அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சமவுரிமை இயக்கமானது நாடுமுழுவதும் சுவரொட்டிப் பிரச்சாரம் மற்றும் அரசியல் கைதிகைளின் விடுதலை பற்றிய கோரிக்கைகளை முன்வைக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.
அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! - யாழில் கருத்தரங்கு
யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டன. யுத்தத்தை முன்னின்று நடாத்திய புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் சுதந்திரமா நடமாடுகின்றனர். இறுதி நேரத்தில் சரணடைந்த பலர் புனர்வாழ்வு முகாம்களிற்கு அனுப்பப்பட்டு விடுதலை பெற்றுள்ளனர். ஆனால் புலிகளுக்கு உதவியவர்கள், புலியாக இருக்குமோ என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களிற்க்காக கைது செய்யப்பட்ட மலையக-முஸ்லீம் - சிங்கள செயற்பாட்டாளர்கள் எந்த நீதியும் இன்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு தளுவிய ரீதியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பிரச்சாராம்: சமவுரிமை இயக்கம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி பல போராட்டங்களை தொடர்ச்சியாக சமவுரிமை முன்னெடுத்து வருகிறது. போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவது தமிழ் - சிங்கள மொழிகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்! - சமவுரிமை இயக்கம் கொழும்பில் போராட்டம்.
சமவுரிமை இயக்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! பயங்கரவாத தடைச் சட்டத்தை இனியாவது நீக்கு ! என்ற இரு கோரிக்கைகளை முன்னிறுத்தி மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தியது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக (இன்று) 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் இறுதிவரை போராட, நாங்கள் தயார்!
சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களே
அனைவரும் கேளுங்கள்...
எல்லோருடைய உரிமைகளை
வென்றெடுக்கமுன்னே வாருங்கள்.....
இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! - கொழும்பில் போராட்டம்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி நாளை 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
வசந்தத்தைத் தேடுகிறோம் நிகழ்வு (டென்மார்க்: படங்கள்)
3-10-2015 அன்று டென்மார்க் கொஸ்ரபரோவ் நகரில் ஜரோப்பிய சமவுரிமை அமைப்புக்கள் ஒன்றிணைந்து வசந்தத்தை தேடுகிறோம் கலை கலாச்சார நிகழ்வு ஒன்றினை நடாத்தியிருந்தனர்.
"வசந்தத்தைத் தேடுகின்றோம்" கலை நிகழ்வு: டென்மார்க்
வசந்தத்தை தேடிச் செல்வோம்!
இன்றைய நவதாராளமய முதலாளித்துவம், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு அழிக்கின்றது என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது . இந்த அளவு எதிர்ப்பு இருந்தாலும் நவதாராளமய முதலாளித்துவம் வீழ்த்து விடாமல் இருப்பது எப்படி? எதிப்புக் காட்டுபவர்களை அடக்கியும், கோட்பாட்டு மாயைகளினால் நெருக்கடியை மறைத்தும் நவதாராளமயம் நிலைத்து நிற்கின்றது. வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிச் செயற்படும் இவ்வாறான சித்தாந்தங்கள் உண்மையான எதிரிகளை மறைப்பதற்கு, போலி எதிரிகளை உருவாக்கவே முன்னுரிமை அளிக்கின்றன.