இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரச படைகள், புலனாய்வு பிரிவினர், துணை ராணுவக்குழுக்களால் கைது செய்யப்பட்டும்- கடத்தப்பட்டும் காணமல் போனோர் தொடர்பான தகல்களை வெளிப்படுத்த கோரியும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் யாழ்.பிரதான பேரூந்து நிலையம் முன்பாக சமவுரிமை இயக்கத்தினரால் ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. >
யாழில் நடைபெறும் "எனினும் நாம் பறப்போம்" கலாசார விழா படங்கள்
சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் யாழில் "எனினும் நாம் பறப்போம்" கலாசார விழா நேற்றைய தினம் 30ம் திகதி செப்டம்பர் ஆரம்பித்து நாளை 2ம் திகதி ஒக்டோபர் வரை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழரின் பாராம்பரிய இசையான பறை முழக்கத்துடன் ஆரம்பித்த இந்த விழா; தெரு நாடகம், புகைபடக் கண்காட்சி, சினிமா என பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. விழா படங்கள் இங்கே...
“எனினும் நாம் பறப்போம்” கலாசார விழா
யாழ்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் அரசியல் கலாசார விழா எதிர்வரும் செப்டம்பர் 30ம் திகதி மற்றும் அக்டோபர் 1ம், 2ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
1. புகைப்படக் கண்காட்சி - இனவாதம் மற்றும் சாதியவாதத்திற்கு எதிரான இரு புகைப்படக் காட்சிகள் உள்ளடக்கம்.
2. கார்ட்டூன் - கார்ட்டூன் காட்சிகள்
யாழ்ப்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் மூன்று நாள் கலை விழா!
யாழ்ப்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் மூன்று நாள் கலை விழா!
"வசந்தத்தை தேடி"
செப்டம்பர் 23, 24, 25
நிகழ்வுகளுக்கான குறிப்பான நேரங்கள் மற்றும் இடங்கள் பின்னர் அறியத்தரப்படும்
நிகழ்ச்சி நிரல்
1.சமவுரிமை இயக்கத்தின் கடந்தகால செயற்பாடுகள் - கண்காட்சி
2.இனவாதத்திற்கு எதிரான புகைப்படக் கண்காட்சி
3.இனவாதம் குறித்து சித்திரக் கண்காட்சி
இன்னொரு அழிவிற்கு முன்
சில நாட்களுக்கு முன்பு யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசுபொருளாகியிருக்கின்றது. வழமைபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப இனவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த சம்பவத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றாக சம உரிமை இயக்கம் கருதவில்லை. பல வருடங்களாக விதைக்கப்பட்டதைத்தான் இன்று அறுவடை செய்கின்றார்கள். எமது நாடு இனவாத எரிமலைக்கு மேல் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினால் அதில் தவறு கிடையாது. அது அடிக்கடி வெடிக்கின்றது. சமீபத்திய வெடிப்புதான் யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்தது.