் இடம்பெற்றது.

சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சந்திரகுமார் கபிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர முதலிகே, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி நிவாஸ், சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், சமவுரிமை இயக்க செயற்பாட்டாளர்கள் யூட் சில்வா புள்ளே, தர்மலிங்கம் கிருபாகரன், பூபாலபிள்ளை சந்திரகுமரன் உட்பட அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியளார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Read more: %s

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சமவுரிமை இயக்கமானது நாடுமுழுவதும் சுவரொட்டிப் பிரச்சாரம் மற்றும் அரசியல் கைதிகைளின் விடுதலை பற்றிய கோரிக்கைகளை முன்வைக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.

Read more: %s

யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டன. யுத்தத்தை முன்னின்று நடாத்திய புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் சுதந்திரமா நடமாடுகின்றனர். இறுதி நேரத்தில் சரணடைந்த பலர் புனர்வாழ்வு முகாம்களிற்கு அனுப்பப்பட்டு விடுதலை பெற்றுள்ளனர். ஆனால் புலிகளுக்கு உதவியவர்கள், புலியாக இருக்குமோ என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள்  மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களிற்க்காக கைது செய்யப்பட்ட மலையக-முஸ்லீம் - சிங்கள  செயற்பாட்டாளர்கள் எந்த நீதியும் இன்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Read more: %s

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி பல போராட்டங்களை தொடர்ச்சியாக சமவுரிமை முன்னெடுத்து வருகிறது. போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவது தமிழ் - சிங்கள மொழிகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளது.

Read more: %s

சமவுரிமை இயக்கம்  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! பயங்கரவாத தடைச் சட்டத்தை இனியாவது நீக்கு ! என்ற இரு கோரிக்கைகளை முன்னிறுத்தி  மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தியது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக  (இன்று) 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

Read more: %s

More Articles …