நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனவின் மரண பயம் கொண்ட நடவடிக்ககைகளாலேயே மன்னிப்பு கேட்டேன் எனக் கூறியுள்ளார் விஜிததேரர்.
இந்நிலையில் பொறுத்தது போதும் தக்க நடவடிக்கை வேண்டுமென…. அசாத்சாலியும், பொதுபல சேனாவின் நடவடிக்கையை மேலிடம் கொண்டு செல்லப் போகின்றேன் என….ரிசாத் பதியூனும்பொலிஸ் நடவடிக்கையை எதிர்பார்க்கின்றேன்!... நீதி அமைச்சரும் மகிந்த சரணம் கச்சாமி போடுகின்றார்கள்.
விஜிததேரர் விவகாரம் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என பொலிஸ் தரப்பு கூறுகின்றது. இந்த லட்சணத்தில் பொலிஸ் தரப்பிடம் நீதிதேவதையின் வடிவிலாகி.. நீதிப்பிச்சை கேட்கும் உலகின் உத்தம அமைசசர் எங்கள் நீதியமைச்சர் தான். உங்களுக்கு "பொலிஸ் கடாட்சம" கிடைக்கக் கடவதாக…!!