திங்கள் 25ம் திகதி காலை 10 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. சமவுரிமை இயக்கம் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. இப்போராட்டமானது சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற சகல காணாமல்லாக்கல்களையும் வெளிப்படுத்தக்கோரியும் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் பொங்கல் விழா (படங்கள்)
சமவுரிமை இயக்கினரால் இன்று பாரிஸில் நடாத்தப்பட்ட பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இனம் - மதம் - சாதி கடந்து; தமிழ்-சிங்கள்-பிரஞ்சு மொழிகளில் ஒன்று கலந்த உரையாடலுகளுடன் கலை நிகழ்வுகளுடன் அனைவரும் கூடி நடந்திய விழாவாக சிறப்புற நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திருந்தனர்.
பாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு
நாளை ஞாயிறு காலை 9 மணிக்கு பாரிஸில் சமவுரிமை இயக்கத்தினர் பொங்கல் விழா கொண்டாட இருக்கின்றனர். உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள் தமது உழைப்பினையும் அதன் விளைவையும் கொண்டாடுவதே பொங்கல் விழாவாகும். இந்த வருட பொங்கல் விழாவினை மொழி, சமயம், சாதி வேறுபாடுகளை கடந்து இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரையும் ஒன்றிணைத்த கொண்டாட்டமாக கொண்டாட பாரிஸ் சமவுரிமை இயக்கத்தின் கிளை அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.
அரசின், அரசியல் கைதிகளின் நிலைப்பாடு குறித்து சமவுரிமை இயக்கம் பத்திரிகையாளர் கூட்டம்
ஜனாதிபதி அவர்கள் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இல்லை, அங்கு உள்ள 215 கைதிகளும் தண்டனைக்குள்ளானவர்களே. எனவே அரசியல் கைதிகள் விடுதலை பற்றி எவரும் கதைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனும் தொனிப்பட் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் சிறைச்சாலை பதிவுகளின் படி இந்த கைதிகள் சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்கு காரணமான யுத்தத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதே உண்மை.
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! சுவிஸ் போராட்டம் (படங்கள்)
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், இன்று (19.12.2015) சுவிற்சர்லாந்து சமவுரிமை இயக்கத்தினால், Zurich நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் இடதுசாரிய கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.