இன்று காலை கொழும்பு, கோட்டை புகையிரத நியைத்திற்கு முன்பாக சமவுரிமை இயக்கத்தினால் "மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாம்!" என்னும் கருப்பொருளுடன், இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான மக்கள் விழிப்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் இனவாதம் மதவாதத்திற்கு எதிராக தமது கண்டனங்களை அங்கு வைத்திருந்த பாரிய பதாகைகளில் தமது கையொப்பங்களை இட்டு பதிந்து சென்றனர். சமவுரிமை இயக்கத்தினால் "இனவாதத்திற்கு - மதவாதத்திற்கு "இல்லை" என்போம்!" துண்டுப்பிரசுமும் விநியோகிக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதத்திற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாம்!: சமவுரிமை இயக்கம் (படங்கள்)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode