25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காணாமல் போனவர்களின்  தகவல்களை  உடன்  வெளியிடுமாறு கோரி சம உரிமை  இயக்கத்தின்  ஏற்பாட்டில் இன்று  யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில்   காலை 9.30 மணியளவில்   கொட்டும்  மழைக்கும் மத்தியில்  ஆர்ப்பாட்ட போராட்டம் ஆரம்பமானது.

கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் ஆகியோரின் தகவல்களை வெளியிடுமாறு  அரசாங்கத்திடம் வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில்  காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை உடன் வெளியிடுமாறும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை உடன்  விடுவிக்குமாறு  கோரியும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

இந்த போராட்டத்தில் தெற்கில் இருந்து வருகை தந்திருந்த சமவுரிமை இயக்க உறுப்பினர்கள் மற்றும் சமவுரிமை இயக்கத்தின் கருத்துக்களுடன் உடன்பட்டு செயலாற்றும் பௌத்த துறவிகள் கலந்து கொண்டு சிங்கள மொழியில் "காணாமல் போனவர்களை காட்டு" என கோசமிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்வுடைய கட்டுரைகள்

காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடு! யாழில் ஆர்ப்பாட்டம்

கைதிகளை விடுவிக்க சட்டம் தடையாக இருக்கின்றது என்பது உண்மையா?