25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு-கிழக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்ட்ங்களுக்கு ஆதரவாக "இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்கள் காணிகளை வழங்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களையும் இரத்துச் செய்யக்கோரியும், காணாமல் போன உறவுகள் தொடர்பில் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர கோரியும்" இன்று சமவுரிமை இயக்கத்தினால் கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கபட்டது. இதில் வடக்கு-கிழக்கில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இடதுசாரிகள், மனித உரிமை அமைப்புகள் கலந்து கொண்டன.

எதிர்வரும் நாட்களின் ஊடகவியலாளர்கள், களைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இன்று ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரவுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளனர். 

அந்தவகையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் போரால் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது நியாயபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.