இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 11
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 11
டிராட்ஸ்கியை “அவர் தன் இயல்பில் ஒரு சதிகாரர்” என்றார் லெனின்
ஸ்டாலின் காலத்தில் முதலாளித்துவ மீட்சியை சதிகள் மூலமாக டிராட்ஸ்கி நடத்த முயன்றான். இந்த முயற்சியில் டிராட்ஸ்கி தன்னை எதிர்க் குழுவின் “கதாநாயகனாக” காட்டிய போது, ஸ்டாலின் அது குறித்து “அவர் ஒரு கதாநாயகன் என்பதை விட ஒரு நடிகரைத்தான் பிரதிபலிக்கிறார், ஒரு நடிகரை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு கதாநாயகரோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது” எனறார். இதைப் போன்றே இரண்டாம் அகில காலத்தில் பெர்ன்டைன் காவுஸ்கி ஒரு “காதநாயகராக” மார்க்ஸ்சை திரிந்தது மட்டுமின்றி “வெல்ல முடியாத அசகாய சூரராக” ஆட்டம் போட்டதை எடுத்துக் காட்டினர். டிராட்ஸ்கியோ ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒழித்து, அதனிடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லாத முதலாளித்துவ ஜனநாயகத்தை மாற்றீடாக்கிய, ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரத்தையே நிறுவ விரும்பினர். இதற்காக சோவியத்யூனியனின் பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்து செயல்பட்ட அனைத்து எதிர்ப்பு குழுக்களுடன், ஒருங்கிணைந்த ஒரு கூட்டுச் சதிகளை உருவாக்கினான். இதை சிலர் அப்பாவிகள் மாதிரி மறுத்தபடி, ஸ்டாலினைத் தூற்றுகின்றனர். டிராட்ஸ்கிகளின் 1936-1937 வழக்கு தொடர்பாக கொப்பச்சேவ் 1988 இல் கூறும் போது, “இவ் வழக்குக்கு முந்திய விசாரனை சோசலிச சட்ட வரம்புகளை முற்றிலும் மீறிய முறையில் உண்மைகளைத் திரித்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் துன்புறுத்தி சட்டபூர்வமற்ற முறையில் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்தும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது என்பது நிறுவப்பட்டுள்ளது” என்றான். இப்படிச் சொன்ன கோர்ப்பச்சேவ் யாருடன் நின்று, எதைச் செய்தான் என்பது உலகறிந்தது.