"சைட்டத்தை தடை செய்” இப்பொழுது நாடு முழுவதும் கேட்கக்கூடியதாகவும், காணக்கூடியதாகவும் உள்ள கதையாகும். மாலம்பே சைட்டம் பட்டக்கடையை தடை செய்யக்கோரி மாணவர்கள் நீண்ட நாட்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சைட்டம் பட்டக்கடைக்கு ஏன் நீங்களும், நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?
இந்த நிறுவனத்தில் மருத்துவ பட்டம் உட்பட இன்னும் ஏராளமான பட்டங்கள் பணத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய தொகைக்கு அல்ல, 120 இலட்சத்திற்கு மருத்துவ பட்டம் விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் மிக தெளிவாக தெரிகிறது இந்த நாட்டின் விவசாயிகளின், ஆடைத்தொழிற்சாலை தொழிலார்களின், அரச சேவையாளர்களின், தனியார்துறை சேவையாளர்களின், தோட்டத்தொழிலார்களின், மீனவர்களின் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு இதற்கு செல்ல முடியாது என்பதே. மொத்த சனத்தொகையில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தினருக்கே இதற்கு செல்ல முடியும்.