விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28/05/2015 பிற்பகல் 3:30 மணிக்கு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ இருக்கின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சமவுரிமை இயக்கம் ஒழுங்கு செய்திருக்கிறது.
பல வருடங்களாக நூற்றுக்கணக்கான தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களை சேர்ந்த அரசியல் கைதிகள் நீதிமன்றத்திற்கு முன்னால் குற்றம் சாட்டப்படாமலும், சிலர் குற்றம்சாட்டுக்கள் இருந்த போதும் விசாரணை இன்றி வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவதாக உறுதி கூறி பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவும் பிரதமர் ரணிலும் இந்த கைதிகள் குறித்து எந்த செயற்பாடுகளுமற்று காணப்படுகின்றார். எனவே அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும், விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாகவும் நாளைய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.