சமவுரிமை இயக்கத்தினரால் நேற்று மாலை 3:30 மணியளவில் யாழ் நூலகத்தில் அமைந்துள்ள உணவுச்சாலை கேட்போர் கூடத்தில்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கம் இடம்பெற்றது.
சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சந்திரகுமார் கபிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர முதலிகே, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி நிவாஸ், சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், சமவுரிமை இயக்க செயற்பாட்டாளர்கள் யூட் சில்வா புள்ளே, தர்மலிங்கம் கிருபாகரன், பூபாலபிள்ளை சந்திரகுமரன் உட்பட அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியளார்கள் என பலர் கலந்து கொண்டனர்.