24
Mon, Jun

அன்புக்குரிய அன்னையே, தந்தையே, தோழரே, தோழியரே…

முழு வாழ்க்கையையும் நாசமாக்கிய யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்டன. நீங்களோ நாங்களோ இந்த யுத்தத்தை உருவாக்கவில்லை. இவ்வாறான கொடூர யுத்தத்தை உருவாக்கியதற்கு உங்களில் யாரும் பொறுப்பாளிகளல்ல.

அந்த யுத்தம் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இல்லாமலாக்கியது. வாழ இடமின்றி காணி, வீடு, கால்நடைகள் ஆகியவற்றை பறித்து உங்களை நிர்க்கதியாக்கியது.

யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களிற்கு பின்பும் இராணுவம் பறித்துக் கொண்ட மக்களின் காணிகளை அந்த மக்களிடம் ஒப்படைக்கவில்லை. நாசமாக்கிய சொத்துக்களுக்கு இன்று வரை 5 சதம் கூட இழப்பீடாக கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி எவ்வித நீதி விசாரணைகளும் இல்லை. அரசியல் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுமில்லை.

Read more: %s

யாழ். பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (04/07/2016) காலை முதல் யுத்தப் பாதிப்புகளுக்கு இழப்பீடுகளை வழங்குமாறும், இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி, சமவுரிமை இயக்கத்தினர் கையெழுத்து வேட்டையை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அநேகமான மக்கள் கையெழுத்திட்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

Read more: %s

எதிர்வரும் சனிக்கிழமை 23/04/2016 அன்று பிற்பகல் 3 மணி முதல் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள வெஸ்ட்மினிஸ்ரர் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு சமவுரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை, குமார் குணரத்தினத்தின் விடுதலை – பிரஜாவுரிமை – அரசியல் செய்வதற்க்கான உரிமை மற்றும் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள குடியேற்றுமாறு வலியுறுத்தியும் நிலப்பறிப்பினை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

Read more: %s

நேற்றைய தினம் சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளையினர் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் உறுதி செய்வதற்க்கான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல் ஒன்றினை கரோ பகுதியில் நடாத்தி இருந்தது. சமவுரிமை இயக்கத்தின் அழைப்பினை ஏற்று பல அரசியல் அமைப்புக்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், இணையத்தள எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் என தமிழ்-சிங்கள-முஸ்லீம் இனத்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Read more: %s

கனடா சமவுரிமை இயக்கம் முன்னெடுத்த இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யக் கோரும் போராட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக அமைந்த ஊடகவியலாளர் மகாநாடு ஸ்காபுரே சிவிக் மண்டபத்தில் மாசி மாதம் 27ம் திகதி மாலை மூன்று மணியளவில் நடாத்தப்பட்டது. இலங்கையிலும் புலம்பெயர் ஜரோப்பிய நாடுகளிலும் இப்போராட்ட நடவடிக்கைகள் தெடர்ச்சியாக நடத்தப்பட்டுகொண்டிக்கும் இவ்வேளையில் புலம்பெயர் இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது.

Read more: %s

More Articles …