26
Wed, Jun

கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்தினம் நாளை(02) அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் ஒருபோதும் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார் என்று என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

குமார் குணரத்தினம் ஸ்ரீலங்கா பிரஜாவுரிமையைப் பெற வேண்டுமாயின் அவுஸ்திரேலியக் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்த உள்விவகார அமைச்சர் எஸ்.பி நாவின்ன, அவர் அதற்கான விண்ணப்பத்தை சமர்பித்தால் பரிசீலிக்க முடியும் என்றும் கூறினார்.

Read more: %s

கியூபா புரட்சியில் தீர்மானம் மிக்க பாத்திரத்தை பூர்த்தி செய்த தலைவரான தோழர் பிடெல் கஸ்ட்ரோ தனது பத்து தசாப்தகால வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு எம்மை விட்டும் பிரிந்து சென்றுவிட்டார். தோழர் பிடெலின் வாழ்க்கையும், அவரது வாழ்க்கை முறையும் அவரது அரசியல் நடவடிக்கைகளும் எமக்கும், எமது சந்ததியினருக்கும் கற்க வேண்டிய பல பாடங்களை விட்டுச் சென்றுள்ளது.

Read more: %s

குமார் குணரத்தினத்தை நாடு கடத்த மைத்திரி - ரணில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிராக கடந்த 21ம் திகதி காலியில் மௌனப் போராட்டத்தை முன்னிலை சோசலிச கட்சியினர் ஆரம்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 22ம் திகதி நிட்டம்புவ நகரத்தில் இந்த மௌனப் போராட்டம் இடம்பெற்றது. நேற்று (23/11/2016) பொல்லநறுவ நகரில் குமாரின் விடுதலை மற்றும் குடியுரிமையினை உறுதி செய்யும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றது. 

Read more: %s

தனது பிரஜாவுரிமையினை மீளக்கோரிய முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தை, உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்த  ஜனநாயகத்திற்கு விரோதமாக சிறைக்குள் தள்ளியுள்ளது மைத்திரி - ரணில் கூட்டாட்சி. குமாரை விடுதலை செய்து அவரின் பிரஜாவுரிமையினை மீள வழங்குமாறு கோரி சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், இளம் ஊடகவியலாளர்கள், இடதுசாரிய கட்சிகள் என பல்வேறு அமைப்புக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை கடந்த ஒரு வருடமாக நடாத்திக் கொண்டு இருக்கின்றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது, மைத்திரி - ரணில் கூட்டாட்சி குமாரை நாடு கடத்த முடிவெடுத்துள்ளது.

Read more: %s

நல்லாட்சி என்ற பெயரில் மைத்திரி - ரணில் அரசு பதவி ஏற்ற காலம் முதல் ஏகாதிபத்தியங்கள் மற்றும் பல்தேசிய கம்பனிகளின் கொள்ளைக்காக பல திட்டங்களை திரை மறைவில் நடைமுறைப்படுத்தி வந்தது. 2017ம் ஆண்டிற்க்கான பஜட்டானது; இந்த திரை மறைவு நிலையில் இருந்த நல்லாட்சி என்பது கொள்ளை ஆட்சி என்பதனையும், மக்களுக்கு குழிபறித்து சகலதையும் பறித்தெடுத்து நடுவீதிக்கு கொண்டு வந்து விடுவதற்க்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்திருக்கின்றது என்பதனை  தெளிவாக்கியுள்ளது.

Read more: %s

More Articles …