03
Wed, Jul

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ராஜீவ் காந்திக்கு அடித்தவனையும் வெலிக்கடையில் தான் சிறை வைத்திருந்தனர் அவனோ படுப்பதற்கு பஞ்சு மெத்தை உண்பதற்கு புரியாணி என சகல சௌவ்பாக்கியங்களுடனும்  சிறை வாசகத்தை அனுபவித்தான். ஆனால் இன்று தமிழ் மக்களை அழித்த யுத்த நாயகன் சரத் பென்சேகா வெலிக்கடையில் வரிசையில் தடடில் வாங்கி சாப்பிடுவதும்  வெறும் தரையில் படுத்துறங்குகின்றார் என்பது ம்  இலங்கை மக்களைப் பொறுத்தவரை முக்கிய செய்தி தான்.

< 1983 பின்னர் ஆயிரக் கணக்காண தமிழ் இளைஞர்களை எந்தக் காரணம் இன்றி சந்தேகத்தின் பெயரில் கைது செய்து பலத்த சித்திரவதைகளை அனுபவித்து இன்னமும் சிறைச் சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். .இவர்களைப் பற்றி எந்த நாளேடும் செய்தி வெளியிடுவதில்லை.

 

எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தன.  ஏன் யுத்தம் முடிவுற்றபின் கூட சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை மகசீன் சிறையிலும் கழுத்துறை சிறையிலும் வாடும் பல நூறு தமிழ் இளைஞர்க விசாரணையின்றி இன்று வரை தமிழர்கள் என்னும் காரணத்திற்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தமிழ் மக்களையும், சிங்கள் மக்களையும் கொன்று குவித்தவனுக்காக இந்த ஊடகங்கள் கவலையில் உள்ளன.  . இதற்குள் சரத் பொன்சேகாவுக்காக நூறு பிக்குகள் சிறைக்கு செல்ல தயாராம்.  இதுவும் ஒரு அரசியல் பித்தலாட்மே. தமிழ் இளைஞர்களைப் பற்றியோ அல்லது வறுமையில் வாடும் இலங்கை மக்கள் பற்றியோ எந்த விதத்திலும் அலட்டிக் கொள்ளது இருக்கும், இந்த புத்த பிக்குகள் பொன்சேகாவுக்காக தாம் சிறைக்கு செல்ல தயாராம்.

சிங்கள இனத்தினையும்,  பௌத்த மதத்தினையும் பாதுகாக்க தமிழனை கொன்றொழித்த தேசபக்தனல்லவா பொன்சேகா!!