25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘இனவாதத்திற்கு, மதவாதத்திற்கு மற்றும் குலவாதத்திற்கு எதிரான நாங்கள் மனிதர்கள்’ என்ற தொனிப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நடாத்தப்படும் கருத்தரங்குகள் வரிசையில் அடுத்த கருத்தரங்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் 9ம் திகதி பி:ப: 3.00 மணிக்கு கேகாலை தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கின்றது.

கேகாலை நகர சபை மண்டபத்தில் மேற்படி கருத்தரங்கை நடத்த முடிவு செய்து மண்டபம் ஒதுக்கப்பட்டிருந்த்து. ஆனால் மண்டபத்தை தர முடியாதென நகர சபைத் தலைவர் தொலைபேசியின் வாயிலாக அறிவித்திருந்தார். அதனை எழுத்து மூலமாக தருமாறு கேட்டபோதிலும் அவர்  அதனை நிராகரித்துவிட்டார். எனவே மேற்படி கருத்தரங்கை நடத்துவதற்கு கேகாலை தபாலக கேட்போர் கூடத்தை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.