முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னவுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட திமுது ஆட்டிகல மெதவலவிலுள்ள கட்சி அலுவலகத்திற்கு திரும்பிவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மெதவலவிலுள்ள தலைமைக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் இவர் இறக்கிவிடப்பட்டதாகவும் முச்சக்கரவண்டியில் செல்வதற்கு இவருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தர் வர்ண ராஜபக்ஷ கூறினார்.
--tamilmirror.ik