25
Tue, Jun

தோழமை அமைப்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனநாயகத்துக்கான ஆர்பாட்டக்காரர்களின் முதலாவது கருத்தரங்கு  இன்று (30.06.2016)  கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  புதிய ஜனநாயக மார்க்சிய லெனிய கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி உட்பட பல இடதுசாரி கட்சிகளுடன் அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் ,ஆசிரிய சங்கங்கள் உட்பட கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனநாயகத்தை உறுதி செய்யப்போவதாக வாக்குறுதி அளித்து ஆட்சியை கைப்பற்றி கொண்ட மைத்திரி - ரணில் அரசு கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக முன்னைய அரசை விடவும் ஜனநாயகத்தை மறுத்து செயல்பட்டுக் கொண்டிருப்பதுடன்,  மக்களை அடக்கி ஒடுக்க பல புதிய சட்டங்களை கொண்டுவர திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்க்காக அமைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டகாரர்கள் தமது முதற்கட்டமாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமது பிரச்சாரத்தினை தொடங்கி உள்ளனர்.

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
அடக்குமுறைச் சட்டங்களை சுருட்டிக்கொள்!!
குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக்கொள்!!!

இக் கருத்தரங்கில் முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சமீர கொஸ்வத்த, புதிய ஜனநாயக மார்க்சிய லெனிய கட்சியின் செயலாளர் செந்தில் வேல் உட்பட பலர் உரையாற்றினர்.