முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!
தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.
தமிழ்மொழி பேசும் மக்களை ஒடுக்கிவரும் பேரினவாத அரசின் திட்டமிட்ட இன ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியே, முஸ்லீம் தலைமைகள் இன்று முன்னெடுக்கும் இன-மத வாதமாகும். தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லீம் இன-மத வாதத்துக்கு அரச அதிகாரங்களைக் கொடுத்திருப்பதன் மூலம், தமிழ் மக்களை தொடர்ந்து ஒடுக்க முடிகின்றது.