இலங்கை இனவாத அரசின் திட்டமிட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் மண் அபகரிப்பை நிறுத்தக் கோரியும், இராணுவ ஆட்சியை நீக்கக் கோரியும் சமஉரிமை இயக்கத்தினால் மட்டக்களப்பு நகரில் இன்று இடம்பெற்ற கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு கையெழுத்து இட்டதாக அங்கிருத்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த குழப்பம் சிங்கள - முஸ்லிம்
சம உரிமை இயக்கதினால் நாடு பூராகவும் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களுல் ஒரு நிகழ்வாக நேற்று ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள என்.எம். பெரேரா ஞாபகார்த மண்டபத்தில் ஏன் இந்த குழப்பம் சிங்கள - முஸ்லிம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள சிங்கள,முஸ்லிம்,தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே...
பாரிஸ் சம உரிமை இயக்கத்தின் கூட்ட செய்தி (படங்கள் இணைப்பு)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சமவுரிமைக்கான அறிமுகக் கூட்டம் 10.02.2013 நடைபெற்றது. அண்ணளவாக 125இற்கு மேற்பட்ட தமிழ், சிங்கள மொழி பேசுகின்றவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தினை தொடர்ந்து கலந்துரையாடல் ஆரோக்கியமாக நடைபெற்றது. முரண்பட்ட அரசியல் கருத்துக்களை கொண்ட பலர் மத்தியில் இணைந்து செயற்படும ஆர்வம் காணப்பட்டது. விரைவில் வீடியோ வெளியிடப்படும்.
அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம்
2009 மே மாதத்தில் அரசாங்க ஆயுதப் படைகளினால் எல்.டீ.டீ.ஈ.யின் தலைமை, அதன் உறுப்பினர்கள் உட்பட பெருவாரியான சாதாரண தமிழ் மக்களின் மரண ஓலத்தோடும், படுகொலையோடும் பல தசாப்தங்களாக நீடித்த வந்த யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்தகால கட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் இனவாதத்தையும் ஒவ்வொரு இன மக்கள் மத்தியிலும் போர்க்குணத்தையும் புகுத்தி அதன் தீவிர யுத்தச் செயற்பாட்டின் மூலம் இந்த வெற்றி வெளியிடப்பட்டது. யுத்தத்தின் முடிவு வீரதீரமிக்க சிங்கள இனவாதத்தின் வெற்றியாக சிங்கள இனவாதிகளால் கொண்டாடப்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கம் அந்த யுத்த வெற்றிக்கான உரிமையை தன் கையில் எடுத்து அதனை தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு போஷனை செய்து, தனது இருப்பிற்கான முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.
புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்
புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்
பிரான்ஸ் :CHANTIER - 24 Rue Antoine julien henard - 75012 Paris. (Metro: Montgallet ou Reuilly Diderot ) என்னும் முகவரியில் 10.02.2013 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.