26
Wed, Jun

குமார் குணரட்னத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் பிரச்சினையில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read more: %s

கௌரவ நீதிபதி அவர்களே!

கேகாலை நகரில் பிறந்து வளர்ந்த என்னை விசா காலம் முடிந்தும் இங்கு வசித்த வெளிநாட்டவன் என்ற காரணத்தைக் காட்டி கைது செய்து வைத்துள்ளனர்.

எனது வீட்டின் முன்வாசலுக்கு வந்தால் என்னால் பொது மயானத்தைக் காணமுடியும். எனது தந்தை உட்பட எனது சொந்தங்கள் அடக்கம் செய்த, தகனம் செய்த மயானம் அதுவாகும். நான் வீட்டில் இருந்து கொழும்பு-கண்டி வீதிக்கு வந்தால் றோமன் கத்தோலிக்க மயானத்தைக் காண முடியும். அங்கு எனது தாயின் சொந்தங்கள் எனது தந்தைவழி பாட்டனார் ஆகியோர் அடக்கம் செய்யப்ட்டுள்ள புதைகுழிகள் இன்றும் இருக்கின்றன.

நான் கேகாலை நகரை நோக்கி கொழும்பு-கண்டி வீதியில் நடந்து செல்லும்போது நானும் எனது சகோதரனும் எனது தாய் மாமன்மார்கள் கல்வி பயின்ற சென் மேரிஸ் வித்தியாலயத்தையும், வலது பக்கம் எனது தாய் எனது சகோதரிகள், கல்வி கற்ற சென் யோசப் கல்லூரியைக் காணலாம்.

நான் பிறந்து வளர்ந்த சொந்த இடமான கேகாலை நகரில் வைத்து என்னை ஒரு வெளிநாட்டவரென கருதி, வதிவிட விசா இல்லை என்ற காரணத்தைக் காட்டி கைது செய்தனர்.

Read more: %s

கடந்த நவம்பர் 4ம் திகதி தோழர் குமார் குணரத்தினம் அவரது தாயாரின் வீட்டில் வைத்து கேகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் நவம்பர் 18 ம் திகதி வரை  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருத்தமை என்ற விடயத்தை முன்வைத்து அவரை நாடுகடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அது குறித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் இது விடயத்தில் மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றது. இந்தக் கடிதம் உங்கள் கைக்கு கிடைக்கும்போது மேற்படி நிலைமைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் கைதுசெய்யப்பட்ட கையோடு தோன்றிய பிரச்சினைகள் சம்பந்தமாகவும், இந்தப் பிரச்சினையின் வரலாறு சம்பந்தமாகவும் ஒரு விளக்கத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

Read more: %s

மைத்திரி- ரணில் அரசாங்கம், தாம் கடந்த தேர்தல் மூலம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் படிப்படியாக கைவிட்டு வருகிறது என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகின்றது.

அன்றைய அரசாங்கத்தினால், இலங்கை மக்களுக்கு அப்பட்டமாகவே மறுக்கப்பட்டுவந்த நாட்டின் ஜனநாயகத்தினை மீள நிலைநாட்டுவோம் என்பதே ராஜபக்ச ஆட்சி மீது இவர்கள் முன்வைத்த பிரதான கோசமாகும். ஆனால் அரசியலில் பாதிக்கப்பட்டோருக்கு, காணாமலாக்கப்பட்டோருக்கு, அரசியற்கைதிகளுக்கு இவர்களால் எந்த நீதியும் நியாயமும் இன்றுவரை வழங்கப்படவில்லை.

Read more: %s

இலங்கை பிரஜாவுரிமையினை மீள கோரியமைக்காக முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதனை கண்டித்தும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்யுமாறு கோரியும் நாளை சனி 06-02-2016 லண்டனில் உள்ள வெம்பிளி நகர சதுக்கத்தில் பிற்பகல் 2 மணி முதல் பதாகையில் கையெழுத்துப் போராட்டமும் துண்டுப்பிரசுர பிரச்சாரமும் நடைபெறவுள்ளது.

Read more: %s

More Articles …