"அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!", "சகல காணாமலாக்கல்களையும் உடன் வெளிப்படுத்து!", "நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று!", "பயங்கரவாத தடுப்பு சட்டம் உட்பட சகல அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்!" ஆகிய கோசங்களை முன்வைத்து கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம் ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்து இன்று 6வது நாள். இன்றைய எதிர்ப்பு போராட்டத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது தார்மீக ஆதரவினை வழங்கியிருந்தனர்.
கொழும்பில் நடைபெறும் சமவுரிமை இயக்கதின் 2ம் நாள் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள்!
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்து, நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று என கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம் போரால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தோழமை அமைப்புகளுடன் இணைந்து ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. நேற்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் ஆர்ப்பாட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று 2வது நாளாக நடைபெற்றக் கொண்டிருக்கும் இந்த சத்தியாககிரக போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் ஆதரவு வழங்கி கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் கொழும்பிலிருந்து செயற்படுகின்ற ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்இ ஊடகவியலாளர்கள் சிலரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டக் களத்தில் இணைந்துகொண்டனர். பல்வேறு ஊடக அமைப்புக்களும் இன்றைய தினம் அங்கு விஜயம் செய்து இந்தப் போராட்டத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில், கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பமாகியுள்ளது
வடக்கு-கிழக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்ட்ங்களுக்கு ஆதரவாக "இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்கள் காணிகளை வழங்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களையும் இரத்துச் செய்யக்கோரியும், காணாமல் போன உறவுகள் தொடர்பில் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர கோரியும்" இன்று சமவுரிமை இயக்கத்தினால் கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கபட்டது. இதில் வடக்கு-கிழக்கில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இடதுசாரிகள், மனித உரிமை அமைப்புகள் கலந்து கொண்டன.
கிளிநொச்சி மக்கள் போராட்டங்களில் சமவுரிமை இயக்கம் பங்கேற்பு
இன்று (14-03-2017) கிளிநொச்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களில், தெற்கில் இருந்து வருகை தந்திருந்த சமவுரிமை இயக்கம் மற்றும் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்புகளை சேர்ந்த அறுபதுக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - சம உரிமை இயக்கம் யாழில் பத்திரிகையாளர் கூட்டம்
சம உரிமை இயக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நீதி மற்றும் நேர்மையுடன் தீர்த்து வைக்க கோரி போராட முடிவு எடுத்துள்ளது. சமவுரிமை இயக்கம் தனது போராட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் நோக்கத்தில் இன்று (13-03-2017) யாழில் ஊடகவியலாளர் கூட்டத்தை கூட்டியிருந்தது. சமவுரிமை இயக்கத்தின் சார்பில் கபிலன் சந்திரகுமார் ஊடகவியலாளர் கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தார்.
புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல், சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஸ்ரீதரன் திருநாவுக்கரசு, சமூக நீதி அமைப்பின் சார்பில் அன்ரன் மற்றும் எழுத்தாளர் கருணாகரன் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்கள்.
போராடும் மக்களுக்கு சம உரிமை இயக்கம் பூரண ஆதரவு!
2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், யுத்தத்தை நடாத்திய மகிந்த அரசு போய் தற்போது ரணில் - மைத்திரி அரசு வந்து இரு வருடங்களிற்கு மேலாகி விட்டது. ஆனாலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.
இன்று ஆட்சியில் வீற்றிருக்கும் ரணில் - மைத்திரி அரசு ஜனநாயகத்தை வழங்குவதாகவும், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நீதி மற்றும் நிவாரணம் வழங்குவதாகவும் வாக்குறுதி கொடுத்தே வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் வடக்கு கிழக்கில் யுத்த சூழ்நிலைக்கு நிகராக தொடர்ந்தும் முப்படைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்பு
கிளிநொச்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் இன்று சமவுரிமை இயக்கம் பங்குபற்றி தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான யூட் சில்வா புள்ளே அவர்களின் தலைமையில் போராட்ட கொட்டிலுக்க வருகை தந்த சமவுரிமை இயக்கத்தினர் தமது ஆதரவினை தெரிவித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
சமவுரிமை இயக்கத்தினரின் பாரிஸ் பொங்கல் விழா - படங்கள்
நேற்று 15-01-2017, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒன்று கூடிய சமவுரிமை இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் பொங்கல் விழாவினை கொண்டாடினர். இந்நிகழ்வில் இலங்கையின் மூவின மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து கோலாட்டம், நாடகம் மற்றும் பாடல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக "இனவாதம்" நாடகம் தமிழ் மற்றும் சிங்களம் மொழிகள் இணைந்தும் தமிழ், சிங்கள கலைஞர்கள் சேர்ந்து நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது பாரிஸ் சமவுரிமை இயக்கதினரின் இரண்டாவது பொங்கல் தின விழாவாகும்.