நேற்றைய தினம் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற சதுக்கத்திற்கு அருகாமையில் சமவுரிமை இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "அரசியல் கைதிகளை விடுதலை செய்" போராட்டம் சர்வதேசத்து மக்களின் கவனத்தை ஈர்க்குமுகமாக நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிங்கள- தமிழ் மக்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பி அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரினர்.
"அரசியல் கைதிகளை விடுதலை செய்!" - பாரிஸ் போராட்டம் (படங்கள்)
பாரிஸ் இபிள் (Eiffel Tower) ரவருக்கு அருகாமையில் நேற்றைய தினம் (14/06/2015) இலங்கை சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரி போராட்டம் இடம்பெற்றது.
"யாவரும் கேளிர்" கனடா நிகழ்வு (படங்கள் இணைப்பு)
கனடா சம உரிமை இயக்கத்தின் முதலாவது கலாச்சார நிகழ்வான "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு 13,06,2015 அன்று ஸ்காபுறோ சிவிக் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதலில் வரவேற்புரை மூத்த இடதுசாரியும் சமூக சிந்தனையாளருமான திரு மார்க் சூசை அவர்களால் வழங்கப்பட்டது.
பிரான்ஸில் இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக தாமதமின்றி விடுதலை செய் என்ற கோசத்தை முன்வைத்து சமவுரிமை இயக்கம், 14.06.2015 ஞாயிறுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை Palce Trocaderor வில் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
சமவுரிமை இயக்கம் (பிரான்ஸ்)
"யாவரும் கேளிர்" கலை நிகழ்வு: சமவுரிமை இயக்கம் (கனடா)
எதிர்வரும் 13ம் திகதி (ஜீன் - ஆனி மாதம்) சனிக்கிழமை அன்று கனடாவில் "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்நிகழ்வினை சமவுரிமை இயக்கத்தின் கனடா கிளை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கையில் நிலவுகின்ற இன ஒடுக்குமுறைக்கு எதிராக பெரும்பான்மை இன சிங்கள உழைக்கும் மக்களை அணிதிரட்டி, சகல இன மக்களுக்கும் சமவுரிமையினை உறுதி செய்யுமுகமாக கடந்த சில வருடங்களாக சமவுரிமை இயக்கம் பல போராட்டங்களை நடாத்தி வருகின்றது.