சம உரிமை இயக்கத்தின் போராட்டக்குழுவினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய ஒழுங்குபடுத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது இன்று கொழும்பில் புறக்கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்னராக முதன் முதலில் சிங்கள உழைக்கும் வர்க்கத் தோழர்களினால் சிறுபான்மை இனத்தவரின் உரிமைக்கான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் பின்னால் இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் செயல்பாட்டின் ஊடாக காணமுடிகின்றது.
யாழ் -மாணவர் விடுதலை கோரி சம உரிமை இயக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
முன்னிலை சோஷலிச கட்சியின் முன்னணிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் இனவாதத்திற்றிற்கு எதிராக இயங்கும் அமைப்பான சமவுரிமை இயக்கம், மார்கழி 18 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை, கொழும்பு புகையிரத நிலையத்திற்கு எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளது.
பாசிச அரசிற்கு எதிராக போராட நாட்டின் சகல மக்களையும் அழைக்கின்றோம்! பத்திரிகையாளர் மாநாட்டில் ரவீந்திர முதலிகே அழைப்பு!
சமவுரிமை இயக்கத்தின் பத்திரிகையாளர் மநாடு பகுதி 1
தெற்கில் இருக்கும் சிங்களவர்கள் அனுபவிக்கும் உரிமைகள் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இல்லை.அது அரச பாதுகாப்பு படையினரால் பறிக்கப்பட்டுள்ளது.வடக்கில் உரிமை கேட்டு போராடுபவர்களுக்கு ஒயில் வீசப்படுகின்றது, கடத்தப்படுகின்றார்கள், கொலைசெய்யப்படுகின்றார்கள். இவை அனைத்தையும் அரச படைகளே செய்து கொண்டிருக்கின்றது. குடும்பங்களை புகைப்படம் எடுக்கும் திட்டத்தை உலகில் ஜேர்மனியில் உள்ள நாசிகளே முதலில் பாவித்தார்கள். அதே மிலேச்சத்தனமான நடவடிக்கையையே ராஜபக்ச அரசாங்கம் பயன் படுத்துகின்றது. நீங்கள் உரிமை கேட்டு பேச வேண்டாம் மீறி பேசினால் உங்களை கொலைசெய்வோம்.
சமஉரிமை இயக்கத்தின் விசேட பத்திரிகையாளர் மாநாடு
சமஉரிமை இயக்கத்தினால் நடாத்தப்பட்ட விசேட பத்திரிகையாளர் மாநாடு இன்று காலை பத்து மணியளவில் கொழும்பு மருதானை சமூக மற்றும் மதங்கள் கேந்திர நியைத்தில் நடைபெற்றது. இம்மாநாடு தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் பற்றியும் தென்பகுதி மக்களுக்கு விளக்கும் ஊடகப் பிரச்சாரமாகவும் சமஉரிமை இயக்கம் முன்னெடுத்துள்ளது. இதில் சகல தமிழ்-சிங்கள ஊடகங்களும் கலந்து கொண்டன.
ஒன்றுபடுவோம் உரிமையை வெல்வோம் - சம உரிமை இயக்கம்
சம உரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளார் ஜுட் பர்னாந்து புள்ளே தனது உரையில் இந்த நாட்டு குடிமக்களை சிங்களவர்தமிழர்முஸ்லீம்கள் என்று பிரித்து வைத்து ஆள்வதே இவ்வளவு காலமும் இந்த நாட்டை ஆண்ட மற்றும் ஆளும் அரசாங்கங்களின் நோக்கமாக இருக்கிறது.