பிரியமான சகோதர, சகோதரிகளே...
''துயரின் விளிம்பில் - இலங்கையின் ஜனநாயகம் தொடர்பான அனுபவங்கள் மூன்று" என்ற தொனிப்பொருளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் வீடியோ விவரண அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி (01.09.2016) காலை 10.00 மணிக்கு மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் வெளியிடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இது தொடர்பான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளதோடு, உங்களின் பங்குபற்றுதலை சகோதரத்துவத்துடன் எதிர்பார்க்கிறோம்.
முன்னிலை சோசலிசக் கட்சி.