சம உரிமை இயக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நீதி மற்றும் நேர்மையுடன் தீர்த்து வைக்க கோரி போராட முடிவு எடுத்துள்ளது. சமவுரிமை இயக்கம் தனது போராட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் நோக்கத்தில் இன்று (13-03-2017) யாழில் ஊடகவியலாளர் கூட்டத்தை கூட்டியிருந்தது. சமவுரிமை இயக்கத்தின் சார்பில் கபிலன் சந்திரகுமார் ஊடகவியலாளர் கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தார்.
புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல், சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஸ்ரீதரன் திருநாவுக்கரசு, சமூக நீதி அமைப்பின் சார்பில் அன்ரன் மற்றும் எழுத்தாளர் கருணாகரன் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்கள்.