நேற்றைய தினம் கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற, கல்வியை தனியார் மயமாக்கி இலவசக் கல்வியை எதிர்காலத்தில் இல்லாதாக்க முனையும் அரசிற்கு எதிரான போராட்டங்களிற்கு ஆதரவாகவும், நவதாராளமயமாக்கலிற்கு மாணவர், மக்கள் இணைந்து தொடர்ச்சியான எதிர்ப்பினையும், போராட்டங்களையும் முன்னெடுக்குமுகமாகவும் மாணர்கள், இடதுசாரிகள் இணைந்து நிகழ்த்திய கூட்டம் நிகழ்ந்துள்ளது.
இதில் இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் பங்கு கொண்டதுடன், குறிப்பாக தமிழ் இடதுசாரி அமைப்புக்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடப்படல் வேண்டும்.