25
Tue, Jun

நாட்டில் பெண்கள் யுவதிகள், மாணவிகள் சிறுமிகள் என்போர் மீதான பாலியல் வக்கிர செயற்பாடுகளும் சித்திரவதைகளும் வன்புணர்வுக் கொலைகளும் ஏனைய ஒடுக்குமுறைகளும் சமூகக் கொடுமைகளாகத் தொடர்கின்றன. இவற்றில் ஒன்றாக அண்மைய கொடூரச் சம்பவமாக வடபுலத்தின் புங்குடுதீவு வித்தியாலய மாணவி சி.வித்தியா (18) மீதான வன்புணர்வுப்படுகொலை இடம் பெற்றிருக்கின்றது. இவ் ஈனச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கண்டணங்களும் எதிர்ப்புகளும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read more: %s

தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடரும் பேரினவாத  ஒடுக்குமுறையினை எதிர்த்து அரசியல் தீர்வை வற்புறுத்தி "மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுப்போம்" எனும் தொனிப் பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி எதிர்வரும் மேதினத்தை முன்னெடுக்க இருக்கிறது.

Read more: %s

சுன்னாகம் மின்நிலையத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மைய ஆண்டுகளாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து நன்னீர் மாசடைந்து வந்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்களும், பொதுஅமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், இதனை வெளிக்கொணர்ந்து வெகுஜன செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

Read more: %s

மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் செலுத்தவில்லை.

Read more: %s

மகிந்த சிந்தனை ஆட்சியின் கீழ் நாட்டு மக்கள் எதிர்நோக்கி வந்த மோசமான பொருளாதார நெருக்கடிகளும், ஜனநாயகவிரோத பாசிச குடும்ப சர்வாதிகாரமும், சட்ட ஆட்சி - நீதித்துறை மீதான நிறைவேற்று அதிகார அத்துமீறல்களும், ஊழல் முறைகேடுகளுடன் அதிகார துஸ்பிரயோக அடக்குமுறைகளும், குறிப்பாகத் தமிழ், முஸ்லீம், மலையகத் தழிழ்மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளும் அனைத்து மக்கள் மத்தியிலும் பலநிலை அதிருப்திகளையும், எதிர்ப்புகளையும் தோற்றுவித்தது.

Read more: %s

More Articles …

Subcategories