இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மீது பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களாலும், அரசினாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனரீதியிலான வன்முறையினை கண்டித்து டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரிலும் அதனை அண்டிய நகர்களிலும் டென்மார்க் சம உரிமை அமைப்பினால் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
நடைபாதைகளிலும் வீடுகளிலும் இந்த துண்டுப்பிரசுரம் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையில் இன்னொரு அழிவு வேண்டாம் நாம் எல்லோரும் மனிதர்கள், எல்லோரும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்ற அமைப்பின் கருத்தினை ஏற்றுக் கொண்டு அனைவரும் வரவேற்பு அளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.