கறுப்பு ஜூலை தினத்தில் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என கோரி யாழில் நேற்று (23) கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை 10 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமானது. நேற்று யாழ்ப்பபாணத்தில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டையில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். யுத்தம் முடிந்ததற்கு பின்னரும் யாழ்ப்பாண மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு கையெழுத்து வைக்க வந்த தாய் ஒருவர் இப்படிச் சொன்னார். நான் எனது 04 பிள்ளளைகளை யுத்தத்திற்கு பலி கொடுத்து விட்டு நிற்கின்றேன் என்றார். இது ஒரு உதாரணமே. வடக்கு கிழக்கு மக்களின் ஒட்டு மொத்த நிலையே இந்த தாயினது போன்றது தான்.
யாழில் "மீண்டும் ஒரு ஜீலைக் கலவரம் வேண்டாம்" கையெழுத்துப் போராட்டம்: (படங்கள்)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode