25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டென்மார்க்கில் கொல்ஸ்ரோபுறோ நகரில் 14.12.2013, சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ், சிங்கள தோழர்கள் கலந்து கொண்டார்கள். இலங்கையில் இருந்து சம உரிமை இயக்கத்தின் பரப்புரையாளர் ரவீந்திரமுதலிகே, சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் ஜீட் சில்வா புள்ளே ஸ்கைப் இல் சிங்கள மொழியில் உரையாற்ற தோழர் பாரூக் தமிழில் மொழி பெயர்த்து வழங்கி கொண்டிருந்தார். சம உரிமை இயக்கத்தின் நோக்கம் அதன் செயற்பாட்டுத் திட்டம் பற்றிய விரிவான விளக்கம் இந்த உரையின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கு பற்றிய சிலரது கேள்விகளுக்கு தமிழ், சிங்கள மொழியில் பதிலளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பானது குறுகிய காலத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்டதால் ஏனைய நகர மக்களை இதில் இணைத்துக் கொள்ள முடியாது போய்விட்டது. இருப்பினும் சந்திப்பானது மிகவும் பயனுள்ளதாகவும் புதிய சிங்கள, தமிழ் தோழர்களையும் இணைந்து செயற்படும் வகையில் சிறப்பாக நடந்து நிறைவுற்றது.