சிறைச்சாலையில்அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான
இராணுவ அதிகாரிகள் சிலர் பெண்களை விசாரிப்பதாக கூறி, அவர்களை நிர்வாணப்படுத்தி, மனிதாபிமானற்ற வகையில், சித்தரவதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். தறபோது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான பெண்ணொருவர், தனது சட்டத்தரணியிடம் இது பற்றி தெரிவித்தை அடுத்து, சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அதனை கொண்டு வந்தனர். இதனையடுத்து, மேற்படி சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு நீதவான் இவோன் பெர்ணான்டோ உத்தரவிட்டார்.
-உலக தமிழ் செய்திகள்