துர்நாற்றம் வீசும் குப்பை மேட்டை அகற்றக் கோரிய மக்கள் மீது நல்லாட்சி அரசு வன்முறைத் தாக்குதல்!
கொலன்னாவ - மீதொட்டமுல்ல பகுதியில், குப்பைக் கழிவுகளைக் கொட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி போராடிய மக்கள் மீது நல்லாட்சி அரசு தனது அரச படைகளை ஏவி விட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. இக் குப்பை மேடுகள் அருகில் உள்ள வீடுகளில் சரிந்து விழுவதாகவும், அப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் மற்றும் சுகாதார சீர்கேடுகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.