30
Sun, Jun

நேற்றைய தினம் லண்டனில் சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் இலங்கையின் மூவினங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இப்படியான சகல இன மக்களும் ஓரிடத்தில் கூடி அரசியல் குறித்து கலந்துரைடிய நிகழ்வு முன்னர் எப்போதும் சாத்தியமானதாக இருந்ததில்லை. சம உரிமை இயக்கத்தின் ஜரோப்பிய முன்னணி செயற்பாட்டாளர்களான தோழர்கள் நியூட்டன், நுவான் இருவரும் மூவின மக்களும் இணைந்து சகல இனம், மதம் சார்ந்த ஒடுக்கு முறைகளிற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம் குறித்தும், இனவாதம் மதவாதத்திற்கு எதிரான பரந்து பட்ட மக்கள் இயக்கம் ஒன்றின் தேவை குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.

Read more: %s

2009ம்ஆண்டு பேரழிவுக்கு பின்னால் இலங்கையில் தொடருகின்ற அரசியல் நிலவரத்தில், சமவுரிமை இயக்கத்தின் அவசியமும் அதன் தேவையும் குறித்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு உங்களை அழைக்கின்றோம்

இந்நிகழ்வு எதிர்வரும் 22ம் திகதி சனிக்கிழமை (பெப்ரவரி) காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நியூமோல்டனில் நிகழவுள்ளது

Read more: %s

இனவாதச் சேற்றுக்குள் மூழ்கியுள்ள சமகால இலங்கை அரசியல் சூழ்நிலையில் அதைக் களைந்தெறிய முற்பட்டுள்ள சமவுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்வாறு 22-12-ல் பாரிஸில் நடைபெற்ற சமவுரிமை இயக்க நிகழவில் கலந்து கொண்டு பேசிய "ஓசை" மனோ குறிப்பிடட்டுள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகள் பற்றி அமெரிக்க மேற்குலக நாடுகள் உட்பட ஏனைய சர்வதேசத்திடமும் சொல்லியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் நலன்களுக்காவே தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசி நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆனால் தமிழ் சமூகமும் அதன் தலைமையும் இதுவரை சொல்லாத இடம் சாதாரண சிங்கள மக்களிடம் மட்டுமேயாகும். அம்மக்களின் ஏகப்பெரும்பான்மையோருக்கு தமிழ் மக்கள பிரச்சினைகள் பற்றி சரிவரத் தெரியாது. இவைகளை சரிவர அம்மக்களுக்கு எட்டப்பட வைப்பின் அவர்களே இலங்கையின் சகல இனவாதங்களையும் முறியடிப்பர் எனக்குறிபிட்டார்.

Read more: %s

டென்மார்க்கில் கொல்ஸ்ரோபுறோ நகரில் 14.12.2013, சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ், சிங்கள தோழர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் டென்மார்க் சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான தோழர் லோகன் செல்லம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றியிருந்தார். அவரது உரையினை இங்கு வாசகர்களுடன் பகிர்கின்றோம்.

இலங்கையின் பாசிச அரச கட்டுமானத்தாலும், வர்க்கச் சமூகப் போக்கினாலும், ஒடுக்கி அடக்கப்பட்ட அனைத்து மக்களும் இணைந்த விடுதலையில் நின்று.., குறிப்பாக கடந்த ஐந்து தசாப்தங்களாகப் போராடி, தொலைந்துபோன - உயிர்நீர்த்த அனைத்துப் போராளிகளையும், மக்களையும் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சம உரிமை போராட்ட இயக்கத்தினால், இலங்கையில் மனித உரிமைகளைக் கோரி (14.12.2013) டென்மார்க், கொல்ஸ்ரபுறோ நகரில் இன்று இடம்பெறுகின்ற பொதுக் கூட்டத்தில் சம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கை மூலம், இலங்கையின் அரச பாசிசத்தால் அல்லற்படும் அனைத்து மக்களையும், அப்பாசிச வடிவங்களை எதிர்க்கின்ற ஜனநாயகப் போராட்டத்திற்கு உங்களை அழைப்பிடுகின்றது.

Read more: %s

நேற்றைய தினம் (15/12/2013) சம உரிமை இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மனித உரிமை தின கூட்டம் லண்டன் கரோ பகுதியில் இடம் பெற்றது. சீரற்ற காலநிலை நிலைவிய போதும், அறுபதிற்கும் அதிகமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் இலங்கையில் இடம்பெற்ற சகல அடக்கு முறைகளிற்கும் எதிராக போராடி மரணித்த போராளிகளிற்கும் பொது மக்களிற்கும் இரு நிமிட மௌன அஞ்கலியுடன் கூட்டம் ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து சமஉரிமை இயக்கத்தின் சார்பில் தோiர்கள் சீலனும் நுவானும் முறையே தமிழிலும் சிங்களத்திலும் உரையாற்றினர்.

Read more: %s

More Articles …