கனடா சமஉரிமை இயக்கத்தினரால், "இஸ்லாமிய அச்சக்கோளாறு! இஸ்லாமிய எதிர்ப்புணர்வு!" எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று ஸ்காபரோ சிவிக் சென்ரறில் கடந்த 7ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வின்சர் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் விரிவுரையாளராக இருக்கும் பாதிமா காதர், சைலான் முஸ்லீம் ஒழுங்கமைப்பின் பிரதிநிதித் தலைவர் சமீம் முகம்மட், கலாநிதி சுல்பிகா இஸ்மாயில் ஆகியோர் இதில் உரையாற்றினர்.
இஸ்லாமிய அச்சக்கோளாறும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்
எதிர்வரும் சனிக்கிழமை (07/03/2015) அன்று கனடா ஸ்காபரோ சிவிக் சென்றரில் "இஸ்லாமிய அச்சக்கோளாறும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்" என்னும் தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.
புதிய அரசிடம் சமவுரிமை இயக்கத்தின் கோரிக்கைகள்
சமவுரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் அறிக்கை
22.01.2015 இன்று மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் சமவுரிமை இயக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின்பதான நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில், கொள்கை அளவில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமவுரிமை இயக்க அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான தர்மலிங்கம் கிருபாகரன், எஸ்.எம்.கிரிசாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.
டென்மார்க்கில் நடந்த சம உரிமை இயக்கத்தின் இலக்கை நோக்கி "வசந்தத்தை தேடுகிறோம்" விழா
15.11.2014 சனி அன்று, டென்மார்க்கின் கொல்ஸ்ரப்புறோ நகரில் சம உரிமை இயக்கத்தின் "வசந்தத்தை தேடுகிறோம்" விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சம உரிமை இயக்கத்தின் செயல் வடிவமான இனவாதம் - மதவாதம் - குலவாதம் என்ற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்துகளும், நிகழ்வுகளும் மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.
கலந்துரையாடல்: இலங்கை அரசியலில் சமவுரிமைக்கான போராட்டமும் இடதுசாரிகளின் நிலைப்பாடும்
இந்த கலந்துரையாடலில் பல முக்கிய தோழர்கள் கலந்து கொள்கிறார்கள்.